தமிழுலகம் போற்றும் கண்ணகி ஒரு எடுத்துக்காட்டான பெண்மணியா? ஆணாதிக்க பெண்ணடிமை சமூகத்தோட எடுத்துக்காட்டான பெண்மணியா தான் கண்ணகிங்குற கதாபாத்திரம் இருந்துச்சே ஒழிய பெண்களுக்கு முன்மாதிரியா இருந்த எடுத்துக்காட்டான பெண்மணியா இருக்கவேயில்ல. பெண்ணடிமைகளின் பிரதிநிதியான கண்ணகிக்கு 1967லேயே சிலை வெச்ச தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் அறிவில் சிறந்த ஔவைக்கு 2017ல தான் சிலை வெச்சுருக்காங்கன்னா அதுக்கு என்னங்க அர்த்தம். பெரியார் வழிவந்த ஆட்சியாளர்கள் பெரியாரோட பெண் விடுதலைக் கொள்கைகளை சரியா கடைபிடிக்காத ஆணாதிக்கவாதிகளா தான் இருந்துருக்காங்கன்னு தான் அர்த்தம். கற்பு என்பது பாலியல் ஒழுக்கம்னா அது உறவுல உள்ள ரெண்டு நபர்களுக்கும் பொதுவானதாக, பரஸ்பரமானதாகத் தான் இருக்கமுடியும். கோவலன் மாதவி கூட இருந்தப்ப எப்புடிங்க கண்ணகிய கற்புக்கரசின்னு சொல்லமுடியும் ஏன்னா அப்பதான் கோவலனுக்கும், கண்ணகிக்கும் எந்த உறவுமே இல்லையே. தமிழ்குலத் தலைவர்கள் பரத்தையர்சேரியில பொழுதைக் கழித்த போது எப்புடிங்க தமிழ்குலப் பெண்கள கற்புக்கரசிகள்னு சொல்லமுடியும். இதுல ஏதாவது தர்க்கப்பொருத்தம் இருக்கா?.
கண்ணகி ஒரு எடுத்துக்காட்டான பெண்மணியா இருந்துருந்தா என்ன செஞ்சிருப்பாங்க,
கோவலன்கிட்ட நறுக்குன்னு நாலுவார்த்தை கேட்டுருப்பாங்கல்ல. ஏண்டா கோவலா, இத்தனை வருசம்
என்னோட குடும்பம் நடுத்துன பெறகும் கூட ஒன்னால மாதவியோட இருக்கமுடியுதுன்னா, நீ என்னை
உண்மையா நேசிக்கலைனு தான அர்த்தம். ஒன் மனசுல உண்மையிலேயே நான் இருந்துருந்தேன்னா,
ஒன்னால எப்புடிடா மாதவி கூட சந்தோசமா வாழ்க்கை நடத்தமுடிஞ்சிருக்கும். ஒனக்கு மனசும்
இல்ல, மனசாட்சியும் இல்ல. நீ கலாரசிகனா இருந்தா அதுக்கு கலைய ரசிச்சா மட்டும் பத்தாதா?
கலைமகளோட படுத்து குடும்பம் வேற நடத்தனுமா? ஒன்ன மாதிரியே நானும் ஒரு மாதவனைத் தேடிப்
போறதுக்கு எனக்கு எத்தனை நிமிசம் ஆகப்போகுது, அப்புடி நானும் ஒரு மாதவன் கிட்ட கொஞ்ச
காலம் குடும்பம் நடத்திட்ட வந்தா நீ என்ன ஏத்துக்குவியா? நான் சுயமரியாதை உள்ளவ, இனிமே எனக்கும், ஒனக்கும்
ஒத்தேவராது, அதுனால நீ ஒன் வழியப்பாத்துப்போயுக்கோடா, நான் என் வழியப் பாத்துக்குறேன்னு
சொல்லியிருப்பாங்க. சிலம்பையும் கொடுத்துருக்க மாட்டாங்க. அதுனால கோவலனும் செத்துப்போயிருந்துக்க
மாட்டாரு. மதுரையும் எரிஞ்சுருக்காது. அது சரி தன்னோட சுய இழப்புக்காக, அது அநீதியாவே
இருந்தா கூட அதுக்காக ஒரு மாநகரத்தையே அழிக்கிறது அநியாயம் இல்லையா, அப்படிப்பட்ட ஒரு
சுயநலத்தை நாம ஆதரிக்கலாமா?. ஒரு பொண்ணு எப்புடி இருக்கக்கூடாது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டான
பெண்மணியா, எதிர்மறையான ஒரு ஆசானா தான் அந்த கண்ணகி அம்மாளை நம்மாள பார்க்கமுடியுது.
அதுனால கற்பு என்பது பாலியல் ஒழுக்கம், உடலுறவு ஒழுக்கம் என்ற பேருல பெண்களை அடிமைப்படுத்துறதுக்கு
ரொம்ப வசதியான ஒரு கருவியா தான் பயன்படுத்தப்பட்டுருக்கு. பெண் விடுதலை அடைஞ்சிருக்க
வேண்டிய இந்த காலத்துல ஆணாதிக்க அடிமைகளா இருந்த அறிவில்லாத முட்டாள்களை, கற்புக்கரசிகளை
கொண்டாடுவது கால வழு. பெண் தனிச்சொத்தாக்கப்படுவதையும், தனிச்சொத்து கற்பு என்ற பேருல
பெண்ணுக்கு விலங்கு போட்டு அடிமைப்படுத்துவதையும் நாம அடியோட ஒழிச்சுக்கட்டனும்.
(தொடரும்)