Thursday, November 28, 2024

பணம் பேசுறேன் (160):

 

அஞ்சறிவு”ள்ள விலங்குகள் எல்லாம் தங்களோட சொந்தத்துக்குள்ள ஜோடி சேராம வெளில தான் இணையைத் தேடுதுங்கன்னு சொல்லிருந்தேன் இல்லையா. உதாரணத்துக்கு சொல்லனும்னா பெரும்பாலான ஆண் விலங்குகள் நெருங்கிய சொந்தக்காரங்களோட இனச்சேர்க்கை, இனப்பெருக்கம் செய்யுறதைத் தவிர்க்குறதுக்காகவும், ஒரு இணையைத் தேடிக் கண்டுபிடிக்குறதுக்காகவும் பயணம் செய்யுறாங்க. பெரும்பாலான விலங்குகள் வயது வந்தவுடனேயே தன்னோட தாய்க் குழுவை விட்டு பிரிஞ்சு போயிடுறாங்க, வயது வந்த விலங்குகள் பொறந்த இடத்தை விட்டு விலகி ரொம்ப தூரம் தாண்டிப்போய் தான் வசிக்குறதுக்கான எல்லையை உருவாக்குறாங்க. அந்த மாதிரி பிரிஞ்சு போகும் போது பெண் விலங்குகளை விட ஆண் விலங்குகள் தாய்க் குழுவிலிருந்து ரொம்ப தூரம் விலகிப்போயிடுறாங்க. புலி, சிங்கம், ஓநாய் போன்ற விலங்குகள்ல வயது வந்த ஆண் விலங்குகள் அவங்களோட அம்மாவை விட்டுப் பிரிஞ்சுடுறாங்க, தன்னோட தாய்க் குழுவை விட்டு பிரிஞ்சிப் போயிடுறாங்க. அவங்க பிரிஞ்சு போகலைனா அம்மாவோ, அப்பாவோ வெரட்டி அடுச்சிடும். நெருங்கிய உறவினர்களோட வயது வந்த ஆண் விலங்குகள் செய்யுறத தவிர்க்குறதுக்காகத்தான் இந்த ஏற்பாடு இயற்கையாவே உருவாயிருக்கு. ஆனா சிம்பன்சி குரங்கள்ல பெண் சிம்பன்சி குரங்குகள் தான் வயதுவந்தவுடனே  தாய்க் குழுவை விட்டுப் பிரியுறாங்க. இப்படித்தான் பல விலங்குகளோட மரபணுக்களின் பன்மயத்தன்மை பாதுகாக்கப்படுது.

 விலங்குகள்ல தாய்-சேய் பேணல் குறைந்த காலம் தான் நீடிக்குது. அதிகபட்சமா குட்டிகள் பருவ வயது அடையுற வரைக்கும் தான் குட்டிகளை தாய் விலங்குகள் பேணிப் பாதுகாக்கும். ஆனால் மனிதர்கள்ல தாய்ச் சேய் பேணல் நீண்ட காலம் நீடிக்குது, விலங்குகளோட ஒப்பிடும் போது மனித குழந்தைகள் தாமதமா பதின்ம வயதுல தான் பருவம் அடையுறதும் இதுக்கு முக்கியக் காரணமா இருக்கு. மனுசன் தனக்குத் தேவையானத தானே உற்பத்தி செய்யுறதன் மூலமா தான் மத்த விலங்குகளிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்டுருக்கான், அதன் மூலமா சமூக மனுசனா பரிணமிச்சிருக்கான். அதற்கடுத்தபடியா தாய்-சேய் பேணல் மனிதனை மத்த விலங்குகளிடமிருந்து வேறுபடுத்துது. மனிதர்கள்ல தாய்-சேய் உறவு வாழ்நாள் முழுசுக்கும் நீடிக்குது. வயதான பெற்றோர்களை பாதுகாப்பதன் மூலமா மனுசங்க விலங்குகளிடமிருந்து முற்றிலுமாக வேறுபடுறாங்க. ஏன்னா விலங்குகள்ல வயதான பெற்றோர்களை மகனோ, மகளோ பாத்துக்குறது இயல்பு கெடையாது. அதனால வயதான பெற்றோர்களைப் பாத்துக்காதவங்க மனுசங்களே கெடையாது. மனிதர்கள்ல தான் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவும் அன்பும், அரவணைப்பும் வாழ்நாள் முழுக்க நீடிக்குது, போற்றப்படுது. அது மனுசங்களோட கலாச்சாரத்தில் பிரிக்கமுடியாதபடி முக்கியப்பங்கு வகிக்குது. உலகளவுல மனித சமூகங்கள்ல பதின்ம வயதை அடையுறவரைக்கும் பிள்ளைகள பெற்றோர்கள் தான் பாத்துக்குறாங்க. இருந்தாலும் பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இருக்கும் உறவுகள்லயும், அந்த உறவுகள் சார்ந்த பழக்கவழக்கங்கள்லயும் நாட்டுக்கு நாடு வேறுபாடுகள் காணப்படுது. அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள்ல 18 வயது ஆனவுடனே பிள்ளைகள் பெற்றோரோட அனுமதியில்லாமலே வீட்டை விட்டு வெளில போய் தன்னிச்சையா வாழுறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு.  18 வயசுக்கு மேல பிள்ளைகள் சுயசார்பா வாழனும்னு தான் மேற்கத்திய நாடுகள்ல எதிர்பார்க்கப்படுது. 20 வயசுக்கு மேல இருக்குற பிள்ளைகள் பெத்தவங்களோட ஒரே வீட்டுல வசிக்குறதும் வழக்கம் கெடையாது. ஆனா மத்த நாடுகள்ல குறிப்பா கிழக்காசிய நாடுகள்ல பெத்தவங்களோட ஆண் பிள்ளைகள் ஒரே வீட்டுல வசிக்குறது தான் வழக்கமா இருந்துருக்கு.

(தொடரும்)

 

No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...