வெவ்வேறு விதமான உத்தரவாதங்கள்:
யாக்ஞவல்கியஸ்மிருதியின்
(II-53) படி கடன் கொடுக்கும்போது கடனாளியை கொண்டுவந்து நிறுத்தவும், நம்பகத்தன்மைக்கும்,
கடன் அடைக்காதபட்சத்தில் கடனை அடைப்பதற்கும் உத்தரவாதம் கோரப்படுகிறது. முதல் இருவகை
உத்தரவாதங்களில் கடன் அடைக்கப்படாமல் இருந்தால் உத்தரவாதம் அளித்தவர் கடனை அடைக்கவேண்டும்.
மூன்றாவது வகை உத்தரவாதத்தில் உத்தரவாதம் அளித்தவரும், அவரது வாரிசுகளும் கடனை அடைக்கவேண்டும்.
மேலே
கூறப்பட்டுள்ள வழிமுறை யாக்ஞவல்கியஸ்மிருதியில் உள்ள மூன்றுவகையான உத்தரவாதங்களை குறிப்பிடுகிறது.
மிதாக்ஷரா மூன்றுவகையான உத்தரவாதங்களை பின்வருமாறு வரையறுத்துள்ளார்.
1.
கடன் கொடுத்தவரின் இருப்புநிலைக்கு உத்தரவாதம் (பிரதர்சனா) என்பது தேவைப்படும்போது
நான் அவரை கொண்டுவந்து நிறுத்துவேன் என்ற பொருளில் அளிக்கப்படும் உத்தரவாதம்.
2.
நம்பிக்கைக்கான உத்தரவாதம் (பிரத்வனா அல்லது விஷ்வாசா) என்பது கடனைக் கொடுங்கள் அவர்
உங்களை ஏமாற்றமாட்டார் என்ற பொருளில் அளிக்கப்படும் உத்தரவாதம்.
3.
அடைப்பதற்கான உத்தரவாதம் (தனா) என்பது ஒருவேளை அவர் கடனை அடைக்கவில்லையென்றால் அதை
நான் அடைப்பேன் என்ற பொருளில் அளிக்கப்படும் உத்தரவாதம்.
யாக்ஞவல்கியஸ்மிருதியில்
கூறப்படும் மூன்று வகையான உத்தரவாதங்களையே நாரதரும், பிரஹஸ்பதியும் மேற்கோள்காட்டியுள்ளனர்.
உறுதிமொழியை எடுப்பதற்கான உத்தரவாதம் பிணையத்தை அளிப்பதற்கான உத்தரவாதம் போன்ற பிறவகையான
உத்தரவாதங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். ஆனபோதிலும் அவை அடிப்படையில் யாக்ஞவல்கியஸ்மிருதியில்
கூறப்படும் மூன்று வகையான உத்தரவாதங்களின் கீழே தான் வருகின்றன. தேவைப்படும்போது கடனாளி
வராமலிருக்கும்போதோ அல்லது கடனாளி உரியநேரத்திற்குள் கடனை அடைக்காதபோதோ அல்லது உத்தரவாதம்
அளித்தவரை கடனை அடைக்குமாறு சொல்லும்போதோ இந்த மூன்று சூழ்நிலைகளிலும் உத்தரவாதம் அளித்தவரே அவற்றை நிறைவேற்றும் கடமைக்கு
பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார். கடனாளியைக் கொண்டுவருவதற்கான உத்தரவாதத்திலும், நம்பிக்கைக்கான
உத்தரவாதத்திலும் அப்போது கொடுக்கவேண்டிய கடன் தொகைக்கு உத்தரவாதம் அளித்தவர் கடமைப்பட்டுள்ளார்.
கடனை அடைப்பதற்கான (தனா) உத்தரவாதத்தில் அவர் உத்தரவாதம் அளித்த உண்மையான கடன் தொகையை
அளிக்க கடமைப்பட்டுள்ளார். நாரதாவும், பிரஹஸ்பதியும் இதே போன்ற விதியைப் பரிந்துரைத்துள்ளனர்.
சில சூழ்நிலைகளில் கடப்பாட்டிலிருந்து
விதிவிலக்கு:
மேற்கூறப்பட்ட
விதிகளை அளித்த காத்யயனா கடனாளியைக் கொண்டு வந்து நிறுத்துவதிலிருந்து ஒரு முக்கியமான
விதிவிலக்குக்கான வழியையும் அளித்துள்ளார்.
கடனாளியை
கொண்டுவந்து நிறுத்தவேண்டியது கடவுளின் செயலாகவோ அல்லது அரசரின் செயலாகவோ இல்லாதபோது,
கடன் கொடுத்தவரின் இருப்புநிலைக்கு
ஒப்புக்கொண்ட நேரத்தில் இடத்தில் உத்தரவாதம் அளித்தவர் கடனாளியை கொண்டுவந்து நிறுத்தமுடியாதபோது,
அவர் (உத்தரவாதம் அளித்தவர்) கடன் கொடுத்தவருக்கு
நிலுவையிலுள்ள கடன் தொகையை கட்டவேண்டும்.
கடவுளின் செயலால் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ, இறப்பு ஏற்பட்டிருந்தாலோ அல்லது அரசரின் செயலால் அதாவது அரசரின் ஆணையின் படி அவர் சேவையில் ஈடுபட்டிருந்ததால் உத்தரவாதம் அளித்தவரால் கடனாளியை கொண்டு வந்து நிறுத்தமுடியாதபோதோ இந்த விதியின்படி கடன் கொடுத்தவரின் இருப்புநிலைக்கு உத்தரவாதம் அளித்தவருக்கு கடன் தொகையை அடைப்பஅதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும்.
(தொடரும்)