Saturday, October 21, 2023

சூதாடும் காட்டேரி (64):

சூதாடும் காட்டேரி (64):

இயல்பான வட்டி விகிதம் மாதத்திற்கு 1 ¼ சதவிகிதமாக இருக்கவேண்டும் என்றும், வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு அதாவது வணிகர்களின் தொழில்வணிகத்திற்காக பணம் கொடுக்கும் போது மட்டும் மாதத்திற்கு 5% வட்டி அனுமதிக்கப்படும் என்று கௌதமா பரிந்துரைத்துள்ளார். சாதிகளின் அடிப்படையிலான பாகுபாடான விதிமுறையை அவர் பரிந்துரைக்கவில்லை.

காடுகளின் வழியாக பயணம் செய்பவர்கள் 10% வட்டி செலுத்தவேண்டும். கடல்வழியே பயணம் செய்பவர்கள் 20% வட்டி செலுத்தவேண்டும் என யாக்ஞவல்கியஸ்மிருதியில் சொல்லப்பட்டுருக்கு.

வட்டிக்கு கடன் வாங்குபவர்கள் காடுகள் வழியே செல்லும்போது அவர்களது உயிருக்கும், சொத்துக்கும் ஆபத்து நேரிடும் அதனால் மாதத்திற்கு 10% வட்டி செலுத்தவேண்டும், கடல் வழியே செல்பவர்களுக்கும் முதலை இழக்கும் ஆபத்து உள்ளதால் மாதத்திற்கு 20% வட்டி செலுத்தவேண்டும். இந்த விதிமுறை ஆபத்து அதிகமுள்ள தொழில்வணிகங்களுக்குக் கடன் வழங்கும் போது அதிக வட்டிபெறுவதை அனுமதிக்கிறது என்று இது குறித்து விளக்கம் அளிக்கப்படுது.

கடல் பயணங்களில் நிபுணத்துவம் உள்ளவர்களால் இடம், நேரம், சம்மந்தப்பட்ட பொருட்கள் அடிப்படையில் அதில் கிடைக்கும் லாபத்தைக் கணக்கிடமுடியும் அவர்களால் நிர்ணயிக்கப்படும் வட்டிவிகிதம் சட்டப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்று மனு கூறியிருக்கார்.

 

த்வைகுன்யா அல்லது தம்துபட் விதி:

கடனாளியிடமிருந்து கடனளித்தவர் ஒரு நேரத்தில் வாங்க அனுமதிக்கப்படும் அதிகபட்ச வட்டிவிகிதம் குறித்த விதிமுறைகள் ஸ்மிரிதிகளில் கூறப்பட்டுள்ளன.

மனுஸ்மிருதியில் (மனு VIII-151) பணப் பரிவர்த்தனைகளில் ஒருமுறை அளிக்கப்படும் வட்டி ஒருபோதும் முதலை விட அதிகமாக இருக்கக்கூடாது (கட்டவேண்டிய நேரத்தில் அவ்வபோது அளிக்கப்படும் கட்டணங்கள் இதற்குப் பொருந்தாது) எனக் கூறப்பட்டிருக்கு.

இந்த விதி ஒரே மாதிரியாகத்தான் எல்லா ஸ்மிருதிகளிலும், தர்மசாஸ்திரங்களிலும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதி பழைய சட்ட உரைகளில் பொதுவாக த்வைகுன்யா விதி என்று அழைக்கப்படுகிறது. பேச்சுவழக்கில் தம்துபட் என அழைக்கப்படுகிறது. இந்த விதி இன்று வரை கடன் சார்ந்த இந்துசட்டங்களின்படி நடைமுறையில் உள்ளதாக  ரமா ஜோய்ஸ் கூறுகிறார்.

பணம் அல்லது தங்கத்தில் அளிக்கப்படும் கடன்களுக்கே மேற்கூறிய விதிமுறைகள் பொருந்தும். பொருட்களில் அளிக்கப்படும் கடன்களுக்கு  வெவ்வேறு உயர்ந்தபட்ச விகிதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. த்வைகுன்யா விதி முதன்மையானதாகவும் முக்கியமான ஒன்றாகவும் இருந்துள்ளது. இவ்விதி எதைக் குறிக்கிறது என்றால் ஒரே நேரத்தில் மொத்தமாக வசூலிக்கப்படும் வட்டித்தொகை அசல் தொகையை விட அதிகமாக இருக்கக்கூடாது. இந்த விதி நடைமுறையாகும் போது வட்டி தொடர்ச்சியாக வசூலிக்கப்படாவிடில் எந்தத்தேதியில் அது அசலுக்கு சமமாகிறதோ அன்றிலிருந்து அசலுக்கு வட்டிசேருவது நின்றுவிடும். இந்தவிதி சேர்ந்த வட்டித்தொகைகளுக்கு மட்டுமே பொருந்தும். புதிய கடன் பத்திரத்தின் மூலம் முதலையும், வட்டியையும் சேர்த்து புதிய முதலாக ஆக்கப்படும் சந்தர்ப்பங்களுக்கு இது பொருந்தாது.

 (தொடரும்)


No comments:

Post a Comment

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...