Friday, February 28, 2025

பணம் பேசுறேன் (205):


சாதித் திமிறு, ஆணவம், சாதிப் பெருமை, சாதிய வன்மம், சாதிய அடக்குமுறை, சாதிய அடிபணிதல், உடலுழைப்பை மட்டமாகப் பாக்குற உயர்சாதி மனப்பான்மை, நாங்க தான் ஒசத்தி, நாங்க தான் பிறவி அறிவாளிகள், நாங்க வெச்சது தான் சட்டம், நாங்க எல்லாம் ஆண்ட பரம்பரை, நீங்கள்லாம் எங்களுக்குக் கீழ தான். எங்களுக்கு பண்ணையடிமைகளா தான் நீங்க வாழனும் என்கிற உயர்சாதி மனநிலை, சாதிய உயர்வு மனப்பான்மை, சாதிய தாழ்வு மனப்பான்மை, இவை எல்லாமே சாதிய உணர்வுநிலையின் கூறுகள் தான். இன்னைக்கு இருக்குற சாதிய முதலாளித்துவத்துலயும் ஒருத்தரோட வர்க்க உணர்வுநிலையானது அவரோட சாதியாலயும், அவரோட சொத்துநிலையாலயும், வேலைநிலையாலயும் தீர்மானிக்கப்படுது. சரி சாதிய முதலாளிகளோட உணர்வுநிலை எப்படிப்பட்டதா இருக்கு. உயர்சாதி முதலாளிகள் என்ன சொல்லுறாங்களோ அதை வெச்சு அவங்கள எடை போடமுடியாதுங்க. ஏன்னா முதலாளிகள் எல்லாருக்குமே ரெட்டை நாக்கு தான், அடி நாக்குல விசம், நுனி நாக்குல தேனா சொட்டும், இல்லாட்டி அவுங்களால பிஸினஸே பண்ணமுடியாதே. இப்புடி இருக்கேல உயர்சாதி முதலாளிகளை பத்தி கேக்கவா வேணும். அவங்க என்ன நெனைக்கிறாங்க, அவங்க மனசுல என்ன தான் இருக்குண்ணு கண்டுபிடிக்குற மனக்கண்ணாடி என்கிட்ட இல்லைங்கோ, ஆனா அவங்களோட செயல்பாடுகளை வெச்சே அவங்களோட எண்ணங்களையும், நோக்கங்களையும் கண்டுபிடிச்சுடுவேன். அப்புடிப் பாத்தா உயர்சாதி முதலாளிகளோட உணர்வு நிலை எப்புடிப்பட்டதா இருக்கு தெரியுமா, எப்புடியாவது சாதியை கட்டிக் காப்பாத்தனும் ஓய், சாதி தான் நம்ம லாபத்துக்கு கேரண்டி. ஆனா அதுக்கு அறிவியல்ல தடையா இருக்கு. இருக்கட்டுமே அதுனால என்ன, அறிவியலையும் புராணக் குப்பைகளா மாத்திடுவோமோல்லியோ. இதோ பாருங்கோ நம்ம உயர்ச்சாதியினர் மட்டும் தான் ஆட்சிப் பொறுப்புல இருக்கனும், உயர் பதவிகளை வகிக்கனும், நிர்வாகப் பதவிகள் எல்லாத்தையுமே தெறமைக்கு காப்புரிமை வாங்குன நம்ம அவா தான் வகிக்கனும், எக்காரணம் கொண்டும் அதை இடைச்சாதி பயல்கள்கிட்டயோ, கீழ்ச்சாதி பயல்கள்கிட்டயோ விட்டுடப்புடாது. ஆனா முடியலையேடிம்மா சமூக நீதி, சமூக நீதின்னு கூவுறாளே, சரி போனாப் போகுதுன்னு நாய்க்கு எலும்புத்துண்டை போடுற மாதிரி அடையாளத்துக்கு ஒரு சில பதவிகளை வேணா விட்டுக்கொடுத்துடலாம். ஆனா தலைமை நம்மகிட்ட தான் ஓய் இருக்கனும். அய்யோ இந்த இட ஒதுக்கீடு நம்மவாளை இப்புடி படுத்தறதே, பெரிய எழவால்ல இருக்கு, பிராணனை போறதே, அதை எப்புடியாவது ஒழிச்சுக்கட்டுனா தான் நம்மவா நிம்மதியா மூச்சுவிடமுடியும், அப்போத்தான் நம்மவாளோட பிறவித் தெறமைக்கும் கேரண்டி கெடைக்கும். இல்லைனா எல்லாமே கையை விட்டுப் போயிடுமேடிம்மா. அதுக்குப் போய் ஏன்னா பயப்படறேள், அதான் நம்மவா இப்ப காங்கிரஸை கைவிட்டுட்டாளே, உயர்சாதி முதலாளிகளோட பினாமியா புரோக்கரேஜ் பண்ணுற ஹிந்து பொலிடிக்கல் கஃபேய இப்போ பாஜககிட்ட இல்ல விட்டுருக்கா. எலெக்ட்டோரல் பாண்ட்ஸ் கணக்குல காட்டமலே நம்மவா பாஜகவுக்கு வாரி இரைச்சுருக்காளே. இனிமே சாதிவாரி கணக்கெடுப்பாவது மண்ணாவது, இட ஒதுக்கீடு வாயுலயும் மண்ணு தான் போங்கோ. ஏண்டிம்மா அதை கஃபேயின்னு சொல்லுறே, கஃபேயிலயாவது காபி, டீ கெடைக்கும், இங்க சொட்டு பச்சைத்தண்ணீ கூட கொடுக்கமாட்டாளே. கவலைப்படாதேள், அதெல்லாம் நமக்கு கீழ உள்ளவாளுக்குத் தான் அப்படி, நம்மவாளுக்கு அங்க எல்லாமே கெடைக்குண்ணா. நாம மோடியை நம்பாட்டியும் கூட மோஹனை நம்பாம இருக்கப்புடாது. நீ எந்த மோஹனை சொல்லுறே, மைக் மோஹனா?. இல்லண்ணா, நம்ம மோஹன் பஹவத் மாமாவை தான் சொல்லுறேன். சாதியையும், நம்மவாளையும் நன்னா கவனிக்கலைனா மோஹன் மாமா, மோடி தோல உரிச்சுடுவாரோல்லியோ.

(தொடரும்)

 


பணம் பேசுறேன் (204):

 


இதுவரைக்கும் இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி பாத்துவந்தோம். இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவங்க எல்லாரையுமே நாம இங்க பட்டியலிடல. இதுவரைக்கும் இந்தியாவின் சாதிய முதலாளித்துவத்தோட சாதிய முதலாளி வர்க்கத்தைப் பத்தி பாத்துவந்தோம். இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவங்க எல்லாரையுமே நாம இங்க பட்டியலிடல. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (MCA) சமீபத்திய தரவுகளின்படி (2025, ஜனவரி), இந்தியாவுல இப்போ 28 லட்சத்து 5ஆயிரத்து முன்னூத்தி ஐம்பத்தி நாலு (28,05,354) பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இருக்கு, இவற்றுல சுமார் 18 லட்சத்து 17 ஆயிரத்து இருநூத்தி இருபத்தி ரெண்டு (18,17,222) நிறுவனங்கள் தான் செயல்பாட்டுல இருக்கு. அதாவது மொத்தமுள்ள எல்லா நிறுவனங்கள்லயும் 65% நிறுவனங்கள் தான் செயல்பாட்டுல இருக்கு. இந்த 18,17,222 நிறுவனங்களோட முதலாளிகள் எல்லாரோட பேரையும் இங்க பட்டியிலட முடியாதுங்க. ஒரு உதாரணத்துக்காக நாம குறிப்பிட்டிருந்த முதலாளிகள்ல பெரும்பாலானவங்க பெருமுதலாளிகள் தான். இவங்கள தான் பேச்சு வழக்குல கார்ப்பரேட் முதலாளிகள்னும் சொல்றாங்க.

சாதிய முதலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவங்க எல்லாருமே உற்பத்திச் சாதனங்களை சொந்தமா வெச்சிருக்காங்க. இந்த சாதிய முதலாளிகள் யாருமே நேரடியா உடலுழைப்புல ஈடுபடுறது கெடையாது, மத்தவங்கள வெச்சுத்தான் வேலை வாங்குறாங்க, இவங்க எல்லாருமே தொழிலாளர்களோட உபரிஉழைப்பைச் நேரடியாகவோ மறைமுகமாவோ சுரண்டுறவங்களா இருக்காங்க. தொழில்துறை முதலாளிகள் தொழிலாளர்களோட உழைப்புச்சக்தியை கூலி கொடுத்து விலைக்கு வாங்குறாங்க. அதன் மூலமா தொழிலாளர்களோட உபரிஉழைப்பைச் நேரடியா சுரண்டுறாங்க. அதனால தான் அவங்களுக்கு லாபம் கிடைக்குது. இந்த தொழிலாளர்களோட உழைப்புக்கு ஈடான ஊதியம் கொடுத்திருந்தாங்கன்னா அங்க லாபம் உருவாகுறதுக்கான வாய்ப்பே இல்லாம போயிடும். தொழிலாளர்களோட உழைப்பை மறைமுகமா சுரண்டுவதன் மூலமா தான் வாடகையும், வட்டியும் கெடைக்குது. அப்படித்தான் சாதிய நிதி முதலாளிகளுக்கு வட்டி கெடைக்குது.

இந்த சாதிய முதலாளி வர்க்கத்துக்குள்ள நாலு உட்பிரிவுகள் இருக்கு. அதுல முதலாவது உட்பிரிவா இருக்குறது உயர்சாதி முதலாளிகள், ரெண்டாவது உட்பிரிவா இடைச்சாதி முதலாளிகள் இருக்குறாங்க, மூன்றாவது உட்பிரிவா தலித் முதலாளிகள் இருக்குறாங்க, நான்காவது உட்பிரிவா இந்துவல்லாத முதலாளிகள் இருக்குறாங்க. இந்தியா உருவானதுலேருந்து இன்னைக்கு வரைக்கும் ஆளக்கூடியவங்களா இருக்குறது சாதிய முதலாளி வர்க்கத்தின் முதல் உட்பிரிவான உயர்சாதி முதலாளிகள் தான். இடைச்சாதி முதலாளிகளும், தலித் முதலாளிகளும், இந்துவல்லாத முதலாளிகளும் இந்த மூணு உட்பிரிவுகளுமே உயர்சாதி முதலாளிகளோட பரிவாரங்களா தான் செயல்படுறாங்க.

வர்க்கம்னு சொல்லும் போது அது எதைக் குறிக்குது, ஒரே மாதிரியான உற்பத்தி உறவுகளைக் கொண்ட ஆட்களோட கூட்டத்தைத் தான் வர்க்கம்னு சொல்லுறோம். மனுசனோட புற இருப்புநிலை தான் அவனோட அக உணர்வுநிலையைத் தீர்மானிக்குது. அக உணர்வுநிலை நேரடியா புற இருப்பு நிலையைத் தீர்மானிக்கிறது இல்ல. நாம வர்க்கப் பகுப்பாய்வு செய்யும் போது அந்த பகுப்பாய்வுக்கு ரொம்ப அவசியமான ரெண்டு முக்கியமான கூறுகள் இருக்கு. முதலாவது வர்க்க இருப்புநிலை (class position), ரெண்டாவது வர்க்க உணர்வுநிலை (class consciousness). மனுசனோட புறவயமான பொருளாயதநிலை தான் அவனோட வர்க்க இருப்பு நிலையைத் தீர்மானிக்குது. அவனோட வர்க்க இருப்பு நிலையின் அடிப்படையில தான் அவனுக்கு வர்க்க உணர்வுநிலை உருவாகுது. ஒரு மனுசனோட வர்க்க இருப்புநிலை என்பது அவனோட உடலுக்கு வெளியே அவனோட கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களால, உற்பத்தி சாதனங்களால தான் தீர்மானிக்கப்படுது. அதன் அடிப்படையில தான் அவனுக்கு வர்க்க உணர்வுநிலை வருது. இந்தியாவோட பழைய நிலப்பிரபு சமூகத்துல சாதி தான் வர்க்க இருப்புநிலையையும், வர்க்க உணர்வு நிலையையும் தீர்மானிச்சுச்சு. நிலப்பிரபுத்துவ சமூகத்துல வர்க்க உணர்வுநிலை என்பது சாதிய உணர்வுநிலையா, சாதிய மனநிலையா இருந்துச்சு.

(தொடரும்)

 


Thursday, February 27, 2025

பணம் பேசுறேன் (203):

 

4. இந்து அல்லாத முதலாளிகள்:

அடுத்து பார்ஸி முதலாளிகளைப் பத்திப் பாப்போம். இந்தியாவோட ஒன்பதாவது பெரும் பணக்காரரா இருக்குற சைரஸ் பூனாவாலா ஒரு பார்ஸி முதலாளி தான். சைரஸ் பூனாவாலா குழுமத்தின் சொந்தக்காராரான இவர் தான் 2022ல சுகாதாரத்துறையில (Healthcare) உலகின் முதலாவது பெரும்பணக்காரரா இருந்தவரு. நோய் தடுப்பு மருந்துகளை-“வேக்சின்களை” தயாரிக்கிற சீரம் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் இந்தியா இவரோடது தான். பூனாவாலா ஃபின்கார்ப் என்ற பேருல வங்கியல்லாத நிதி நிறுவனத்தையும் வெச்சிருக்காரு. இவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது ரெண்டுமே கொடுக்கப்பட்டுருக்கு. மோடியைப் பாராட்டும் இவருக்கு லோக்மான்ய திலக் அறக்கட்டளையின் லோக்மான்ய திலக் தேசிய விருதும் கொடுக்கப்பட்டுருக்கு. நதிர் கோத்ரேஜ் (கோத்ரேஜ் குரூப் ஆஃப் இண்டஸ்ட் ரீஸ், கோத்ரேஜ் அக்ரோவெட்), ரத்தன் டாடா, லியா, மாயா & நெவில் டாடா, (டாடா குழுமம்), நஸ்லி வாடியா (வாடியா குழுமம்), ஷபூர் மிஸ்ட்ரி, ஸஹான் மிஸ்ட்ரி (ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமம்) இவங்க எல்லாருமே பார்சி முதலாளிகள் தான்.

அடுத்து புத்த மத முதலாளிகளைப் பத்தி பாப்போம். ஏற்கெனவே தலித் முதலாளிகள் பட்டியல்ல நாம பாத்த கோடீஸ்வரர் கல்பனா சரோஜ் ஒரு பௌத்த முதலாளி தான். ரத்னதீப் காம்ப்ளே (என்ஸ்பைர் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், சொலியூசன்ஸ் இன் இன்னொவோடிவ் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட், ஜிபி மல்டி கேர் ஹாஸ்பிடல் பிரைவேட் லிமிடெட். என் ஸ்பையர் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், மோடுலேரியோ ஃபர்னிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்பேஸ்வர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், லொகோ லெஸர் டிராவல்ஸ்), ஸ்வீட்டி காம்ப்ளே (ப்சென் கார்மென்ட்ச் க்ளஸ்டர் பிரைவேட் லிமிடெட்), டுஸ்ஷார் கபூர் (டுஸ்ஷார் என்டெர்டெய்ன்மென்ட் ஹவுஸ்), இவங்களும் பௌத்த முதலாளிகள் தான்.

பௌத்த முதலாளியான ரத்னதீப் காம்ப்ளே பௌத்த முதலாளிகளுக்கான வர்த்தகம், தொழில்துறை கூட்டமைப்பை 2012ல் உருவாக்கியிருக்காரு. இந்த கூட்டமைப்புக்கு இந்தியாவின் 11 மாநிலங்கள்ல கிளைகளைக் கொண்டிருக்கு. இதன் தமிழ் நாட்டுக் கிளை திருச்சியில் செயல்படுது. மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ராஜ்குமார் படோல், லடாக்கைச் சேர்ந்த ஜம்யாங் செரிங் நம்கியால், இவங்க ரெண்டு பேருமே பௌத்த மதத்தைச் சேர்ந்தவங்களா இருந்தும் கூட பாஜகவோடு ஐக்கியமாகி தலித்களுக்கும், பௌத்தர்களுக்கும் எதிரா செயல்படுற துரோகிகளாக மாறிட்டாங்க என்பதையும் இங்க குறிப்பிட்டே ஆகனும்.

அடுத்ததா சீக்கிய முதலாளிகளைப் பத்தி பாப்போம். இந்தியாவோட  பணக்கார சீக்கிய முதலாளிகள்லயே முதல் இடத்துல இருக்குறது குல்தீப் சிங்க் திங்க்ரா தான். பெர்கெர் பெயிண்ட்ஸ் கம்பெனி இவரோடது தான். குஷால் பால் சிங்க் (டிஎல்எஃப் ரியல் எஸ்டேட்), மல்விந்தர் சிங்க் (ரான்பேக்ஸி லேபரட்டரீஸ்), அனல்ஜித் சிங்க் ( மேக்ஸ் குரூப், லீயு கலெக்சன்ஸ்), சிங்க் குடும்பம் - பசுதியோ நரைன் சிங்க் & தனஞ்செய் குமார் சிங்க் (அல்கெம் லேபரட்டரீஸ்) இவங்க எல்லாருமே சீக்கிய முதலாளிகள் தான்.

(தொடரும்)

 

Wednesday, February 26, 2025

பணம் பேசுறேன் (202):

 

4. இந்து அல்லாத முதலாளிகள்:

அடுத்து கிறிஸ்தவ முதலாளிகளைப் பத்திப் பாப்போம். ஹிந்துத்துவ மோடியோடவும், பாஜகவோடவும் சமரசம் செஞ்சுக்குறதுல முஸ்லிம் பெருமுதலாளிகளுக்கு கொஞ்சமும் சளைச்சவங்க கெடையாது கிறிஸ்தவ பெருமுதலாளிகள். இதுக்கு ஒரு ரெண்டு உதாரணத்தை சொல்றேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல பாஜகவுக்கு பெரும்பான்மை கெடைக்கல, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு தயவுல கூட்டணி ஆட்சி தான் அமைக்க முடிஞ்சுச்சு. ஆனா கிறிஸ்தவ வைர முதலாளி ஜாய் ஆலுக்காஸ் என்ன சொல்லிருக்காரு வரலாற்றுச் சிறப்புமிக்க” தேர்தல் வெற்றி பெற்றதுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிச்சுக்கிறேன். இந்த வரலாற்று வெற்றி இந்தியாவின் ஜனநாயகப் பயணத்தில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது, இது தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான நாட்டின் கூட்டு விருப்பத்தை பிரதிபலிப்பதாகவும் சொல்லியிருக்காரு. ஏன்னா ஜாய் ஆலுக்காஸுக்கு இந்திய சிறுபான்மை மக்களோட உரிமைகள், நலன்களை விட வைர வியாபரத்துல கெடைக்கிற லாபம் தான் பெரிசு. இது மட்டுமில்லாம டெல்லியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துல நரேந்திர மோடியை சந்திச்சு தன்னோட சுயசரிதையான 'ஸ்ப்ரெடிங் ஜாய்' புத்தகத்தையும் மோடிக்கு அன்பளிப்பா கொடுத்துருக்குறாரு. கிறிஸ்தவ மக்களுக்கு துரோகியா பாஜகவுல ஐக்கியமான மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ஏற்பாடு செஞ்ச கிறிஸ்துமஸ் கொண்டட்டத்துல மோடியும் கலந்துகிட்டாரு.  கிறிஸ்தவ நிதி முதலை ஜார்ஜ் முத்தூட் குடும்பத்து பிரதிநிதியும் இதுல கலந்துகிட்டாரு.

கிறிஸ்தவ முதலாளிகளின் கூட்டமைப்பாக 2010ல் தெலங்கானாவில்  கிறிஸ்தவ வர்த்தக மற்றும் தொழில்துறை சபை (CCCI) நிறுவப்பட்டுருக்கு. கிறிஸ்தவ தொழிலதிபர்களின் சந்தைக்கான அமைச்சகமாக பிசினஸ் மென்ஸ் ஃபெலோஷிப் இந்தியா (The BUSINESS MEN’S FELLOWSHIP INDIA- BMFI) தொடங்கப்பட்டுருக்கு. இதோட தமிழ்நாட்டுக் கிளை 2015 ஜனவரில உருவாக்கப்பட்டுருக்கு. தமிழ்நாட்டுல 1998 ஆம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ வணிக வழிகாட்டிகள் கவுன்சில் (Christian Business Mentors Council of India ) மதுரையில் தொடங்கப்பட்டுருக்கு.

இந்தியாவின் பிரபலமான கிறிஸ்தவ முதலாளிகள் யார் யாருன்னு இப்ப பாப்போம். எம்.ஜி.ஜார்ஜ் முத்தூட் (முத்தூட் குழுமம்), ஜாய் ஆலுக்காஸ் (ஜாய் ஆலுக்காஸ் ஜுவல்லரி, ஜாலி சில்க்ஸ், ஜாய் ஆலுக்காஸ் எக்ஸ்சேஞ்ச், ஜாய் ஆலுக்காஸ் லைஃப் ஸ்டைல் டெவலப்பர்ஸ்-ரியல் எஸ்டேட்), சன்னி வர்கீ (ஜெம்ஸ் எஜுகேசன்ஸ், வர்கீ குழுமம்), ஜோஸ் ஆலுக்காஸ் (ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம், ஜுவல்லரி), ஏ.டி.பத்மசிங்க் ஐசக் (ஆச்சி மசாலா, ஆச்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ்), சந்தோஷ் ஜார்ஜ் குளங்கரா (சஃபாரி டிவி), நோபில் பாபு தாமஸ் (பிக் பேங்க் எண்டர்டெய்ன்மென்ட்ஸ்), கே.எம்.மம்மன் மாப்பிள்ளை (ஏம்.ஆர்.எஃப் ரப்பர்), மம்மன் மேத்யூ & அன்னம்மா மேத்யூ (மலையாள மனோரமா கம்பெனி லிமிடெட்), சாபு எம் ஜேக்கப் (கிட்டெக்ஸ் கார்மென்ட்ஸ் லிமிடெட்), ஏ.வி.தாமஸ் (ஏவிடி குரூப ஆஃப் கம்பெனிஸ்), ஜெயபரதன் ஜொனாதன்பிரீத் (மவுண்ட் ஸியோன் எஸ்டேட்ஸ் பிரைவேட் லிமிடெட், சன்வே க்ளீன் பவர் பிரைவேட் லிமிடெட், புதிய பூமி அக்ரோஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ஜே.பி அக்ரோ ஃபார்ம்ஸ் பிரைவேட் லிமிடெட், ரோஸி செலெஸ்டீ ஆர்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ரேடியன்ட் மெடோவ்ஸ் நேச்சுரல் ஃபார்மிங்க் & ரெமிடிஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.ஜே. ஆர்கானிக் ஃபார்மிங்க் பிரைவேட் லிமிடெட், எஸ்.ஜே.சோலார் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்), கிளன் சல்தன்ஹா (கிளன்மார்க் ஃபார்மச்சுயூட்டிக்கல்ஸ்), கோச்சௌசெப் சிட்டிலப்பிள்ளி, (விகார்ட் இண்டஸ்ட்ரீஸ்). இவங்க எல்லாருமே இந்தியாவின் பிரபலமான கிறிஸ்தவ முதலாளிகள் தாங்க.

(தொடரும்)

 

Monday, February 24, 2025

பணம் பேசுறேன் (201):

 

4. இந்து அல்லாத முதலாளிகள்:

அஸிம் பிரேம்ஜி இந்திய அளவுல 19வது பெரிய பணக்காரர். இவரை இந்திய தகவல் தொழில் நுட்பத்தின் ஸார்னு அழைக்கிறாங்க. 2011ல இந்திய அரசு இவருக்கு பத்ம விபூசன் விருது கொடுத்துருக்கு. இந்திய முஸ்லிம் முதலாளிகளின் கூட்டமைப்பாக இந்திய முஸ்லிம் வர்த்தக சபை (TMCCI) மும்பைல செயல்படுது. நாக்பூர்லயும் ஒரு இந்திய முஸ்லிம் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை ( IMCCI) இருக்கு. புனே நகரத்து முஸ்லிம் முதலாளிகளின் கூட்டமைப்பாக முஸ்லிம் வர்த்தக மற்றும் தொழில் சபை (MCCI) செயல்படுது. இதே பேருல தெலங்கானாவுலயும் முஸ்லிம் முதலாளிகளுக்கான கூட்டமைப்பு இருக்கு.  சரி இப்ப மத்த முஸ்லிம் முதலாளிகளைப் பத்தி பாப்போம். எம்.பி.அஹ்மத் (மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ்), அஹமத் புஹாரி (கோல் & ஆயில் கம்பெனி), அப்துல் காதெ ஃபஸ்லானி (ஃபஸ்லானி குழுமம்), யூசுஃப் க்வாஜா ஹமீத் (சிப்லா ஃபார்மச்சூடிக்கல்ஸ்),  ஷம்செர் வியலில் (விபிஎஸ் ஹெல்த்கேர்), அஸாத் மூப்பென் (அஸ்டெர் டி.எம் ஹெல்த்கேர்), ஃபாடி காந்தௌர் (அரமெக்ஸ்), மெரஜ் மனால் (ஹிமாலயா), ஷாருக்கான் (ரெட் சில்லிஸ் எண்டெர்டெய்ன்மென்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணியின் இணை-உரிமையாளார்), ஷானாஸ் ஹுசைன் (ஷானாஸ் ஹெர்பல்ஸ்), அஸார் இக்பால் (இன்ஷார்ட்ஸ்), ஃபரித் அஹ்சான் (ஷேர் சேட்), யூசுஃப் அலி (லுலு குழுமம்), ஹுசைன் கொரகிவாலா (மொங்கினிஸ் பேக்கரி), ஹகிம் அப்துல் ஹமீத் (ஹம்தர்ட் ஹெல்த்கேர்), ஸீஷான் ஹையத் (டாப்பர் எஜுடெக்), ஹபில் கொரைகிவாலா (வொக்ஹார்த்ட் ஃபார்மச்சூயூடிக்கல்ஸ்), ரிஸ்வான் கொய்தா (சிய்டியஸ் டெக், ஹெல்த்கேர்), பி.எஸ்.அப்துர் ரஹ்மான் (புஹாரி குழுமம்), பி.சி.முஸ்தஃபா (ஆய்டி ஃப்ரெஷ் ஃபுட்ஸ்), இர்ஷத் மிர்ஸா & ரஷித் மிர்ஸா (மிர்ஸா இண்டர்நேஷனல், தோல் காலணிகள்), இர்ஃபான் ரஸக் (பிரெஸ்டீஜ் ரியல் எஸ்டேட்), ஃபெரோஸ் அல்லனா (அல்லனா குழுமம், உணவு ஏற்றுமதி), அடில் ஹசான் & தாப் சித்திக் (ஹார்வெஸ்ட் கோல்ட் பேக்கரி), ஹஜி நிஸார் அஹ்மெத் தகத் (தகத் குழுமம், ஜெம்ஸ் & ஜுவல்லரி), மொஹம்மெத் ஹிஸாமுதின் (என்டிரி எஜுடெக்-கல்வித் தொழில் நுட்பம்), ஃபைசல் ஃபரூக் (மௌத்ஷட் நுகர்வோர் மதிப்பீடு), ரஃபீக் மாலிக் (மெட்ரோ காலணி தொழிற்சாலை), மொஹ்மத் அலி (எம்ஃபார் கன்ஸ்ட்ரக்சன்ஸ், எம்ஃபார் ஹோட்டல், கல்ஃபார் எஞ்சினியரிங்க்), ஸஃபார் சரெஷ்வாலா (பர்சோலி கார்ப்பரேசன்), மொஹம்மெத் விஸாரத் ரஸூல் கான் (ஷதான் ஹாஸ்பிடல் குரூப்), ரிஸ்வான் முனிர் ஷேக் (சினப்ஸிஸ் சாஃப்ட்வேர் சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், டெலிசோர்ஸ் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட், கிளிஃப்டன் மெயெர்ஸ் எண்டர்பிரைசஸ் இண்டியா பிரைவேட் லிமிடெட், கிராஃப்டிக் மொபைல் சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட்), நிஸாரஹமெத் ஜமில் சையெத் (புர்ஜ் பில்ட்கான் பிரைவேட் லிமிடெட், கியூரா ஐடி சொலுயூசன்ஸ் பிரைவேட் லிமிடெட், தவக்கால் சூப்பர்மார்ட் அண்ட் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட்), நஸிமுதின் ஃபரூக் (மர்காஸ் குரூப் ஆஃப் கம்பெனிஸ்), மொஹ்மத் சல்மான் (டின்ட் டோன் & ஷேட்ஸ்), அதெர் அஹ்மெத் (அமனா கன்ஸ்டிரக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட்)  இவங்க எல்லாருமே முஸ்லிம் முதலாளிகள் தான்.

 

(தொடரும்)

 

பணம் பேசுறேன் (200):


4. இந்து அல்லாத முதலாளிகள்:

பாஜக வெறுத்தொதுக்குற முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த முதலாளிகளைப் பத்தி இப்ப பாப்போம். இத்தனை ஆயிரம் முஸ்லிம்களை மோடி அரசு சித்திரவதை செஞ்சு கொன்னுருக்கே, இதுவரைக்கும் எந்த முஸ்லிம் முதலாளியாவது அதை எதிர்த்து வெளிப்படையா குரல் கொடுத்துருக்காங்களா? இல்லையே, எதுக்கு வம்பு ஏதாச்சும் பேசுனா ரெயிட் போட்டு நம்ம பிஸினஸையே காலி பண்ணிருவானுகன்னு அமைதியா எந்த விமர்சனமும் பண்ணாம சுய லாபத்தை மட்டும் காப்பாத்துறவுங்களா தான இருக்காங்க. இவங்கள்ல சில பேரு உதாரணமா ஷம்ஷெர் வியலில், அஷாத் மூப்பென், யூசுஃப் அலி இவுங்கள்லாம் அதுக்கும் ஒரு படி மேல போய்  வெக்கமே இல்லாம மோடியை பாராட்டுறவங்களாவும் இருக்காங்க. லுலு குழுமத் தலைவர் யூசுஃப் அலி பிரதமர் மோடிக்கு ஃபோன் பண்ணி 'ஈத் முபாரக்' வாழ்த்து வேற தெரிவிச்சுருக்காரு. எதுக்கு முஸ்லிம்களை கொன்னதுக்காகவா? எல்லாமே அவங்களுக்கு பிஸினஸ வளர்க்குற சம்பிரதாயங்கள் தான. இவங்களே பரவாயில்லைனு சொல்ற மாதிரி சுயநலத்துக்காக முஸ்லிம்களுக்கே துரோகிகளா மாறுனவுங்களும் இருக்கத்தான செய்றாங்க. உதாரணமா தமிழ்நாட்டைச் சேர்ந்த சையத் இப்ராஹிம், நடிகை குஷ்பு, பீஹாரைச் சேர்ந்த சையத் ஷானவாஸ் ஹுசைன், அன்வருல்-ஹக் இவங்க எல்லாம் துரோகிகள் தான். இந்தியாவுல உள்ள முஸ்லிம் கோடீஸ்வரர்கள்ல முதலிடத்துல இருக்குறவரு அஸிம் பிரேம்ஜி (விப்ரோ குழுமம்).

 அஸிம் பிரேம்ஜி 2015ல ஆர்.எஸ்.எஸ் கூட்டத்துக்குப் போயிருந்தாரு. அதைப் பத்தி விமர்சனம் வந்ததுக்குப் பெறகு அவர் என்ன சொன்னாரு தெரியுமா? ஆர்எஸ்எஸ் நிகழ்வில் கலந்துகொண்டதை அந்த அமைப்பின் கருத்துக்களை ஆதரிப்பதாக அர்த்தப்படுத்திக்கவேண்டியதில்ல. வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ஒன்றாகச் செயல்படுவதற்குச் சமமாக பார்க்கனும். (அடடா, என்ன ஒரு சமரசப் போக்கு!) இதுபோன்ற ஒரு மன்றத்துல கலந்துகொள்வதன் மூலம் நான் சங் சித்தாந்தத்தை ஆதரிப்பதாகக் கருதப்படுவேன் என்று சிலர் அச்சம் தெரிவிக்கிறாங்க. நான் ஒரு அரசியல் நபர் கெடையாது என்பதால் அந்த ஆலோசனையை நான் பின்பற்றல. இருந்தாலும், எனது நாட்டின் மீது எனக்கு ஆழ்ந்த ஆர்வமும் அக்கறையும் இருக்கு. அதோட, ஒரு குறிப்பிட்ட மன்றத்துல பேசுவது என்பது மன்றத்தில் வெளிப்படுத்தப்படக்கூடிய கருத்துக்கள் அல்லது ஏற்பாட்டாளர்கள் நடத்தக்கூடிய அனைத்தையும் ஒருவர் ஆதரிப்பதாக அர்த்தமல்ல என்று நான் நம்புறேன்னு சொல்லிருக்காரு. “ராஷ்ட்ரிய சேவா பாரதி"யின் பணியை தான் மதிப்பதாகவும், அதுவே தான் அங்கு வந்ததற்கான காரணம்னும் சொல்லிருக்காரு. ஹிந்துத்துவா குண்டர்களோட உரையாடலுக்கோ, விவாதத்திற்கோ கடுகளவுக்குக்கூட இடமேயில்லைன்னு நல்லா தெரிஞ்சபோதும் கூட அஸிம் பிரேம்ஜி என்ன சொன்னாரு: "வேறுபட்ட பார்வைகளோ அல்லது கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவற்றை விவாதம், உரையாடல் மூலம் தீர்க்க முடியும்,"னு சொல்லிருக்காரு.

கோவிட் காலத்துல 2021 மே 12 அன்னைக்கு ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செஞ்சிருந்த ஆன்லைன் கருத்தரங்க கூட்டத்துலயும் அஸிம் பிரேம்ஜி கலந்துக்கிட்டு பேசியிருக்காரு. “தொற்றுநோய் நமக்கு உருவாக்கியுள்ள நெருக்கடியிலிருந்து நல்ல அறிவியல், உண்மையை ஏற்றுக்கொள்ளும் தன்மை, ஒற்றுமை ஆகியவை மட்டுமே நம்மை மீட்டெடுக்க முடியும்.”னு பேசியிருக்காரு. முதலாளிகள் எந்த சாதி மதத்தைச் சேர்ந்தவுங்களா இருந்தாலும் கூட ஆளும் அரசாங்கத்தோட, அதுல உள்ளதுலயே கேடுகெட்ட பாஜக அரசாங்கத்தோட கூட சமரசம் செஞ்சுக்குறவங்களா தான் இருக்குறாங்க.

(தொடரும்)

 

Sunday, February 23, 2025

பொம்மைகளின் புரட்சி (87):

 

நாலு பேரும் வீட்டுக்குள்ள வந்தாங்களா, பாத்தா தாத்தா சூப் குடிச்சிக்கிட்டுருந்தாரு, மிமி படுத்துக்குட்டே நாய்க்குட்டி மாதிரி தட்டுலேருந்து சூப்பை லப் லப்னு குடிச்சிக்கிட்டுருந்தா…

குக்கு: சீக்கிரமாவே வந்துட்டீங்களா தாத்தா

அட்லு தாத்தா: ஆமாண்டா, என்ன கதையெல்லாம் படிச்சிங்களா, நல்லா இருந்துச்சா…

மஞ்சா: ஓ ரொம்ப நல்லா இருந்துச்சே…

பிம்பா: குக்கு தான் காமடியா ரகளை பண்ணிட்டா, சூரியன் மாமாவாம், மேகம் அத்தையாம், அப்போ பெரியப்பா, சித்தி, சித்தப்பா எல்லாம் யாரு குக்கு…

குக்கு: கடல் தான் நம்ம பெரியம்மா, மலை பெரியப்பா, காத்து நமக்கு சித்தி, நெலம் தான் நமக்கு சித்தப்பா…

யம்மு பாட்டி: சரி கொழந்தைங்களா கை, கால கழுவிட்டு வாங்க, வந்து முட்டைகோஸு சூப் குடிங்க…

குக்குவும், மஞ்சாவும் ஒருத்தரை ஒருத்தர் ஆச்சரியமா பாத்துக்கிட்டாங்க…

மஞ்சா: ஆமா எங்களுக்கு சூப் குடிக்கனும் போல இருந்துச்சுன்னு ஒனக்கு எப்புடி தெரியும்…

யம்மு பாட்டி: என் மனசெல்லாம் லைப்ரரில தான இருந்துச்சு…

மஞ்சா: பாட்டி எங்களுக்கு சாசர்ல ஊத்தி தாங்க, நாங்களும் சாஷா, அல்யோஷா மாதிரி குடிக்கப்பொறோம்…

யம்மு பாட்டி: எங்க கல்யாணத்துக்கு அன்பளிப்பா கப் & சாசர் செட் கொடுத்தாங்க, அதெல்லாம் யாராவது எங்கள உபயோகப்படுத்த மாட்டாங்களான்னு காத்துக்கெடக்கு, இருங்க கழுவி எடுத்துட்டு வர்றேன்…

அதுக்குள்ள பிம்பா தாத்தாகிட்ட நடந்ததையெல்லாம் சொன்னான்…

அட்லு தாத்தா: ஏண்டா கண்ணு அப்புடியா பண்ணுன, அறிவுடா அவ குக்குவ கிண்டல் பண்ணாதிங்க… என் செல்லம் தாத்தாகிட்ட வா… ஆமாம் ஆட்டோ மாமாவுக்கு காசு கொடுக்கல, லைப்ரரி மாமாவுக்கும் காசு கொடுக்கல, அப்புறம் ஏன் கரும்பு மாமாவுக்கு மட்டும் காசு குடுத்தீங்க…

குக்கு: அது தாத்தா, ஆட்டோ மாமா வசதியான மாமா, நல்லா டிப் டாப்பா சொக்கா, ஷூவெல்லாம் போட்டு, மினு மினுன்னு வாட்ச்செல்லாம் கட்டிருந்தாரு, செண்ட் அடிச்சிருந்தாரு… லைப்ரரி மாமா ரொம்ப பணக்கார மாமா, ரெண்டு கை நெறையா மோதிரம் போட்டுருந்தாரு, பதக்கஞ்சங்கிலி போட்டுருந்தாரு… ஆனா கரும்பு மாமா கிழிஞ்ச பனியன் தான் போட்டுருந்தாரு, ரோட்டுல எல்லாரும் கொடைக்கு கீழ தான் கடை வெச்சிருக்காங்க… நான் அவர் கொடையில்லாம வெயில்ல தான் இருக்காரு… அவருக்கு குட்டிப்பாப்பா இருக்கு, அவருக்கு மூணு புள்ளைங்கலாம், நம்ம காசு குடுக்காட்டி அந்த குட்டிப்பாப்பா பாவம் தான, அதான் நான் எதுவும் சொல்லல…

தாத்தா: எல்லாத்தையும் எப்புடி கவனிச்சிருக்கா பாத்தியா… அறிவுடா என் பேத்தி… சரி…நீங்க என்ன சரஸ்வதி லைப்ரரிக்கா போனிங்க?

மஞ்சா: ஆமாம் தாத்தா…

அட்லு தாத்தா: அதான் பொது நூலகம் இருக்குல்ல… இனிமே அங்க போகாதீங்க, அவென் ஒரு இவெனாச்சே, பேராசை புடிச்சவென்

மஞ்சா: இல்ல தாத்தா நாங்க அங்க போகனும், நேரமாயிடுச்சேன்னு கதைய படிக்காம வெச்சுட்டு வந்துட்டோம்…

அட்லு தாத்தா: சரி கடைசியா ஒரு மொறை வேணா போயிட்டுவாங்க, அதுக்கு மேல வேணாம்

யம்மு பாட்டி: சூப் ஆறிப்போயிடும் எங்க சீக்கிரமா குடிங்க பாப்போம்…

எல்லாரும் சாசர்ல ஊத்தி சாஷா, அல்யோஷா மாதிரியே சூப் குடிக்கிறாங்க… குக்குவும், பெப்போவும் மிமி மாதிரியே படுத்துக்கிட்டு நாய்க்குட்டி மாதிரி லப், லப்னு நக்கி நக்கி குடிக்கிறாங்க

(தொடரும்)

Friday, February 21, 2025

பணம் பேசுறேன் (199):

 

இந்துக் கூட்டுக் குடும்பம்:

இந்துக் கூட்டுக் குடும்பம் (hindu undivided family) சட்டப்படி ஒரு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுருக்குன்னு சொல்லியிருந்தோம். இந்துக் கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family) என்பது சட்டப்படி வரிசெலுத்தும் நிறுவனமாகவும், தனி நபர்களிடமிருந்தும், பெரு நிறுவனங்களிடமிருந்தும் வேறுபட்ட தனித்துவமான அமைப்பாகவும் அங்கீகரிக்கப்பட்டுருக்கு. மத்த பெரு நிறுவன அமைப்புகள் தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரிச் சட்டங்களால் நிர்வகிக்கப்படுது ஆனா இந்துக் கூட்டுக் குடும்பமோ இந்து தனிநபர் சட்டத்தின் அடிப்படையில நிர்வகிக்கப்படுது. இதன் மூலமா வணிகக் குழுக்களின் நிறுவனக் கட்டுப்பாட்டின் மீதான குடும்பங்களின் கட்டுப்பாடும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் மூலமா நிறுவனங்களும் இந்து வணிக கூட்டுக் குடும்பங்களும் பின்னி பிணைக்கப்பட்டுருக்கு. இந்துக் கூட்டுக் குடும்பமாக இந்துக்கள் மட்டுமில்லாம, சீக்கியர்கள் புத்தமதத்தினரும் பதிவு செய்ய அனுமதிக்கப்படுறாங்க. ஆனால் கிறிஸ்தவர்காள், முஸ்லிம்கள், பார்ஸி, யூதர்கள் இதை பயன்படுத்தமுடியாது. 2005 சட்டத் திருத்தத்துக்கு முன்னாடி ஆண்கள் மட்டும் தான் இந்துக் கூட்டுக் குடும்பத்தின் வாரிசுகளாக அங்கீகரிக்கப்பட்டாங்க. அதுனால ஆணாதிக்கம், மதம், சாதி ஆகியவற்றின் அடிப்படையில சொத்துரிமையை நிர்ணயிப்பதற்கான அமைப்பாக இந்துக் குடும்பம் இருந்துருக்கு. இதன் மூலமா இந்து முதலாளிகளுக்கு வரி ஏய்ப்பிற்கான வசதிகளும், அதிக வரி விலக்குகளும், குறைந்த வரிவிகிதங்களும் அளிக்கப்பட்டுருக்கு. அதிக வருமானம் கொடுக்குற சொத்துக்களை பிரிக்கப்படாத இந்துக் குடும்பத்திற்கு மாற்றுவதன் மூலமா, குடும்பங்கள் தங்களோட வருமானத்தைப் பிரிச்சு ஒட்டுமொத்தமா கட்டவேண்டிய வரியை குறைக்கமுடியும். ஆயுள் காப்பீட்டு பிரீமியங்கள், பொது வருங்கால வைப்பு நிதிக்கு (PPF) பங்களிப்புகள், வரி சேமிப்புக்கான நிலையான வைப்புகளில் இந்துக் கூட்டுக் குடும்பம் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ் விலக்குகளைப் பெறமுடியும். இந்துக் கூட்டுக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கிடையில கொடுக்கப்படுற பரிசுகளுக்கும் முழுக்க வரி விலக்கு கொடுக்கப்பட்டுருக்கு. இந்துக் கூட்டுக் குடும்பம் செய்யுற முதலீடுகளிலிருந்து கிடைக்குற வட்டி, வாடகை, ஈவுத்தொகை வருமானத்துக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டு குறைந்த வரி தான் விதிக்கப்படுது. குடும்ப நலன் அல்லது சொத்து பராமரிப்புக்காக ஏற்படும் செலவுகளுக்கும் இந்துக்கூட்டுக் குடும்பம் விலக்குகளைப் பெறமுடியும். உதாரணமா, குடும்ப உறுப்பினர்களின் கல்வி, திருமணம் அல்லது மருத்துவ சிகிச்சை தொடர்பான செலவுகள் இந்துக் கூட்டுக் குடும்பத்தின் வருமானத்திலிருந்து கழிக்கப்படுது. இந்த கேடுகெட்ட இந்துக்கூட்டுக் குடும்பங்களால இந்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுது. இந்தியாவுல கிட்டத்தட்ட 10 லட்சம் பிரிக்கப்படாத இந்துக் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டுருக்கு. 2022-23 ஆம் ஆண்டில் 8.75 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்து கூட்டுக் குடும்பங்கள் (HUFs) வருமான வரிக் கணக்குகளை (ITRs) தாக்கல் செஞ்சு ரூ.3,803 கோடி மதிப்புள்ள விலக்குகளைக் கோரியிருக்காங்கன்னு நிதி அமைச்சகமே சொன்னுச்சே ஞாபகம் இருக்கா? இந்து கூட்டுக் குடும்பங்களுக்கு காட்டப்படும் சலுகைகளும் இந்துவல்லாத நிறுவனங்களுக்கு காட்டப்படும் பாகுபடுகளும் மதச்சார்பற்ற இந்தியாவின் அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 14,15, 44க்கு முற்றிலும் புறம்பானது. அதை நீக்குற வரை இந்தியா தன்னை மதச்சார்பற்ற நாடுன்னு சொல்லிக்கவே முடியாது. ஏழை எளியவங்களுக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை கொடுத்தா இலவசங்களால வருவாய் கொறையுது வளர்ச்சி சரியுதுன்னு கேவலப்படுத்துருங்காளே, ஆனா கேடுகெட்ட இந்த இந்து நிதி முதலைகளுக்கு மட்டும் எவ்வளவு சலுகைகளை கொடுத்து மோசடி பண்ண அனுமதிக்குறாங்க பாருங்க. இந்து முதலாளிகள் மூலதனத்தை திரட்டுறதுக்கு இந்திய அரசே என்னம்மா ஏற்பாடு பண்ணி கொடுத்துருக்கு பாருங்க.

(தொடரும்)

 

Thursday, February 20, 2025

பணம் பேசுறேன் (198):

 

3. தலித் முதலாளிகள்:

முதலாளித்துவ சமூகத்துல ஒருத்தரோட இழப்பு தான் இன்னொருத்தருக்கு லாபமாகுது. அதாவது முதலாளித்துவத்துல நஷ்டம் இல்லாம லாபத்தை உருவாக்கமுடியாது. எல்லாருமே முதலாளியாகிடவும் முடியாது, தொழிலாளியை உழைக்கவைக்காம முதலாளியால வாழவும்முடியாது. எல்லாரும் முதலாலியாயிட்டா அப்புறம் யாரோட உழைப்பைத்தான் சுரண்டுறது. ஒரு கோடீஸ்வரர் உருவாகனும்னா ஆயிரக்கணக்கான மக்கள் ஏழைகளாகனும். ஒரு அம்பானி உருவாகனும்னா லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படனும். கோடிக்கணக்கான மக்களை ஏழைகளாக்கித் தான் மலை முழுங்கி அதானி உருவாயிருக்காரு. எல்லா சூத்திரர்களாலும் சிவ நாடார் மாதிரியோ, இல்ல கலாநிதி மாறன் மாதிரியோ பில்லியனராக முடியாது. அதே மாதிரி எல்லா தலித்துகளாலும் ராஜேஷ் சரையா மாதிரி பில்லியனராகவும் ஆகமுடியாது. இது தான் முதலாளித்துவத்தின் எதார்த்தமான உண்மை. சரி வாங்க இப்ப முதலாளி வர்க்கத்தோட அடுத்த வகையறாவைப் பத்திப் பார்ப்போம்.

4. இந்து அல்லாத முதலாளிகள்:

இஸ்லாமிய முதலாளிகள், கிறிஸ்துவ முதலாளிகள், பார்ஸி முதலாளிகள், புத்தமத முதலாளிகள் மொத்தத்துல இந்து மதத்தைச் சேராத முதலாளிகள், மத்த மதங்களைச் சேர்ந்த முதலாளிகள், இல்ல கடவுள், மத நம்பிக்கை இல்லாத நாத்திக முதலாளிகள் எல்லாரும் இதுக்கு கீழ தான் வருவாங்க. பாஜக பாசையில சொன்னா இவங்க எல்லாரையும் மத்த முதலாளிகள் அல்லது பிறத்தியார் முதலாளிகள், இல்லைனா அந்நிய முதலாளிகள் அதாவது விதேசி முதலாளிகள்னு சொல்லலாம். ஏண்டா டேய், நீ மட்டும் ஒழுங்கா? நீயும் தான பாஜக மாதிரி இந்து, முஸ்லிம்னு பிரிச்சு பேசுறன்னு கேக்குறீங்களா? நான் இல்லாததை இட்டுக் கட்டலங்க, இருக்குறத தான் சொல்லுறேன். ஏன்னா இந்தியாவோட கேடுகெட்ட சட்ட அமைப்பும், வரியமைப்பும் இது ரெண்டுமே முதலாளிகளை அவுங்க இந்துவா இல்லையான்னு பிரிச்சு வேறுபடுத்தித் தான் பாக்குது. வேறுபடுத்திப் பாக்குறதோட மட்டுமில்ல, பாகுபடுத்திதான் நடந்துக்குது. இந்து முதலாளிகளுக்கு சலுகை காட்டுது, மத்த முதலாளிகளுக்கு கெடுபிடி காட்டுது. அட ஒன்னும் புரியல கொஞ்சம் வெவரமா சொல்லுலே? அது வந்து, அரசாங்கத்துக்கு வரி கட்டும் போது இந்து முதலாளிகள் கொறைஞ்ச வரி கட்டுனா போதும், ஆனா இந்துவல்லாத மத்த முதலாளிகள் அதாவது கிறிஸ்துவ முதலாளிகள், முஸ்லிம் முதலாளிகள், பார்ஸி முதலாளிகள் இவங்க எல்லாம் அதிக வரி கட்டியே ஆகனும். அய்யய்யோ இது மதச் சார்பற்ற இந்தியாவோட அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15க்கு முற்றிலும் புறம்பானதாச்சே? இதை அனுமதிக்கவே முடியாதே?ன்னு நீங்க கொதிப்படையுறது எனக்கு புரியுது. அரசியலமைப்புச் சட்டத்தோட பிரிவு 15 என்ன சொல்லுது.

 “மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டக்கூடாது.”ன்னு சொல்லுது.”

ஆனாலும் கூட பிரிவு 15க்கு மையைப்பூசித்தான், அது கண்ணை குத்தித் தான் இந்தியாவோட சட்ட அமைப்பு பிரிக்கப்படாத இந்துக் குடும்பம் (hindu undivided family-HUF) என்ற சட்ட நிறுவனத்தை உருவாக்கியிருக்கு. இதன் படி ஒரு பொது ஆண்முதாதையோரோட சந்ததிகள் எல்லாரையும் கொண்ட கூட்டுக்குடும்பம் ஒரு சட்ட நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுருக்கு.

  (தொடரும்)

 

Wednesday, February 19, 2025

பணம் பேசுறேன் (197):


3. தலித் முதலாளிகள்:

தலித் இந்திய வர்த்தக, தொழில்துறை அவையோட அறிக்கைகள்லயும் சரி, அதைச் சேர்ந்த மிலிந்த் காம்ப்ளே போன்ற தலித் முதலாளிகள் கொடுக்குற பேட்டிகள்லயும் சரி, தலித்களுக்கு இட ஒதுக்கீடு வேணாம்னு சொல்லும்போது இட ஒதுக்கீட்டை தான தர்மம் என்ற அர்த்தத்துல “Charity”னு குறிப்பிடுறாங்க. இது அடிப்படையில ரொம்ப ரொம்ப தவறானது மட்டுமில்ல, ரொம்ப ரொம்ப ஆபத்தானதும் கூட. இட ஒதுக்கீடு வேணாம்னு தான ஹிந்துத்துவா சொல்லுது. உயர்சாதியினரும் இட ஒதுக்கீட்டை தான தர்மம் மாதிரி தான பாக்குறாங்க. இந்தியாவுல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ஆண்டுகளா மறுக்கப்பட்ட, பறிக்கப்பட்ட உரிமைகளுக்கான சமூக நீதியாகத் தான் இட ஒதுக்கீடு கொடுக்கப்படுது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை உரிமை தான் இட ஒதுக்கீடு. அதை தான தர்மமாகவோ, சலுகையாகவோ தவறா சித்தரிக்கக்கூடாது. ஆயிரம் ஆண்டுகளா சலுகைகளை மட்டுமே அனுபவிச்சு உழைப்பைச் சுரண்டி வாழ்ந்த உயர் சாதியினரின் வம்சாவளிகள் எந்த விதமான குற்றவுணர்ச்சியும் இல்லாம தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்படுற இட ஒதுக்கீட்டை பார்த்து வயித்தெரிச்சல் அடைஞ்சா, எளக்காரமா பேசுனா அதுக்காக நாமெல்லாம் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கனுமா? எதுக்காகவும் இட ஒதுக்கீட்டை விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்ல. இட ஒதுக்கீட்டை  ஒழிச்சுக்கட்டுறதுக்காக ஹிந்துத்துவா காய்களை நகர்த்திக்கிட்டுருக்கும் போது, உயர்சாதி மனநிலை உள்ளவர்களைப் போல, தலித் முதலாளிகள் இட ஒதுக்கீட்டை தானதர்மம்னு சொல்லுறதும், அது தலித்துகளுக்கு வேணாம்னும் சொல்லுறதும் பாஜக, ஹிந்துத்துவ கும்பலுக்கு தான் ஆதரவா போய் முடியும். அதுனால தலித் மக்களோட வளர்ச்சி தான பாதிக்கப்படும். இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைஞ்ச இந்த தலித் முதலாளிகள் இட ஒதுக்கீடு வேணாம்னு மத்த தலித்களுக்கு சொல்றதுல்ல ஏதாவது நியாயம் இருக்கா? பாஜக ஆதரிக்கிற மக்களுக்கெதிரான புதிய தாராளமய கொள்கைகளைத் தான் தலித் முதலாளிகளும் ஆதரிக்கிறாங்க. அப்டின்னா தலித் முதலாளிகள் தலித் மக்களுக்காக செயல்படுறாங்களா? இல்ல பாஜகவுக்காக செயல்படுறாங்களா? ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்துற முதலாளித்துவத்தின் மூலமா சமத்துவமான சமுதாயத்தை/ ஜனநாயகத்தை உருவாக்கமுடியாது. முதலாளித்துவத்தின் மூலமா விடுதலை பெறுவோம்னு நம்பிக்கையூட்டுவது எப்படிப்பட்டது தெரியுமா? அணுகுண்டுகளின் மூலமா உலகை அமைதிப்பூங்காவாக்குவோம்னு உத்தரவாதம் கொடுப்பது மாதிரி தான். கறுப்பு முதலாளித்துவத்தின் மூலமா அமெரிக்க கறுப்பின மக்களுக்கும் விடுதலை கிடைக்கப்போறதுல்ல. கறுப்பு முதலாளித்துவத்திலிருந்து ஊக்கம் பெற்ற தலித் முதலாளித்துவத்தின் மூலமா தலித் மக்களும் விடுதலை பெறமுடியாது. ஒரு பிரிவு சூத்திரர் பெரும்பாலான சூத்திர மக்களோட உழைப்பைச் சுரண்டுறதன் மூலமா எல்லா சூத்திரர்களுக்கும் விடுதலையை பெற்றுத்தர முடியுமா? சூத்திர முதலாளித்துவத்தின் மூலமா சூத்திரர்களும் விடுதலை பெற முடியாது. தலித்துகள் விடுதலை பெறாம சூத்திரர்களும் விடுதலை பெறமுடியாது. நீங்க என்ன தான் சீர்திருத்தம் செஞ்சாலும் அநீதியான, காலாவதியான முதலாளித்துவத்தை வெச்சு சூத்திரர்களோ, தலித்களோ விடுதலை பெறமுடியாது. தலித் முதலாளிகள் சாதிய முதலாளித்துவத்தை இன்னும் சரியா புரிஞ்சுக்கல. அதுனால தான் அவங்க முதலாளித்துவத்தாலயே சாதியை ஒழிச்சுடலாம், மூலதனத்தால சாதியை வீழ்த்திடலாம்னு நெனைக்கிறாங்க. தலித் முதலாளித்துவத்தின் மூலமா தலித்துகள் விடுதலை பெறமுடியும்னு நம்புறாங்க. பழைய ஒடுக்குமுறைக்கு தீர்வா அவங்க புதிய ஒடுக்குமுறைய முன் வைக்கிறாங்க. ஆனா புதிய ஒடுக்குமுறையிலும் பழைய ஒடுக்குமுறை தான் தொடருது. இந்தியாவோட முதலாளித்துவம் சாதி பாக்காத “சமூக நீதி” முதலாளித்துவம் கெடையாது. முதலாளித்துவத்துக்கு ஏதுங்க சமூக நீதின்னு கேக்குறீங்களா. அதுவும் சரிதான். முதலாளித்துவத்துக்கு சமூக நீதி இருந்துருந்தா நாமெல்லாம் இப்புடியா சந்தியில நிப்போம்? அதுவும் இந்தியாவோட முதலாளித்துவம் சாதியிலே ஊறி ஊறி வளந்த சாதிய முதலாளித்துவம். சூத்திரர்கள், தலித்துகளோட உழைப்பைச் சுரண்டி நன்னா ருசிகண்ட முதலாளித்துவம். அமோகமான உழைப்புச்சுரண்டலுக்கும், அமோகமான லாபத்துக்கும், அமோகமா அவா வாழுறதுக்கும் சாதி ட்ரிபிள் கேரண்டி குடுக்கும் போது முதலாளித்துவம் சாதியை அவ்வளவு சுலுவா விட்டுக்கொடுக்குமா? அவா ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டா. நீர் முதலாளித்துவத்தை நன்னா புரிஞ்சுண்டு இருந்தேள்னா நோக்கு மொதல்ல இப்புடிப்பட்ட ஒரு கேள்வியே தோணிருக்காதோல்லியோ. இந்தியாவோட சாதிய முதலாளித்துவத்தை அவ்ளோ ஈசியா எடைபோடாதேள்.

(தொடரும்)

 

பொம்மையின் வலி:


பாப்பா 'பொம்மை'யின் அர்த்தம் பொய்மையாம்

பொய்மை தான் பொம்மை ஆனதாம்

சொல்கிறார்கள் அவர்கள்

சிறியவர்களின் வலி சிறியவரே அறிவர்

பொம்மைகளின் தன்னுணர்ச்சியைக் குழந்தைகளே அறிவர்;

குழந்தமை புரியாதவர்களுக்கு பொம்மை மொழி புரியுமா?

இல்லை புரியவைக்கத்தான் முடியுமா

நான் என்ன பொய்யானவளா பாப்பா

எனக்கு ஏன் இந்தக் களங்கம் பாப்பா

நொடிக்கு நொடி மாறுபவர்கள் எப்பொழுதும்

குழந்தையாய் இருக்கும் என்னைப் பொய்யனாக்கியது வேடிக்கை தானே பாப்பா!

நீ கதைகள் சொன்னதும் நான் உம் கொட்டியதும்,

நாம் கண்ணில் நீர் வர சிரித்து மகிழ்ந்ததும் பொய்யா!

நீ என்னைத் தாலாட்டியதும் நான் உன் மடியில் தூங்கிப் போனதும் பொய்யா பாப்பா

நாம் பட்டாம்பூச்சியாய் பறந்துத் திரிந்ததும்,

பாடி ஆடி மகிழ்ந்ததும், குதியாட்டம் போட்டுக்

கும்மாளமிட்டதும் பொய்யா பாப்பா

எத்தனை சேட்டைகள், எத்தனைக் குறும்புகள்

எத்தனை பொம்மலாட்டங்கள், எத்தனை ஊஞ்சலாட்டங்கள்

அப்போது அவர்கள் பணத்தை அல்லவா எண்ணிக் கொண்டிருந்தார்கள்

நாம் தத்தி தத்தி தவ்வி தவ்வி வீறிட்டதும் கிரீச்சிட்டதும்

சின்னப்பந்துகளாய் உருண்டோடியதும் பொய்யா பாப்பா

எத்தனை எத்தனை விளையாட்டுகள், கொண்டாட்டங்கள்

நீ என் தலை வாரும் போது நான் தூங்கிப்போனேன் பின் கண்விழித்ததும் நான் உன் மூக்கைக் கடிக்கையில் நீ என்னை முத்தமிட்டாய்,நீ உன் கைகளால் என் முகத்தை ஏந்துவாய் நான் மின்மினியாய் கண்ணை சிமிட்டுவேன், நீ நாக்கைத் துருத்தி அழகு காட்டுவாய், நான் கெக்கலிப்பேன், நீ வெவ்வெ காட்டுவாய்

நான் செல்லமாய் சிணுங்குவேன், நீ முழியை உருட்டி தலையை ஆட்டி பயமுறுத்துவாய், நான் முகத்தை மூடிக் கொள்வேன், நீ பல்லைக் கடித்து கண்ணை விரித்து என்னை நடுநடுங்க செய்வாய், நான் முகத்தைத் திருப்பிக் காய் விடுவேன், நீ என் கண்ணை மூடிப் பழம் விடுவாய்,பின் நாம் மிட்டாய்களைத் தின்று சப்புக் கொட்டுவோம், சொட்டான் போடுவோம்

நாம் அவுக் அவுக் என்று தின்பண்டங்களை அமுக்குவோம்

நீ வீட்டு முகப்பில் சாலையோரம் செல்பவர்களை பயமுறுத்த

சோளக்கொல்லை பொம்மை போல் குட்டிப்பேயாய் நிற்பாய்

நாம் என ஊளையிடுவோம்

யாருமே பயப்படவில்லை என்று இரண்டு கால்களையும் மாற்றி மாற்றித் தொப்பென்று அடித்தவாறு அழுதுகொண்டே வீட்டுக்குள் ஓடடுவாய், நான் சமாதானப்படுத்தி சோறூட்டுவேன்,

உன்னை சீராட்டுவேன், நீ சொக்கிப் போவாய்

நாம் படுத்தவாறே தட்டிலுள்ளப் பாலை லப் லப் எனக் குடிப்போம், பின் லாவுவோம் பிடிப்போம், குட்டிக் கரணம் அடிப்போம்,

இதெல்லாம் இவர்களுக்குத் தெரியுமா என்ன...

நான் உன் மியாவ் மியாவ் பூனைக்குட்டி!

நீ என் வவ் வவ் நாய்க்குட்டி, நான் உன் நான் உன் மே மே ஆட்டுக்குட்டி! நீ என் வீ வீ பன்னிக்குட்டி, நான் உன் கிரிச் கிரிச் அணில்குட்டி, நீ என் வீச் வீச் முயல்குட்டி!

நான் சுட்டி பொம்மை நீ சேட்டைக்காரி

நீ என் செல்லப்பாப்பா, நான் உன் சிண்டானிக் கண்ணு

நீ என் பொம்மக்கா நான் உன் பொம்மக்குட்டி

அவர்கள் பாப்பாவை எப்பவுமே அழவைக்கிறார்கள்

நான் தானே பாப்பாவை எப்பவுமே சிரிக்கவைக்கிறேன்

அவர்களுக்கு பாப்பா செல்லம், ஆனால் பாப்பாவுக்கு நான் தானே செல்லம், இது கூடவா தெரியாது இவர்களுக்கு

இல்லை தெரிந்ததால் தான் என் மேல் பொறாமையா

இவர்களுக்கு விளையாடத் தெரியுமா பாப்பா, அதை விட முக்கியமானது அப்படி என்ன இருக்கிறது, வேலைக்குப் போகிறார்களாம், படிக்கிறார்களாம், எழுதிக் குவிக்கிறார்களாம், எவ்வளவு வேடிக்கையானவர்கள் இந்தப் பெரியவர்கள், சிடுசிடுப்பானவர்கள்,சிரிக்கத் தெரியாதவர்கள்,

நம்மையும் எந்திரமாக்கப் பார்க்கிறார்கள்

பாப்பா நீ பெரியவளாகிவிடாதே நாம்

சின்னவர்களாகவே இருப்போம்

நீ என் செல்ல பாப்பா நான் உன் சிண்டானிக் கண்ணு

நீ என் பொம்மக்கா, நான் உன் பொம்மக்குட்டி

என்னை மோசம் செய்துவிடாதே பாப்பா

நீ பெரியவளாகிவிடாதே நாம் எப்போதும்

குழந்தைகளாகவே இருப்போம் பாப்பா

வா பாப்பா விளையாடுவோம்

நீ என் பொம்மக்கா நான் உன் பொம்மக்குட்டி..

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...