காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே தாத்தா வேக வேகமா கெளம்புனாரு…
பெப்போ:
இன்னைக்கு லில்லி நம்மள பாக்க வரும் தான…
குக்கு:
நானும் அப்புடித் தான் நெனைக்கிறேன்… ஒன்ன மாதிரி தான் நானும் லில்லிய ரொம்ப மிஸ்
பண்ணுறேன்…
மஞ்சா:
நேத்து லில்லி ஆட்டுக்குட்டி மதியத்துக்கு மேல தான வந்துச்சு… அதுவும் நீ ஆட்டுக்குட்டி
மாதிரி கத்துனதுனால தான், இங்க வெளையாடுறதுக்கு ஆட்டுக் குட்டி இருக்குன்னு நெனைச்சுட்டு
வந்து பாத்துச்சு… அதுனால இன்னைக்கும் மதியத்துக்கு மேல அதே மாதிரி கத்து…
பெப்போ:
உம், கத்துறேன்… நம்ம திரும்பவும் ஒரு பறவைக் கூடு பன்னணும்… எப்புடி பண்ணலாம்…
பிம்பா:
இந்த வாட்டி மரப்பெட்டியில பண்ணலாமா…
மஞ்சா:
ஒனக்கு தச்சு வேலை செய்யத் தெரிஞ்சுருந்துச்சுண்ணா மரப்பெட்டியிலே பண்ணலாமே…
பிம்பா:
எனக்கு தெரியாதுன்னு ஒனக்கு தெரியாதா, சரி அதை நாளைக்கு தாத்தா வீட்டுல இருக்குறப்போ
பண்ண சொல்லிக் கேப்போம்….
பெப்போ: அப்டின்னா பறவைங்களுக்கு
இரை கொடுக்குற மாதிரி வேற ஏதாவது பண்ணலாமா
பிம்பா:
அதை தான் பெர்ட் ஃபீடர், இரை ஊட்டி-னு சொல்றாங்க…
மஞ்சா:
அதை எப்புடி பண்ணுறது…
பிம்பா:
நம்ம இஷ்டம் தான் எப்புடி வேணும்னாலும் பண்ணலாம், பிளாஸ்டிக் பாட்டில்ல கூட பண்ணலாம்…
எப்புடின்னு சொல்லவா… பாட்டிலுக்கு உள்ள எதிரும் புதிருமா ஓட்டை போடனும் அதுல குருவிங்க
ஒக்காந்து இருக்குறதுக்கு சின்ன சின்ன கிளை மாதிரி கம்புகளை சொருகனும்… அதுக்கு கொஞ்சம்
மேல பறவைகள் இரையைக் கொத்தி சாப்புடுற மாதிரி ஓட்டை போடனும்… அப்புறம் பாட்டிலுக்கு
உள்ள தானியங்கள், விதைகளை எல்லாம் போட்டு நெரப்பி அதை மூடி, பாட்டில் கழுத்துல கயித்தைக்
கட்டி அதை மரத்துல தொங்க விடனும்… பெர்ட் ஃபீடர் ரெடி…
பெப்போ:
ஆனா, இப்புடி செஞ்சா இரையெல்லாம் கீழ சிந்தி வீணாகுமே அதுக்கு என்ன பண்ணுறது…
பிம்பா:
அப்டின்னா ஒரு தட்டுக்கு மேல பாட்டில ஒட்டி இதே மாதிரி பண்ணி மரத்துல தொங்க விட்டுடலாம்
பெப்போ:
இது நல்ல ஐடியா தான்
குக்கு:
இப்ப தான் ஞாபகம் வருது… நான் ஒன்னு சொல்ல மறந்துட்டேன்… நான் வீட்டுல இருந்தப்போ பறவைகள் எல்லாம் என் கூட பேசுனாங்க தெரியுமா…
பிம்பா:
என்ன ரீல் சுத்துறியா…
குக்கு:
இல்ல நெஜமாவே என் கூட மீன்கொத்தி, வாலாட்டிக் குருவி எல்லாம் பேசிருக்காங்க… பறவைகள்
பெரியவங்க கிட்ட தான் பேசமாட்டாங்க… நம்மள மாதிரி
கள்ளம் கபடம் இல்லாத சின்ன குழந்தைகள்கிட்ட பேசுவாங்களாம், அப்புடி தான் என்கிட்ட
சொன்னாங்க… நம்ம மாதிரி சின்ன புள்ளைங்க கிட்ட
பறவைகள் ஈஸியா கூட்டாளி ஆயிடுவாங்க…
தாத்தா:
கொழந்தைங்களா சாப்புட வாங்க…
மஞ்சா: டிஃபன் என்ன தாத்தா
தாத்தா: கேப்பைக் களியும்,
கடலைச் சட்னியும்… நீங்க சாப்பிட்டுட்டு சமத்தா விளையாடுங்க… தாத்தா கடைக்கு போறேன்..
பாய்….
குழந்தைகள்:
பாய் தாத்தா…
(தொடரும்)
யம்மு பாட்டி:
(தொடரும்)






