குக்கு: ஆமாம்பா, உண்மையான இயற்கை ஆர்வலர்கள் வேட்டையாடமாட்டாங்க…
குக்குவின் அப்பா: ரூஸ்வெல்ட் கரடியை சுட மறுத்த சம்பவம்
அவரின் இரக்கச் செயலாக, செய்தி அமெரிக்கா முழுவதும் காட்டுத்தீ போல் பரவுச்சாம். 1902
நவம்பர் 16இல் தி வாஷிங்டன் போஸ்ட்டில் அரசியல் கார்ட்டூனிஸ்ட் கிளிஃபோர்ட் பெர்ரிமேன்,
தலையங்கத்துல அந்த நிகழ்வை விளக்கும் விதமா பரபரப்பான கார்ட்டூனைத் தயாரித்து வெளியிட்டுருந்தாராம்.
அது அனைவரின் கவனத்தையும் பெற்றதாம். சில ஆதாரங்களின்படி, அந்த கார்ட்டூன், ரூஸ்வெல்ட்
கரடியை சுட மறுத்ததை மட்டுமல்ல, மிசிசிப்பிக்கும் லூசியானாவிற்கும் இடையிலான எல்லைப்
பிரச்சனையைக் கையாண்டதையும் குறிப்பிடும் விதமாக “மிசிசிப்பியில் கோடு வரைதல்"
என்று தலைப்பிடப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கு, மற்ற ஆதாரங்கள் கார்ட்டூன் இன உறவுகளில்
அதிபரின் முற்போக்கான நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுவதாக கூறியிருக்கு. முதலில் கிளிஃபோர்ட்
பெர்ரிமேன் பெரிய கரடிய தான் வரைஞ்சிருந்தாராம், அதற்கப்புறம் தான் அழகான குட்டிக்
கரடிய வரைஞ்சாராம்.
நியூயார்க்கின் புரூக்ளினில் மிட்டாய் கடை வெச்சிருந்த ரோஸ்,
மோரிஸ் மிக்டோம் தம்பதியினரும் இதை பார்த்துருக்காங்க. மோரிஸ் மிக்டோம் ரஷ்யாவை சேர்ந்தவராம்.
ரூஸ்வெல்ட்டின் இரக்கமான செயலை கௌரவிக்கும் வகையில் ஒரு கரடி பொம்மையை உருவாக்கி தங்களின்
மிட்டாய் கடையின் ஜன்னலில் காட்சிப்படுத்த அவங்க ரெண்டு பேரும் முடிவு செஞ்சாங்க. அவங்க
சில துணி துண்டுகளை வெட்டி இரண்டு பொத்தான்களை கண்களாக வெச்சு தைச்சு அழகான கரடி பொம்மையை
செஞ்சாங்க. அந்த பொம்மைக்கு டெடியின் பியர்னு பேரு வெச்சு அவங்களோட மிட்டாய் கடை ஜன்னலில்
காட்சிக்கு வெச்சாங்க. அது ஒரே இரவுல எல்லாராலும் விரும்பப்பட்டு வரவேற்பு பெற்றுருக்கு.
ரூஸ்வெல்ட்டிடம் கரடி பொம்மைக்கு டெடி என்ற பெயரைப் பயன்படுத்தலாமானு மிட்ச்டோம்ஸ்
அனுமதி கேட்டுருக்காரு. ரூஸ்வெல்ட் பெயர் வைக்கலாம்னு ஒப்புதல் கொடுத்தாராம். அதிலிருந்து
அவங்க மிட்டாய் கடை, பொம்மைக் கடையா மாறிடுச்சாம். ஆரம்பத்துல அந்த நிறுவனத்துக்கு
ஐடியல் நாவெல்ட்டி & டாய் கோ என்று பெயர் வெச்சாங்க. அந்த பொம்மைக்கடைய பிறகு ஐடியல்
நாவெல்ட்டி என்ற பேருல 1997 வரைக்கும் அவங்க வெற்றிகரமா நடத்திருக்காங்க. அவங்க மூலமா
தான் டெடி பியர் கொஞ்சி விளையாடுற செல்லக்குட்டியா எல்லாரோட வீட்டுக்கும் வந்துச்சு.
ரூஸ்வெல்ட்டை கௌரவப்படுத்தும் விதமாகத் தான் கரடிபொம்மைக்கு டெடினு பேர் வெச்சுருக்காங்க.
இது மட்டுமில்லாம டெடி நாள் ஒவ்வொரு ஆண்டும் ஃபிப்ரவரி 10 அன்று காதலர் வாரத்தில் கொண்டாடப்படுது.
கரடி பொம்மைக்கு டெடி பியர்னு பேரு வந்த கதை இது தான். என்ன குக்கு உனக்கு இந்தக் கதை
பிடிச்சுருந்துச்சா…
குக்கு: முடிவு நல்லாருந்துச்சுப்பா,
ஆரம்பம் தான் சரியில்லை. அவங்க கரடி வேட்டைக்கு போனது எனக்கு பிடிக்கல… வேட்டையாடுன
கரடி தான் டெடி பியரா மாறுனுச்சுங்கறத நெனைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா…
டெடி பியருக்கு பின்னாடி இப்படி ஒரு சோகக் கதை ஒளிஞ்சிருக்கும்னு நான் நெனச்சே பார்க்கல…
குக்குவின்
அப்பா: உன் போன்ற குழந்தைகள போல எல்லாரும் விலங்குகள், பறவைகள்கிட்ட அன்பா இருந்தா மட்டும்
தான் அவங்களால மகிழ்ச்சியா வாழமுடியும்…
(தொடரும்)
No comments:
Post a Comment