Saturday, September 30, 2023

சூதாடும் காட்டேரி (55):

 

கடனுக்கு மாதத்திற்கு 5%க்கு மேல் வட்டி வாங்குவது மனுதர்மத்துல தடைசெய்யப்பட்டுருக்கு. நாரதாவும் மனு கூறுவதைப் போன்ற விதிகளைத்தான் பரிந்துரை செய்துருக்கார். மனுவின் விதிகள் 140, 141, 142க்கு அளிக்கப்பட்ட விதிகள் குல்லுகா, மற்றும் பிற தெளிவுரையாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டுருக்கு. அதன்படி மனுவின் 140வது விதியின் அடிப்படையிலான குறைந்த வட்டிவிகிதம் பிணையத்துடன் கூடிய பாதுகாக்கப்பட்டக் கடன்களுக்கு பொருந்தும். பாதுகாக்கப்படாதக் கடன்களுக்கு விதி 142 பொருந்தும். இந்தக் கண்ணோட்டம் யாக்ஞவல்கியரால கூறப்படுவதுடனும் பொருந்தக்கூடியதாக இருக்கு.

வேதங்களிலும் மனுஸ்மிருதியிலும் பல்வேறு பணக்கடன் வழங்கும் நடைமுறைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் முதல் கடன் 4000 ஆண்டுகளுக்கு முந்தையது. கிமு 2000 மற்றும் 1400 க்கு இடைப்பட்ட வேத காலத்தில் கடன்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தனது கட்டுரையில் எரிக் துசைன் குறிப்பிட்டுள்ளார்.

கிமு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து, கடன்கள் பணமாகவும் பொருளாகவும் நீட்டிக்கப்பட்டது. பௌத்யானா, கௌதமர் மற்றும் வேறு சில சட்டமியற்றுபவர்களால் எழுதப்பட்ட நூல்களில் கந்து வட்டி விகிதங்களை வசூலிப்பது ஒழுக்கக்கேடானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்துறை கல்வி ஆய்வுக்கான சர்வதேச இதழில் 2022ல்  பிஎஸ் ஃபரிதா அவர்கள் “கந்துவட்டி நடைமுறை: பண்டைய இந்தியாவில் பணம் கடன் வழங்கும் அமைப்பின் சமூக-பொருளாதாரக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுருக்காங்க. அதில் அவர் கூறியுள்ளவை பின்வருமாறு:

பழங்கால இந்திய சமஸ்கிருத நூல்கள் குசிதா, வர்துசா, விருத்தி மற்றும் வியாஜா போன்ற பல்வேறு சொற்களால் வட்டி அல்லது வட்டி பற்றிய கருத்தை தெரிவிக்கின்றன. இந்த சொற்கள் சட்டமியற்றுபவர்களால் வேறுபடுத்தப்படாமல் பயன்படுத்தப்பட்டதால், அவர்கள் அவற்றில் ஒன்றை கந்துவட்டிக்காகவும் மற்றொன்றை வட்டிக்காகவும் பயன்படுத்தினார்களா என்பதை நிறுவுவது கடினம். இருப்பினும், கந்துவட்டி தார்மீக, சமூக உணர்வுகளின் அடிப்படையில் தடைசெய்யப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், பௌதாயனா என்ற சட்டமியற்றுபவர் வட்டி வாங்குவதை தாழ்ந்த செயலாகக் கருதி, அது வைசியர்களின் வாழ்வாதாரத்திற்கான ஆதாரமாக பரிந்துரைக்கிறார், பிராமணன் அத்தகைய செயலில் ஈடுபடுவதைத் தடை செய்கிறார். ஒரு பிராமணன் அத்தகைய செயலில் ஈடுபட்டால்  அவர் ஒரு சூத்திரனாகத் தாழ்வாகப் பார்க்கப்படுவார். மேலும் ஒரு பிராமண வட்டிக்காரன் (வர்துசிகன்) சூத்திரனாக கண்டனம் செய்யப்படுவார், அவர் ஒரு வைசியனாகக் கூட நடத்தப்படமாட்டார். ஒரு பிராமணனின் கொலை அல்லது கருக்கலைப்பைக் காட்டிலும் கந்துவட்டி மிகவும் மோசமானதாகக் கருதப்பட்டது. மௌரியர்களுக்குப் பிந்தைய காலத்தின் மிக முக்கியமான சட்டமியற்றுபவரான மனு, ஒரு பிராமனரோ அல்லது க்ஷத்ரியரோ வறியநிலையில் கூட வட்டி வாங்குவதில் ஈடுபடக்கூடாது, ஆனால் சட்டத் தேவைக்காக (தர்மர்த்தம்) சராசரித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு (பாப்பியாசே) கொஞ்சம் வட்டி கொடுக்க வேண்டும் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறுகிறார். நாரதர் இந்த நடைமுறையை க்ஷத்திரியனுக்கு ஆதரவாக ஒப்புக்கொள்வது போல் தெரிகிறது, ஆனால் ஒரு பிராமணன் ஒருபோதும் வட்டியை நாடக்கூடாது, துன்பத்தின் உச்சக்கட்டத்தில் கூடக் கூடாது என்று கூறுகிறார். மற்றொரு சட்டமியற்றுபவரான பிருஹஸ்பதி, ஏழைகளின் நிலையைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் சுமையை நான்கு மடங்காக, எந்தத் தயக்கமுமின்றி எட்டு மடங்காக உயர்த்தியதால், கந்துவட்டிச் செயலை மனிதாபிமானமற்ற செயல் என்று கண்டிக்கிறார்.

 (தொடரும்)

 

 

 

 

 

 

 

 

Friday, September 29, 2023

பணம் பேசுறேன் (55):

 


டெலாய்ட்டின் 'பணியிடத்தில் மனநலம் 2022' கணக்கெடுப்பின்படி, 59 %க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் மனச்சோர்வு தொடர்பான அறிகுறிகள் - சோகம், கேளிக்கை நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல், சோர்வு, கவனம் இல்லாமை மற்றும் முடிவெடிப்பதில் தீர்மானமின்மை - இத்தகைய மனநலக்குறைவுக்கான அறிகுறிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்களில் உள்ள 12 முதன்மைத்துறையைச் சேர்ந்த தொழிற் சாலைகளில் பணிபுரியும் 3,995 ஊழியர்களிடம் இந்த ஆய்வு செய்யப்பட்டது.

பணியிடங்களில் அதிக மன உளைச்சல் ஏற்படுவதற்கு முதலாளித்துவம் எப்படி எதிர்வினையாற்றிருக்கு. பெரும் பணியிடங்கள்ல உழைப்புச்சுரண்டலை நேர்மறையாகப் பார்க்கும் அனுகுமுறையாகவும், உழைப்புச்சுரண்டலை மேலும் அதிகப்படுத்தும் விதமாகவும் மனதை ஒருமுகப்படுத்தும் தியானப்பயிற்சிகள், ஆளுமைத்திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகள் போன்ற கண்துடைப்பு நாடகங்கள் மூலமாக உழைப்புச்சுரண்டல் இயல்பாக்கப்படுது.

தியானம் மற்றும் ஓய்வெடுக்கும் நுட்பங்கள் போன்ற மனநலப் பயிற்சிகளுக்கு உதவும் செயலிகளுக்கு ஸ்டார்பக்ஸ் இலவச சந்தாவை வழங்கியபோது ஊழியர்கள் அளித்த வைரலான பதில் என்ன தெரியுமா? "நாங்கள் தியானச் செயலியைக் கேட்கவில்லை, எங்கள் வாடகையைச் செலுத்த நாங்கள் விரும்புகிறோம்" என்பது தான்.

 சுரண்டல்ல நல்ல சுரண்டல், கெட்ட சுரண்டல்னு இருக்கா, ஆனா முதலாளித்துவம் சுரண்டலை நேர்மறை அனுகுமுறையோட தான் பார்க்கசொல்லுது. துணி துவைக்கிற பவுடரை விற்க கறை நல்லதுனு விளம்பரப்படுத்துற மாதிரி உழைப்புச் சுரண்டல் நல்லது, மன அழுத்தம் நல்லது என்று விளம்பரம் செய்யுது முதலாளித்துவம். இரண்டு வழிமுறைகள்ல முதலாளித்துவம் உழைப்புச்சுரண்டலை அதிகரிச்சுகிட்டே இருக்கு. ஒன்னு குட்டி குட்டி வேலை வாங்குறது, இன்னொன்னு தட்டிக்கொடுத்து வேலைவாங்குறது.

தட்டிக்கொடுத்து வேலைவாங்குனா ஊழியர்களிடம் சுரண்டப்படுகிறோம் என்ற உணர்வைக் கொடுக்காமலே எளிதாக கூடுதலாக சுரண்டலாம். அந்த மாதிரி மன அழுத்தத்துலே நல்ல மன அழுத்தம் ‘eustress’, or good stress’ என்று புதுசா ஒன்ன கண்டுபிடிச்சதா தயார்பண்ணிருக்காங்க. இதன் மூலம் பணியாளர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கமளிக்கவும், உற்பத்தி செயல்திறனை மேம்படுத்தவும் முடியும் என்று கூறப்படுது.

மனிதவளத்துறையில்-‘HR’ உள்ளவங்க பல்வேறு தலையீடுகள் மூலம் பணியாளர்களின் மன அழுத்தத்தை-யூஸ்ட்ரஸை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது; வேலை செய்யும் வேகத்தை அதிகரிக்கனும், பணிச்சுமையை அதிகரிக்கனும், வேலையின் சிக்கலான தன்மையை அதிகரிக்கனும் மேலும் பிற தொழில்சார் காரணிகள் மூலம் நேர்மறையான சவால் அழுத்தங்களை கொடுக்கனும் என்று அறிவுறுத்தப்படுது,

இத்தகைய பணியிட தலையீட்டு முயற்சிகள் வேலை செய்வதோடு மட்டுமல்லாமல் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் தருவதாக ஆய்வுக்கட்டுரைகள்ல கூறியிருக்காங்க.

எலிகள்ல செய்யப்பட்ட சோதனைகளில் மன அழுத்தத்திற்கும் செயல்திறனுக்கும் இடையே ஒரு தலைகீழ் ‘U’ வடிவ அல்லது மணி வடிவ (bell shaped) உறவு காணப்படுவதாக உளவியலாளர்கள் யெர்கெஸ்,டாட்சன்  இருவரும் கண்டுபிடிச்சாங்கலாம். இது 'யெர்கெஸ்-டாட்சன் விதி என அழைக்கப்படுது. இதன்படி மன அழுத்தம் அதிகரிக்கும் போது ஆரம்பத்தில் செயல்திறன் குறைஞ்சாலும், மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் போது செயல்திறன் அதிகரிக்குதாம். மன அழுத்தத்தை அதிகரிக்காவிடில் பணியிடத்தில் சோர்வு ஏற்பட்டு, செயல்திறன் குறையும் அதனால் பணியிடங்களில் மன அழுத்தத்தை அதிகரிக்கவேண்டும் எனப் பலக் கட்டுரைகள்ல வலியுறுத்தப்பட்டுருக்கு. உழைக்கும் மனிதர்கள இயந்திரங்களைப் போலக் கருதும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் மட்டும்தான் இத்தகையக் கட்டுரைகளை வெளியிடமுடியும். மன அழுத்தம் அதிகரிச்சு மனுசங்க செத்தா அவங்களுக்குக் கவலை கிடையாது, எப்படியாவது செயல்திறனை அதிகரிக்கனும், லாபத்தை அதிகரிக்கனும் என்பதுதான் ஒரே குறிக்கோளா இருக்கு. இத்தகைய முதலாளித்துவத்தை இப்படியே நீடிக்கவிட்டா என்ன நடக்கும்னு யோசிச்சுப்பாருங்க. மனிதர்களுடைய சமூகப்பண்புகளையெல்லாம் வெட்டி அவங்கள தனிமைப்படுத்தி எல்லோரையுமே மனநோயாளிகளாக்கிவிடும்.  மனிதர்களின் பரிணாம வளர்ச்சி முன்னோக்கி நடக்காது முடக்கப்படும்.  இதுவரை நடந்த பரிணாம வளார்ச்சியையெல்லாம், சிதைச்சு, பின்னோக்கிய பரிணாம சீரழிவிற்குத் (retrogressive evolution) தான் வழிவகுக்கும்.

(தொடரும்)

Thursday, September 28, 2023

சூதாடும் காட்டேரி (54):

 


வட்டியின் பல்வேறு வகைகள்:

5.   ஷிகாவிரித்தி:

கடனுக்கான முதலை அடைக்கும் வரை தினசரி அளிக்கப்படும் வட்டி ஷிகாவிரித்தி என அழைக்கப்படுது. ஷிகா என்றால் முடி என்று பொருள். முடி தினசரி வளர்கிற மாதிரி வட்டியும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வளர்வதால ஷிகாவிரித்தி என பெயரிடப்பட்டுருக்கு.

6.   கரிதா:

கடன் வாங்குபவர் வேறுவகையில கடனுக்கான வட்டியை செலுத்த ஒப்புக்கொள்வது கரிதா என அழைக்கப்படுது.

வட்டி விகிதம்:

கடன் ஒப்பந்தத்தில் பங்கேற்கும் இரு தரப்பினரும் பரஸ்பரமாக ஒப்புக்கொள்ளுவதன் அடிப்படையில் வட்டி விகிதம் இருக்கனும் என்பதுதான் பொதுவிதியா இருக்கு. ஆனபோதும் இந்த விதியின் கீழும் வட்டியைத் திரும்பப் பெறுவதன் மீது பல கட்டுப்பாடுகள் இருக்கு.

இது குறித்து மனுதர்மத்துல என்ன சொல்லப்படுதுன்னா:

பணத்தைக் கடனாகக் கொடுப்பவர்(வர்துஷிகா) வஷிஸ்தா அனுமதிக்கும் வட்டி விகித அளவில் முதலுக்கான வட்டியைப் பெறலாம். மாதாந்திரமாக 100ல் 80வது பகுதியாக, அதாவது மாதத்திற்கு 1 ¼ சதவீதமும், வருடத்திற்கு 15% வட்டியும் பெறலாம்.  ஒரு கடமைப்பட்ட நல்லமனிதராக கடன் கொடுப்பவர் மாதத்திற்கு 2% வட்டியும், வருடத்திற்கு 24% வட்டியும் பெறலாம். மாதத்திற்கு 2% வட்டியும், வருடத்திற்கு 24% வட்டியும் பெறுபவர் ஆதாயத்திற்காக பாவம் செய்தவராகக் கருதப்படமாட்டார் என்று கூறப்பட்டுருக்கு.

மேற்கூறப்பட்ட விதியைப் போலத்தான் யாக்ஞவல்கியராலும், கௌதமாவாலும், வசிஸ்தாவாலும் கூறப்பட்டுருக்கு. வசிஸ்தாவால பரிந்துரைக்கப்படும் வட்டி விகிதம் மனுவாலும், பிற ஸ்மிரிதிகளை எழுதியவர்களாலும் அதிகாரப்பூர்வமா கருதப்பட்டுருக்கு. மனுவின் விதி 140-141ஐ பொறுத்தவரைக்கும் ஆண்டுக்கு 15% வட்டி விகிதம் பொதுவான  வட்டி விகிதமாக இருக்கு. ஆண்டுக்கு 24% வட்டி விகிதம் வரை பெற அனுமதிக்கப்பட்டுருக்கு. மனுவின் விதி 142 இந்துமத சாதிப் படிநிலையைப் பொறுத்து மாதத்திற்கு 2% அல்லது 3% அல்லது 4% அல்லது 5% வரை கடன் கொடுப்பவர் வட்டி வாங்கலாம். ‘உயர்ந்த’ சாதியினருக்குக் குறைந்த வட்டியிலும் ‘பிற்படுத்தப்பட்ட’ சாதியினருக்கு அதிக வட்டியிலும் கடன் கொடுக்க அனுமதிக்கப்பட்டுருக்கு.

அதாவது பிராமணர்களுக்குக் கடன் கொடுக்கும் போது மாதத்திற்கு 2% வட்டியும், ஆண்டுக்கு 24% வட்டியும்  வாங்கலாம். சத்ரியர்களுக்குக் கடன் கொடுக்கும் போது மாதத்திற்கு 3% வட்டியும் ஆண்டுக்கு 36% வட்டியும் வாங்கலாம். வைசியர்களுக்குக் கடன் கொடுக்கும் போது மாதத்திற்கு 4% வட்டியும் ஆண்டுக்கு 48% வட்டியும் வாங்கலாம். சூத்திரர்களுக்குக் கடன் கொடுக்கும் போது மாதத்திற்கு 5% வட்டியும் ஆண்டுக்கு 60% வட்டியும் வாங்கலாம்.

எப்படி இன்றைய முதலாளித்துவ சமூகத்தின் நிதியமைப்புல வசதியானவர்களுக்குக் குறைந்த வட்டியிலும் வறுமையானவர்களுக்கு கந்துவட்டியிலும் கடன்கிடைக்குதோ அதைவிட மோசமான பல பிரிவினைகளையுடைய நிதியமைப்பு தான் வேதகாலத்துல காணப்பட்டுருக்கு. சாதிக் கட்டமைப்புக்கு ஒரு பொருளாதார அடிப்படை உள்ளது. உயர்ந்த சாதியினர் வசதியானவர்களாகவும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் வசதி குறைந்த ஏழை எளியவர்களாகத் தான் இருந்துருக்காங்க. பிரிவினையுடைய இத்தகைய நிதியமைப்பு அதை என்றென்றைக்கும் நீடிக்கச்செய்யுது. வேதகாலத்துல இந்தியாவுல காணப்பட்டதைப் போன்ற ஒரு கேவலமான நிதியமைப்பு உலகத்துல வேறு எங்கேயும் காணக்கிடைக்கவில்லை.

இந்தியாவின் இந்து மத சாதி அமைப்பானது சமூகப்பொருளாதார அமைப்பின் மேற்கட்டுமானத்தை சார்ந்தது, அடித்தளத்தை சார்ந்தது இல்லை, சாதிகளுக்கு சமூக அடிப்படை உண்டு, பொருளாதார அடிப்படை இல்லை என்ற வாதத்தை முன்வைப்பவர்கள், இந்த பிரிவினைமிக்க தர்மசாஸ்திர நிதியமைப்பின் விதிமுறைகளை ஆராய்ந்து தங்களது வாதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில் தவறான புரிதலிலிருந்து தொடங்கினால் சமூகத்திற்கான சரியான தீர்வைக் கண்டடைய முடியாது. இந்தியாவின் சமூகப்பொருளாதார அமைப்புல அடித்தளம், மேல்கட்டுமானம் அனைத்திலும் சாதி இரண்டறக் கலந்துருக்கு.

 (தொடரும்)

 

 

 

 

 

 

 

 

Wednesday, September 27, 2023

பணம் பேசுறேன் (54):

 


மனதின் அரசியல்: மார்க்சியமும் மன உளைச்சலும் என்ற தனது புத்தகத்தில்,  இயன் ஃபெர்குசன் மனநோய் என்ற சொல்லிற்கு பதிலாக மனத்துயரம் என்ற நடுநிலையான சொல்லைப் பயன்படுத்துறார். நாம் வாழும் சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புதான் -முதலாளித்துவம்- தான் இன்று உலகில் நாம் காணும் மிகப்பெரிய அளவிலான மனநலப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று கூறும் அவர் வரலாற்றுப் பொருள்முதல்வாத இயங்கியல் அனுகுமுறையைக் கொண்ட மார்க்சிய பகுப்பாய்வுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைக்கிறார் .

மனநலப் பிரச்சினைகளின் தோற்றத்திற்கு முதன்மையாக ஆரம்பகால வாழ்க்கை அனுபவம், வறுமை, சமத்துவமின்மை, இனவெறி, பாலியல் மற்றும் பிற அடக்குமுறைகள் ஆகியவற்றின் காரணப் பாத்திரத்தை அங்கீகரித்து அனுபவ ஆதாரங்களை வழங்கும் ஒரு முன்மாதிரியானது (model), இப்பிரச்சினைகளை தவறான மரபணுக்கள் அல்லது உயிர்வேதியியல் குறைபாடுகளில் கண்டறியும் மாதிரியிலிருந்து, ஒரு பெரிய முன்நிலையான படியாகும். புதிய மாதிரி மரபணுக்கள், மூளை மற்றும் உயிர்வேதியியல் ஆகியவற்றின் பங்கைக் குறைக்காது, மாறாக நமது மூளைக்கும் நமது சுற்றுச்சூழலுக்கும் இடையிலான தொடர்புகளை வலியுறுத்தும். மனத்துயரங்களின் இயங்கியல் அடிப்படையிலான புரிதலை ஏதுவாக்கும் என்றும் ஃபெர்குசன் கருத்து தெரிவிச்சிருக்கார்.

ஃபெர்குசன் மார்க்சியக் கண்ணோட்டத்தில் வாதிடுகிறார்; நம்மை உண்மையான மனிதனாக்குவது நமது சொந்த உழைப்பை உணர்வுபூர்வமாகக் கட்டுப்படுத்தும் திறன்தான். ஆனபோதும் துல்லியமாக நமது மனிதகுலத்தின் இந்த அம்சம்தான் வர்க்கப் பிரிவிணை, போட்டி மற்றும் இரக்கமற்ற தன்னலப்போக்கு ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவப்பட்ட பொருளாதார அமைப்பால் கடுமையாக ஒடுக்கப்படுது. மன உளைச்சலைப் பற்றி சிந்திக்கத்தக்க முக்கிய மார்க்சியக் கருத்தாக்கம் தான் அந்நியமாக்கம்: நமது உழைப்பின் விளைபொருட்களிலிருந்து அந்நியமாக்கப்படுதல், உழைப்புச் செயல்பாட்டில் இருந்து அந்நியமாக்கப்படுதல் மற்றும் ஒருவருக்கொருவர் அந்நியமாக்கப்படுதல். அந்நியமாக்கம் பற்றிய மார்க்சியக் கருத்தாக்கத்தின் உண்மையான மதிப்பு என்பது, அது சமூக உறவுகள் மற்றும் தனிநபரின் உணர்வு நிலையின் மீது முதலாளித்துவத்தின் தாக்கத்தைக் கண்டறிய உதவுகிறது. நான்கு பத்தாண்டுகளாக புதிய தாராளமயத்தின் சமூகத் தாக்கம் பொருளாதார சமத்துவமின்மையை ஆழப்படுத்தியது மட்டுமன்றி, அது அதிகாரமின்மை, துண்டிப்புநிலை மற்றும் பாதுகாப்பற்ற தன்மையின் உணர்வுநிலையையும் ஆழமாகத் தூண்டியுள்ளது என்றும் குறிப்பிடுகிறார்.

பெரு நிறுவனங்களுக்கு பணியாளர் உதவித் திட்டங்களை வழங்குவதில் முன்னணி நிறுவனமான ஆப்டமின் (Optum)  தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் உள்ள 46% பணியாளர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆய்வு மாதிரி 200,000 பணியாளர்களை கொண்டது (30 பெரிய நிறுவனங்கள்). அவர்கள் 2016 இன் முதல் காலாண்டில் இணைய உடல்நல இடர் மதிப்பீட்டிடை மேற்கொண்டனர்.

2015ல் வெளியிடப்பட்ட அசோசெம் ஆய்வில், அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும்போது, இந்திய தனியார் துறையில் 42.5 சதவீத ஊழியர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துருக்கு. தனியார் நிறுவனங்களில் அளிக்கப்படும் குறைந்த ஊதியம் மற்றும் அதிக வேலை நேரங்கள் காரணமாக தனியார்துறை ஊழியர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுருக்காங்க.

(தொடரும்)

 

 

 

 

 

 

Tuesday, September 26, 2023

சூதாடும் காட்டேரி (53):

 


தர்மசூத்திரங்கள்ல சொல்லப்படுற பித்ருருனா, தேவருனா, ரிஷிருனா ஆகிய மூன்று கடமைகளை நிறைவேற்றவேண்டியது ஒரு தனிநபரின் மதக்கடமைகளாக கருதப்படுது. இந்த மதக்கடமைகளுக்கு உள்ள புனிதத்தன்மை படிப்படியாக பணத்தைக் கடனாகக் கொடுக்குறது, மதம் சாரா பரிவர்த்தனைகள் போன்றவைக்கும் ஒட்டிக்கொள்ளுது. ஒரு நபர் தான் பெற்றக் கடனைத் திரும்பசெலுத்தவேண்டியது சட்டபூர்வமான கடமையாக உள்ளது. ஒரு தந்தையால தன் வாழ்நாளில் செலுத்தமுடியாதக் கடனை திரும்பசெலுத்த வேண்டிய புனிதக் கடமை அவரது மகனைச் சேருது. அப்படி செய்தால் தான் இறந்தவரோட ஆத்மா சாந்தியடையும் என்பது மதநம்பிக்கையா இருக்குது. ஆகையால் ஆண் சந்ததியினர் அந்தக் கடமையை ஆற்றவேண்டும். இந்தத் தலைப்பின் கீழ் கடன்கள், குறுகிய கால பணப்பரிவர்த்தனைகளுக்கான சட்டம் குறித்துதான் நாம பார்க்கப்போறோம் என்ற போதிலும், இந்து நீதியமைப்புல கடனுக்கான சட்டங்கள் மூன்றுக்கடன் தத்துவத்தின் அடிப்படையில் தான் உருவாகியிருக்கு.

வட்டி ஈட்டுவதற்காகக் கடன் கொடுத்தல்:

 பணத்தைக் கடனாகக் கொடுத்ததற்கான ரசீது, கடனைக் குறிப்பிட்டக் காலத்தில் திரும்பசெலுத்தவேண்டும் என்ற கடப்பாடு, குறித்த ஒப்பந்தம் ஆகியவை லாபம் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. இது சமஸ்கிரதத்துல குஷிதா என அழைக்கப்படுது. பணத்தைக் கடனாகக் கொடுப்பவர்கள் வட்டிக்கு கடன் கொடுப்பதைத்தான் தொழிலா செய்யுறாங்க.

வட்டியின் பல்வேறு வகைகள்:

பிறருக்குக் கடன் கொடுக்கும் ஒவ்வொருவரும், சட்டத்தால அங்கீகரிக்கப்பட்ட வட்டிவிகிதத்துக்கு மேல் இல்லாம ஏற்றுக்கொள்ளப்பட்ட வட்டி விகிதத்துல வட்டியைப் பெறலாம். பணப்பரிவர்த்தனைகளுக்கு எவ்வளவு வட்டி விகிதத்தை நிர்ணயிக்கலாம், எவ்வளவு வட்டி வாங்கலாம் என்பது குறித்து பல கட்டுப்பாடுகளின் மூலம் ஸ்மிரிதிகள் ஒழுங்குமுறை செய்துருக்கு. சாஸ்திரங்கள்ல உள்ள சட்டதிட்டத்தின்படி கடன் பரிவர்த்தனையில் கடன் பெற்றவர் வட்டி செலுத்த சம்மதிக்கலாம். ஆறு விதமான வட்டிகள் அங்கீகரிக்கப்பட்டுருக்கு.

1.   கலிகா:

குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கடனுக்கு அளிக்கப்படும் வட்டி கலிகா என அழைக்கப்படுது.

2.   கையிகா:

வேலை செய்து உடலுழைப்பின் மூலமா கடனுக்கு அளிக்கப்படும் வட்டி கையிகா என அழைக்கப்படுது.

3.   சக்கரவ்ருத்தி:

கடனோட வட்டிக்கும் வட்டி அளிப்பது, கூட்டு வட்டி செலுத்துவது சக்கரவ்ருத்தி என அழைக்கப்படுது.

 

4.   போகலாபா

கடன் வாங்குபவர்களின் வீடு, வயல் போன்ற சொத்துக்களை அனுபவிப்பதன் மூலம் லாபம் அடைவது போகலாபா என அழைக்கப்படுது.

சொத்தை அடகு வைத்துக் கடன் பெற்று வட்டிக்கு பதிலா சொத்தை வைத்துக்கொள்ளும் உரிமையை கொடுப்பது போலத்தான் இதுவும். இதை கௌதமா அபிபோகா என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய பரிவர்த்தனையில வட்டிக்கு பதிலா பொருளையோ, சொத்தையோ முழுமையா அனுபவிக்கும் உரிமை அளிக்கப்படுது.

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

Monday, September 25, 2023

பணம் பேசுறேன் (53):

 


பரவலான சமூக அழுத்தத்துடன் கூடிய ஒரு தருணத்தில் தொடர்ச்சியான கொள்கைத் தெரிவுகளை மேற்கொள்வதன் மூலம் புது தாராளமய முதலாளித்துவம் கட்டமைக்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தத் தேர்வுகள் வேதனை, துன்பம் மற்றும் உடல்நலக்குறைவை அதிகப்படுத்தியுள்ளன என்பதை ஆராய்ச்சி நிரூபிக்கிறது. முதலாளித்துவம் ஆங்கிலோஸ்பியரிலும் அதற்கு அப்பாலும் சமூக அழுத்தங்களை மோசமாக்கியுள்ளது.

மாற்றம் ஏற்படுவதிற்கு, சமூகப் பொருட்களை மறுவிநியோகம் செய்வதை சமூகங்கள் தேர்வு செய்ய வேண்டும். கொள்கை மற்றும் செயல்பாட்டின் மையத்தில் மக்களை வைப்பதில் தான் தீர்வுகள் உள்ளனவே தவிர அவர்களின் பரிவர்த்தனைகளில் அல்ல என்று மான்கிரிஃப் கருத்து தெரிவிச்சுருக்காங்க.  

வளங்களை மிகவும் சமமாக விநியோகித்து, வருமானம், வீட்டுவசதி, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றிற்கான பாதுகாப்பை வழங்கும் [ஒரு] பொருளாதார அமைப்பு, பெருமளவு மக்களை பொருளாதார மற்றும் சமூக வாழ்வில் அர்த்தமுள்ளமுறையில் பங்கேற்க உதவும் பொருளாதார அமைப்பின் மூலம் நிதி பாதுகாப்பின்மை, கடன், வீட்டுவசதி இல்லாமை, தனிமை, பயம் அல்லது தோல்வி உணர்வுகள் மற்றும் நோக்கமின்மை ஆகியவற்றுடன் நெருக்கமாக தொடர்புள்ள தற்போதைய மனநல நோய்களை நீக்கமுடியும் என்கிறது இக்கட்டுரை.

லவ்போஸ்ட் தொடர் கட்டுரையின் இரண்டாம் பகுதி மாற்றத்தை கற்பனை செய்வதையே கடினமாக்கும் இயல்பாக்கப்பட்ட முதலாளித்துவத்தை உள்நோக்கிப் பார்க்கிறது. முதலாளித்துவ நம்பிக்கைகள் இன்னும் தெளிவாக்கப்படும்போது, ஆரோக்கியமான தேர்வுகளை முன்நோக்குவது  சாத்தியமாகும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

மனநோய், மனநல மருத்துவம் குறித்து விமர்சனப் பார்வையுடன் மனநோய் மருத்துவ எதிர்ப்பு இயக்கம்- Anti-psychiatry செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இயக்கம் மனநல சிகிச்சையானது நோயாளிகளுக்கு உதவுவதை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துது, என்று மனநோய் பற்றிய சர்ச்சைகளை எடுத்துக்காட்டுகிறது. மனநல நோயறிதலின் நம்பகத்தன்மை, மனநல மருந்துகளின் சந்தேகத்திற்கிடமான செயல்திறன் மற்றும் தீங்கு, மனநல மருந்து விளைவுகளுக்கான எந்தவொரு நோய் சிகிச்சை பொறிமுறையையும் நிரூபிப்பதில் மனநல மருத்துவத்தின் தோல்வி மற்றும் சமமான மனித உரிமைகள் மற்றும் சிவில் சுதந்திரம் பற்றிய சட்டரீதியான கவலைகள் ஆகியவை நோயறிதலின் முன்னிலையில் அழிக்கப்படுகின்றன என்ற அடிப்படையிலும் எதிர்ப்பு பதிவுசெய்யப்பட்டிருக்கு.

மருந்தின் செயல்திறன் பற்றிய கவலைகளுக்கு அப்பால், உளவியல் சிகிச்சை மற்றும் மருந்துகளின் தத்துவ மற்றும் நெறிமுறை அடிப்படைகளையும் இந்த இயக்கம் கேள்விக்குள்ளாக்குது. அவை ஒரு தனிநபரின் மனதின் சுயாட்சி மற்றும் ஓர்மை என்பதைக் காட்டிலும் சமூக மற்றும் அரசியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்துள்ளது.

மனதின் அரசியல்: மார்க்சியமும் மன உளைச்சலும் என்ற தனது புத்தகத்தில், இயன் ஃபெர்குசன், மனநலம் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக மக்களின் தனிப்பட்ட தேவைகளை புறக்கணிக்கும் அடிப்படையைக் கொண்டுள்ளதால் அது ஒரு வர்க்கப் போராட்டம் என்று வாதிடுகிறார்.

(தொடரும்)

 

 

 

 

 

 

Saturday, September 23, 2023

பயணங்களில் (4):


இதற்கிடையில் என் முன் இருக்கையில் இருந்த டச்சு ஜோடி முத்தத்தோடு முத்தமானார்கள். காதலெனும் ஜீவநதிக்கு இடம், பொருள், ஏவல் உண்டோ, நாளை அவர்கள் அலுவல்களில் மூழ்கியிருக்க நேரிடலாம். இல்லை வெவ்வேறு இடங்களுக்குச் செல்லவேண்டியிருக்கும். ஒருவேளை, இதுவே அவர்களது கடைசி சந்திப்பாகவும் இருக்கலாம். இதில் எதுவுமே இல்லை என்றாலுங்கூட வானுலகில் காரணத்தோடு தான் காதல் செய்ய வேண்டுமா என்ன. விண்மீனில் அவர்களது முத்தத்தைத் தவிர, உயிர்கள் இருப்பதற்கான எந்த அடையாளாமும் இன்றி சலனமற்றிருந்தது. உயிருள்ள எந்திரங்களாக அந்த உயிரற்ற எந்திரத்தில் பயணித்திருந்தோம். எனது இருப்பு அவர்களின் காதலைக் கடுகளவேனும் குறைக்கக்கூடாது என்பதே என் சங்கடம். நானும் எவ்வளவும் நேரம் தூங்கும் ஜன்னல்களுடன் பேசிக்கொண்டிருப்பது. எனது சங்கடத்தைக் குறைக்கவோ, இல்லை தனது சங்கடத்தைக் குறைக்கும் முயற்சியிலோ ஒரு தலையணையால் இருக்கைகளுக்கிடையே உள்ள இடைவெளியை மறைத்து விடுவித்தார் அந்தப் பெண்மணி.

இதற்கிடையில் நான் ‘ஹெட்ஃபோன்’ அணிந்து என் முன்னே உள்ள ‘மானிட்டரில்’ நோட்டமிட்டேன். அது விண்மீன் பயணத்தின் போக்கைக் காட்டிக் கொண்டிருந்தது. அதைத் தாண்டித் தேடுகையில் எனக்குத் தெரிந்த ஹிந்திப் பாடல்கள் எதுவும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் எனக்கு ஒரு பத்து ஹிந்திப் பாடல்களின் மெட்டுக்கள், மெட்டுக்கள் மட்டுமே தெரியும். மொழி தாண்டி இசை இதயங்களை இணைக்கும் எனினும் என் மனம் படங்களுக்குத் தாவியது.

‘Subtitle-உடன்’ ஒரு ஹிந்திப் படத்தைப் பார்த்தபடிக் கண்ணயர்ந்தேன்.

காலையில் அறிவிப்புகளால் கண் விழித்து பின் சாப்பிடத் தயாரானேன். முன்சீட்டின் பின்னிணைந்திருந்த பலகையை ‘டைனிங் டேபிளாக்கி’ புண்ணியவதி தந்த உணவுப் பெட்டகத்தை வாங்கிக் கொண்டேன். நாசியுறுத்தும் நறுமணத்துடன் அதிலிருந்த வெம்மையான காகித துவாலையால் முகம் துடைத்தது இதம் அளித்தது. பின் காசுக்கேத்த தோசையா இது? எனக்கு எந்த மூலைக்கு இது என்றிருந்த ஒரு தோசையையும், பன்னையும் உண்டு களித்தேன். அதனுடன் இருந்த தேயிலை பேக், சீனி பேக் பழக்கதோசத்தால் என் பாக்கெட்டுக்குள் சென்றன.

இலக்கை அடைந்தாயிற்று. பனிப்பஞ்சு மேகக்கூட்டங்களை ஜன்னல் பகிர்ந்ததில் குதூகலம். விண்மீன் பெரிய இராட்டினம் போல் கீழிறங்கியது. எனக்களித்த ஹெட்ஃபோனைக் காணவில்லை. எனக்குத் தெரியாமல் அதை முன்சீட்டுக்கு ஊடுருவவிட்டு எனது பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளேன். இன்முகத்துடன் அந்த முன்சீட்டுப் பெண்மணி எனக்கு அதை வழங்கினார். நாங்கள் பெரிய விண்மீனிடமும், பணிப்பெண்களிடமும் விடைபெற்று வெளியெறினோம். பயணம் ஒன்றாயினும் பாதைகள் வேறாயின. நான் செல்வதறியாது என் பின்சீட்டுக்காரரை வழிகாட்டியாக்கிப் பின்தொடர்ந்தேன். அவர் அமெரிக்க நாட்டு விமானத்திற்கான டெர்மினலை நோக்கி சென்றதறிந்து அவரை விட்டு இறுதியில் சுற்றி சுற்றி, இறுதியில் பேகேஜ் கலெக்ட் செய்யும் இடத்தைச் சேர்ந்தேன். எனக்கு எந்த சிரமுமில்லை. எனது சிவப்புப்பெட்டி தான் மட்டுமே தன்னந்தனியாக அந்த வளையத்தில் சுற்றியவாறு எனக்காகக் காத்திருந்தது. அதனுடன் கைக்கோர்த்து நடந்து அடுத்தடுத்த எஸ்கலேட்டரில் பயணித்தேன். எனது கோட்டும் ஸ்வெட்டருமே எனக்குப் பெருஞ்சுமையாயின. பொதி தள்ளும் பொதியாக எப்படியோ ஒரு வழியாக சமாளித்தேன். எனக்கு முன் ஒரு ஆஃப்ரிக்கப் பெண் கிட்டத்தட்ட 7-8 பேகுகளுடன் லாவகமாக காற்றில் மிதப்பது போல் போய்க் கொண்டிருந்தார். அவரைப் பின் தொடர்ந்து நான் ஏர்போர்ட்டுடன் கூடிய ரயில் நிலையத்தை அடைந்தேன். எனது சாமர்த்தியத்தால் வண்டியைத் தவறவிட்டேன் என்றும் அடுத்த வண்டிக்கு 20 நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன்.

சில பயணங்களில் இலக்கை அடைவதற்காக நாம் பயணங்களைத் தொலைக்கிறோம். ‘ஏர்ப்போர்ட்டின் டியூடி ஃப்ரீ’ கடைகளில் இல்லாத உயிர்த்துடிப்பை உள்ளூர் சந்தைகளிலும், நடைபாதை கடைகளிலும் உணரலாம். 21ஆம் நூற்றாண்டில் என்ன இது பிற்போக்குத்தனம் என்கிறீர்களா. பூமியில் உயிர்களை அழித்து செவ்வாயில் உயிரைத் தேடிப் பயணம் செய்வது முற்போக்குத்தனமா.

இரயில் பயணத்தில், பேருந்துப் பயணத்தில், நடைபயணத்தில் நாம் ரசிக்கக் கிடைப்பவை எத்தனை எத்தனை!. டாட்டா காட்டும் குழந்தைகள், வேரில்லா பயணங்களுக்கு எதிராகப் பின்சென்று விடையளிக்கும் மரங்கள். பறவைகளின் அழைப்பொலிகள், காடு, மலைகள், பூந்தோட்டம், கடல்புறங்கள், கிராமப்புறங்களைக் கண்ணெதிரே காட்சியாக்கும் ஜன்னல்கள். கூவிக்கூவி முறுக்கு, மல்லி, வெள்ளரி, கொய்யா, காபி, டீ, வடை, சமோசா, டிஃபன் விற்பவர்கள், கூடைக்காரிகள், வம்பளக்கும் பெண்கள், குறும்பு செய்யும் சிறார்கள், அழிச்சாட்டியம் செய்யும் குழந்தைகள், எதிரெதிர் வண்டிப் பயணிகளின் கண நேரப் பரிச்சயம், வாகனங்களை லட்சியம் செய்யாமல் அசை போட்டு தியானம் செய்யும் மாடுகள். ஆட்டு மந்தைகள், அல்லித் தாமரைக் குளங்கள், தென்றலின் தீண்டல்கள், கண்கள், காட்சிகளைத் தாண்டி கனவு கானங்களால் நம்மை நெகிழவைக்கும் இசைஞர்கள், உருக்கும் கண்களால் இவர் தன்னவரா எனப் பின் தொடரும் நாய்க்குட்டி. உழைப்போடு உழைப்பான மக்கள் கூட்டம். இவை நம் நெஞ்சுக்கு நெருக்கமானவை அல்லவா. உள்ளூர் சந்தையில் வேடிக்கைப் பார்த்தவாறே திண்பண்டங்களை ருசித்து கிந்தாச்சி அடித்து வளையவரும் சிறார்களின் இலக்கற்ற பயணாத்திற்கு ஈடு இணை உண்டா.

இயற்கையின் ஸ்பரிசமும், இயற்கைப் படைப்புகளின் உயிரோட்டமும் தானே பயணங்களுக்கு ஈரமூட்டும். வேகம் அதிகமாக அதிகமாகப் பயணங்கள் உயிர்மை இழந்து இயந்திரத் தன்மை அடைவதில்லையா… அவை சூழலுக்கும் தீமைதானே….

  (தொடரும்)


சூதாடும் காட்டேரி (52)

 

தர்மசூத்திரங்கள்ல கடனைத் திருப்பி செலுத்துவது, கடனைத் திரும்பப்பெறுவதற்கான சட்ட நடைமுறை ருனதனா என அழைக்கப்படுது.

எந்தக் கடனைத் திரும்பசெலுத்தனும், எந்தக் கடனைத் திரும்பசெலுத்த வேண்டியதில்லை, யாரு, எங்கே எந்தமுறையில திரும்பசெலுத்தனும் என்பது குறித்தும், கடன் கொடுப்பதற்கும், கடனைத் திரும்பப்பெறுவதற்குமான விதிமுறைகளும் ருனதனா என்ற தலைப்புல கொடுக்கப்பட்டுருக்கு.

கடனைத் திரும்பசெலுத்தும் கடமைக்குப் பின்னிருக்கும் தத்துவம்:

 கடன்பட்ட நபருக்கு உள்ள கடனைத்திரும்ப செலுத்துவதற்கான கடப்பாட்டை விதிக்கும் சட்டத்திற்குப் பின்னே ஒரு தத்துவ மூலம் காணப்படுது. கடன் என்ற கருத்தாக்கமும் அதைத் திரும்பசெலுத்துவதற்கானக் கடமையும் வேதங்களிலிருந்து உருவானதாகக் கூறப்படுது. வேத இலக்கியங்களில் கடனைத் திரும்பசெலுத்த வேண்டியக் கடமை குறித்து தெளிவாகக் குறிப்பிடப்பட்டுருக்கு. ஆனால் கடன்-ருனா என்ற கருத்து பணத்தை கொடுப்பது அல்லது பிறரிடமிருந்து கடனை வாங்குவது என்ற அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படவில்லை. ஒரு நபர், தான் இந்த உலகத்தில் பிறந்தது, உட்பட தான் பெரும் ஒவ்வொரு நலனுக்குமான மூலத்துக்கும் செய்யவேண்டிய கடமையாக புரிந்துகொள்ளப்பட்டுருக்கு. கடவுளுக்கு செய்யவேண்டியக் கடமைகள் தேவருனா என அழைக்கப்படுது. மூதாதையர்களுக்கு செய்யவேண்டியக் கடமை பித்ருருனா என அழைக்கப்படுது. முனிவர்களுக்கு செய்யவேண்டியக் கடமை ரிஷிருனா என அழைக்கப்படுது. இந்த மூன்று கடன்களும் ஒவ்வொரு நபரும் செய்யவேண்டியக் கடமைகளா வேதங்கள்ல அங்கீகரிக்கப்பட்டுருக்கு. கடனைத் திரும்பசெலுத்துவதற்கான சட்டம் மட்டுமில்லாம, இந்துக்களின் பழமையான சட்டங்கள் முழுவதுமே ருனதிரயா எனப்படும் மூன்று கடமைகள் என்ற விதிமுறை அல்லது தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கு. தர்மசாத்திரங்களுக்கு தெளிவுரை அளிக்கும்போது இந்தமூன்றுக் கடமைகளுக்கு முரண்பாடில்லாது ஒத்துப்போகும் வகையில் மட்டும்தான் அளிக்கவேண்டும் என்பது முதன்மை விதியாக உள்ளது. மஹாபாரதத்தில் சமூகத்துக்கு அல்லது மனிதகுலத்துக்கு செய்யவேண்டிய நான்காவது கடமை கூறப்பட்டுருக்கு.

இதன்படி ஒவ்வொரு நபரும் செலுத்தவேண்டிய கடன்கள் நான் கு உள்ளது. ஒன்று கடவுளுக்கு செய்யவேண்டிய தேவருனா. இரண்டாவது மூதாதையர்களுக்கு செய்யவேண்டிய பித்ருருனா, மூன்றாவது முனிவர்களுக்கு செய்யவேண்டிய ரிஷிருனா நான்காவது சமூகத்திற்கு செய்யவேண்டிய மனவருனா.

ஒரு ஆண் தன் குடும்பத்தை நீடிக்கசெய்யும் விதத்தில் சந்ததியை விருத்திசெய்ய மகன்களைப் பெற்று பித்ருருனா கடமையை செலுத்தவேண்டும். படைத்த கடவுளைப் பல்வேறு வழிகளில் வழிபடுவதும் அவருக்கு பலிகள்-யஜ்ன கொடுப்பதன் மூலம் தேவருனா கடமையாற்றவேண்டும். அறிவைப் பெற்று அதைப் பரப்புவதன் மூலம் ரிஷிருனா கடமையாற்றவேண்டும். ஒரு நபர் ஒவ்வொரு வகையிலும் சமூகத்துக்கு செய்யவேண்டிய எல்லா கடமைகளையும் செய்வதன் மூலம் மனவருனா கடமையாற்றவேண்டும்.

 (தொடரும்)

 

 

 

 

 

 

Friday, September 22, 2023

பணம் பேசுறேன் (52):

 

பழங்குடி சமூகங்களுக்குள் இருக்கும் சுய-கட்டுப்படுத்தப்பட்ட மனப்பான்மையே அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளுக்குக் காரணம் என்ற புதுதாராளமய சித்தாந்தத்தின் இந்த கண்மூடித்தனமான, தீங்கு விளைவிக்கும் பகுப்பாய்வுக்கு ஸெயிரா எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. சந்தைப் பரிவர்த்தனைகள் இனரீதியான பாகுபாடுகள் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவற்றுக்கான சமூக முன்நிபந்தனைகள் அவ்வாறு இல்லை. வேலை செய்ய விரும்பும் அனைவருக்கும் சந்தையால் வாய்ப்புகள் வழங்க முடியும் என்ற புதுத்தாராளமய அனுமானம், பல பத்தாண்டுகளாக தொடரும் பாகுபாடாலும், அமைப்பு ரீதியான அநீதியாலும் சிறுபான்மை மக்கள் சந்தித்த பொருளாதார பாதகநிலைகளின் வரலாற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

புதுத்தாராளமயம் கொடுக்கும் துயரங்கள் தொகுப்பாக சமூக பொருளாதார படிநிலையின் கீழ் முனையில் குவிந்துள்ளது, வரலாற்று மற்றும் இனவெறி காரணங்களால் வெள்ளையர்கள் அல்லாதவர்கள் தான் அங்கு அதிகமாக பிரதிநிதித்துவப்படுத்தப்படுறாங்க.

இனவாத இயக்கிகள் மற்றும் கொள்கைத் தேர்வுகளின் தாக்கங்களை அங்கீகரிப்பதும், அவற்றுக்கு பதிலளிப்பதும் இன்றியமையாததாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டின் பெரும்பான்மையான மக்களில் பாதிக்கப்பட்ட உறுப்பினர்களாலும் புதியதாராளமய துயரங்கள் உணரப்படுகின்றன. அமெரிக்க பிரின்ஸ்டன் பொருளாதார வல்லுனர்களான சர் அங்கஸ் ஸ்டீவர்ட் டீடன் மற்றும் டாக்டர் ஆன் கேஸ் ஆகியோரால் எழுதப்பட்டவிரக்தி மரணங்களும் முதலாளித்துவத்தின் எதிர்காலமும்”- “Deaths of Despair and the Future of Capitalism” என்ற நூலின் பகுப்பாய்வை ஸெயிரா மேற்கோள் காட்டுறாங்க. 1980 களின் நடுப்பகுதியில் உற்பத்தி வேலைகள்ல இழப்பு ஏற்பட்டதால், தற்கொலை, அளவுக்கதிகமான ஓபியாய்டு பயன்பாடு, மதுவால் தூண்டப்படும் கல்லீரல் சிதைவு ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகள் கல்லூரியில் படிக்காத, உழைக்கும் வர்க்க வெள்ளை இன ஆண்களிடையே விகிதாச்சாரத்தில் அதிகரித்துள்ளன. அவர்களின் அதிகரிக்கும் இறப்பு விகிதங்கள் தான் அனைத்து அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த ஆயுட்காலம் தொற்றுநோய்க்கு முன் வீழ்ச்சி அடைந்ததற்குக் காரணம் என்று அவங்க  குறிப்பிட்டுருக்காங்க.

லவ்போஸ்ட் வெளியிட்ட தொடர் கட்டுரைகளின் பகுதி 1, ஆங்கிலோஸ்பியர் அதன் தற்போதைய செல்வ-உடல்நல முரண்பாட்டை எவ்வாறு அடைந்தது என்று கேள்வியெழுப்பியுள்ளது. சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் பிற அடிப்படை மனித உரிமைகளை விட சந்தை பரிவர்த்தனைகள் முன்னுரிமை பெற்றதால் தான் இது நடந்தது. வரலாற்றை ஆராய்வதற்கான காரணங்களில் ஒன்று, புதிய தாராளமய முன்னுரிமைகளின் தொகுப்பினுடையக் கட்டுக்கதைகளை நீக்குவதும் அவற்றின் இயற்கையற்ற தன்மையை தெளிவுபடுத்துவதுமே ஆகும். புதிய தாராளமயம் ஒரு அரசியல் தேர்வாக இருந்தது. இது தவிர்க்க முடியாததோ இயற்கையானதோ அல்ல.

மான்க்ரீஃப் மற்றும் ஸெயிராவின் முன்னோக்கு கருத்துக்கள் ஊடகங்களில் அதிக ஒளிபரப்பு நேரத்தைப் பெறாத மன ஆரோக்கியத்திற்கான கட்டமைப்பு காரணங்களை முன்னிறுத்துகிறது. அந்த முறையான காரணங்கள் பொது உரையாடல் மற்றும் அரசியல் விவாதத்தின் தலைப்புகளாக மாறும் வரை, தியானம், அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை, மனச்சோர்வு நீக்கும் மருந்துகள் அல்லது கணநேர நுகர்வோர் துய்ப்பியல் ஆகியவற்றை எந்த அளவுக்கு பயன்படுத்தினாலும் பரவலான மன உளைச்சல் மற்றும் நோய்க்கான இந்த அடிப்படை காரணத்தைத் தீர்க்கமுடியாது.

(தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...