யாக்ஞவல்கியா, நாரதா, பிரிஹஸ்பதி, காத்யாயனா இவர்கள் அனைவராலும் சொல்லப்படுவது என்னவென்றால் ஒரு ஆண் பெற்றக் கடனை அவருடைய மகன், பேரன், கொள்ளுப்பேரன் ஆகிய மூன்றுதலைமுறை வாரிசுகள் அவர்களுக்கு குடும்ப சொத்துக்கள் இருந்தால் அடைக்கக் கடமைப்பட்டவர்கள். ஆனபோதும் கொள்ளுப்பேரனுக்கு இத்தகைய கடமை உள்ளதா என ஐயம் எழுகிறது. நாரதாவால் உருவாக்கப்பட்ட விதியின்படி தந்தை பெற்றக்கடனை மகன் அடைக்கவில்லையென்றால் பேரன் அந்தக் கடனை அடைக்கவேண்டும். ஆனால் அத்தகைய கடமை நான்காம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசை சேராது. கடன் பெற்ற நபர் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர், மகன் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர், பேரன் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே நான்காம் தலைமுறையைச் சேர்ந்த கொள்ளுப்பேரன் கடனை அடைக்கக் கடமைப்பட்டவர் அல்ல. நாரதாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கவுரையில் பாடலிபுத்திராவில் (நவீன பாட்னா, பீஹாரின் தலைநகர்) நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட ஒரு சுவாரஷ்யமான சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழக்கின் சுருக்கம் பின்வருமாறு:
பாடலிபுத்திராவில்
செல்வமிக்க வணிகரா இருந்த ஸ்ரிதரா என்ற பிராமணர் தேவதரா என்ற வணிகருக்கு மாதத்திற்கு
2% வட்டியுடன் 10,000 டிரம்மாக்களை (வெள்ளி நாணயங்களை) கடனாகக் கொடுத்துள்ளார். தேவதரா
ஒரு மாதம் ஆனபிறகு 200 டிரம்மாக்களை வட்டியாகக் கொடுத்துள்ளார். இரண்டாவது மாதத்தில்
தேவதரா விபத்தில் இறந்துவிடுகிறார். அவரது மகனும் காலராவால் இறந்துபோகிறார். தேவதராவின்
கொள்ளுப் பேரனான மஹிதரா மட்டும் தான் உயிர்பிழைக்கிறார். அவர் மிகவும் இளையவர், சூதாட்டம்
போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையானவர். அவருடைய சொத்துக்கள் அவரது தாய் மாமன்களின்
பாதுகாப்பில் இருக்கு. தன்னை ஒரு சிறந்த நீதிமானாகக் கருதிய ஸ்மர்ததுர்தரா என்ற பிராமணர்
அவர்களுக்கு பின்வரும் ஆலோசனையை கொடுத்துள்ளார். கடன் கொடுத்த ஸ்ரிதராவுக்கு 1 ரூபாய்
கூட கொடுக்காதீங்க, பொருத்தமான உரைகளை மேற்கோள் காட்டி நான் உங்களை பாதுகாக்குறேன்
என்று கூறியுள்ளார். அதற்கு மஹிதராவின் தாய் மாமன்கள் நீங்க எங்களை காப்பாத்துனீங்கன்னா
ஒங்களுக்கு 1000 டிரம்மாக்களை பரிசாகக் கொடுக்குறோம்னு சொல்லிருக்காங்க. கடன் வாங்குனதிலிருந்து
இரண்டாவது மாதம் முடிந்தபிறகு தாய் மாமன்களிடம் இரண்டாவது மாதத்திற்கான வட்டியா
200 டிரம்மாக்களை கொடுங்கன்னு ஸ்ரிதரா கேட்டுள்ளார். அதற்கு அவங்க மஹிதரா கொள்ளுப்பேரனா
இருக்குறதால உங்களால அசலைக் கூட திரும்பக் கேட்க முடியாது வட்டியைப்பற்ற சொல்லவே வேண்டியதுல்ல
என்று பதில் அளிச்சுருக்காங்க.
தாத்தாவின்
கடனை பேரன் அடைக்கவேண்டும், கடனில் அவர்களின் பங்கை அடைக்கவேண்டிய கடமைப்பட்டவர்கள்
என்று நாரதா கூறியுள்ளதாகவும், தந்தை நரகத்துக்கு செல்லாதவாறு, கடனிலிருந்து தந்தையை
விடுவிக்க எல்லா முயற்சிகளையும் மகன் செய்யவேண்டும் என்று மிதாக்ஷரா கூறியுள்ளதாகவும், மேலும் மகன்கள் ஒன்றாக வாழ்ந்து அதில் ஒரு மகன்
கர்த்தா-நிர்வாகியாக இருந்தால் அவர் தான் கடனை அடைக்கவேண்டும்,, மகன்கள் பிரிந்து வாழ்ந்தால்
அவர்களின் பங்கிற்கேற்ப கடனை அடைக்கவேண்டும் என்றும் மிதாக்ஷரா கூறியுள்ளதாகவும், தாய்மாமன்களின்
சட்ட ஆலோசகரான ஸ்மர்ததுர்தரா தெரிவித்துள்ளார்.
(தொடரும்)