Thursday, January 30, 2025

யாருக்கு விருது கொடுக்கனும், விழா எடுக்கனும்:


பத்மவிருதுகளை பத்தி பேசிக்கிட்டிருந்தோம் இல்லையா, அப்போ எனக்கு இன்னொரு முக்கியமான விசயத்தைப் பத்தி சொல்லனும்னு தோணுச்சு. அதான் இப்ப சொல்லப்போறேன். பல பத்மவிருதுகளை பொருத்தமில்லாம அதுக்கான தகுதி இல்லாதவங்களுக்குத்தான் கொடுத்துருக்காங்க. ஆனா தகுதியான பலபேரு, சிறப்பா ஆய்வுசெய்யுற பலபேரு விருதோ, அங்கீகாரம் இல்லாம தான் வேலையப் பாத்துக்கிட்டு இருக்காங்க. சமீபத்துல ஒரு தோழர் மூலமா எனக்கு ஒரு புத்தகம் படிக்க கெடைச்சுச்சு. அதை படிச்ச பெறகு பல கேள்விகளுக்கு விடை கெடைச்சுச்சு, தெளிவு பொறந்துச்சு. அப்புடி அந்த புத்தக்கத்துல என்ன தான் இருந்துச்சுன்னு சொல்லமாட்டியா? இந்த இந்தியாவுலயும் சரி, நம்ம தமிழ்நாட்டுலயும் சரி எது ரொம்ப பெரிய பிரச்சினையா இருக்கு, கேவலமான அவமானசின்னமா இருக்குன்னு கேட்டா சாதி தான்னு கண்ண மூடிக்கிட்டு நீங்க பதில் சொல்வீங்க. அந்த சாதிகளைப் பத்திய அறிவியல் ஆய்வுகள் போதாக்குறையா தான் இருந்துருக்கு. ஆனா இப்போ சாதியைப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு புதிய பாதை கெடைச்சிருக்கு. என்ன சொல்லுற? ஆமாங்க “தமிழகத்தில் சாதிகள்” என்ற புத்தகத்தின் மூலமா தோழர்.ஜெ.சிதம்பரநாதன் தான் அதற்கான பாதையை நமக்கு அமைச்சுக் கொடுத்துருக்காங்க. சாதிகள் எப்படி உருவானுச்சு, எப்படி வளர்ச்சியடைஞ்சுச்சு, என்பதைப் பத்தி புதிய கண்டுபிடிப்புகளை செஞ்சுருக்காங்க ஜெ.சி தோழர், இந்த புத்தகத்துல மார்க்சிய அடிப்படையில சாதியோட இயங்கியலை தோழர் புட்டு புட்டு வெச்சுருக்காங்க. கொஞ்சம் வெவரமா தான் சொல்லேன்? அப்புடி என்ன தான் கண்டுபுடிச்சாரு? இல்லைங்க ஒங்களுக்கும், ஜெசி தோழருக்கும் எடையில மூணாவது நபரா  நான் வரவேணாம்னு பாக்குறேன். அது எனக்கு ரொம்ப சங்கடத்த கொடுக்கும். அவர் மூலமாவே நீங்க அவரோட கண்டுபிடிப்புகளை தெரிஞ்சுக்கங்க. சரி நீங்க ஒரு படம் பாக்க தியேட்டருக்குப் போறிங்க. படத்தோட கதையை முன்னாடியே சொல்லிட்டா நல்லாருக்குங்களா? படத்துல உள்ள திருப்பங்கள் எல்லாம் முன்னாடியே தெரிஞ்சுட்டா படம் பாக்க விறுவிறுப்பாவே இருக்காதே. ஒரு படத்துக்கே இப்படீன்னா, நம்மளோட நிஜ வரலாறையே காட்சிபடுத்துற இந்த புத்தகத்தைப் பத்தி சொல்லவா வேணும். அதை படிக்கிறது மூலமா ஒங்களுக்கு கெடைக்குற தனிப்பட்ட அனுபவத்தை, சுவாரசியத்தை செதைக்குறதுக்கு எனக்கு துளி கூட மனசு இல்ல. அதுனால மன்னுச்சிக்குங்க. நீங்களே இந்த புத்தகத்தை தவறாம படிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுக்கங்க. இனிமே சாதியைப் பத்தி விவாதிக்கும் போதோ, ஆய்வுசெய்யும் போதோ இந்த புத்தகத்தை மேற்கோள் காட்டாம இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு முக்கியமான புத்தகம். ஜெசி தோழரை இந்தியாவின் ஹென்றி மார்கன்னு அழைக்கலாம். ஆனா ஒரு வருத்தம் என்னன்னா, இந்த புத்தகம் பரவலா அறியப்படாம இருக்கு, சரியா அங்கீகரிக்கப்படாம இருக்குங்குறது தான் பெரிய கொறையா இருக்கு. யாராருக்கோ விருது கொடுக்குறாங்க, பாராட்டு விழா எடுக்குறாங்க, இப்பேர்ப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கண்டுபிடிப்புகளை செஞ்ச ஜெ.சிதம்பரநாதன் தோழருக்கு விருது கொடுக்கவேண்டாமா? பாராட்டுவிழா எடுத்து அவரை கொண்டாட வேண்டாமா? இந்த சாதனையைப் புரிந்த ஜெ.சிதம்பரநாதன் தோழருக்கு ஜனநாயக அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும் சேர்ந்து விருது கொடுக்கனும், தோழரை சிறப்பிக்கனும் என்று தாழ்மையுடன் கேட்டுக்குறேன். இன்னைக்கு எல்லா இடதுசாரி அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டியது அவசியமான உடனடித்தேவையா இருக்கு. தோழர்.ஜெசி தோழரை சிறப்பிக்கப்போற விழாவே இடதுசாரி அமைப்புகளை ஒருங்கிணைக்ககூடிய தொடக்கப்புள்ளியா இருக்கட்டுமே. தயவுசெஞ்சு அதற்கு ஏற்பாடு பண்ணுங்க தோழர்களே. இதை நிறைவேற்ற பரவலா பகிர்ந்து உதவுமாறு ஒங்க எல்லோரையும் பணிவன்புடன் கேட்டுக்குறேன். நன்றி.

 

 

சூதாடும் காட்டேரி (187):

 


எந்த விசயத்துலயுமே தீவிரவாதம் அதன் நோக்கங்களுக்கு எதிராத்தான் போய் முடியும் என்பதுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டா ஜைன மதம் இருக்கு. ஜைன சமயத்தைத் தோற்றுவித்தவர் மஹாவீரர். அட படுபாவி அப்போ மஹாவீரரை தீவிரவாதின்னு சொல்லுறியா? நீயெல்லாம் உருப்படுவியாடான்னு நீங்க திட்டுறது தெரியுது. மஹாவீரர் வன்முறையை போதிச்ச தீவிரவாதி இல்லைங்க, வன்முறைக்கு எதிரான தீவிரவாதி. மஹாவீரர் ஜைன சமயத்தைத் தான் உருவாக்குனாரே தவிர ஜைன மதத்தை இல்ல. அதுசரி சமயத்துக்கும், மதத்துக்கும் என்ன வித்தியாசமுன்னு கேக்குறீங்களா? சம ஆயம் என்பதிலிருந்து தான் சமயம் உருவாகுது. சமமான (சமத்துவமான) நபர்களின் சமூகம் என்பதைத்தான் சமயம் என்ற சொல் குறிக்குது. மதம் என்பது நிறுவனமயமாக்கப்பட்ட சமயம், மதம் என்பது அரசியல்மயமாக்கப்பட்ட சமயம். மதம் சமத்துவத்துக்கு எதிரானதா படிநிலைகளை கொண்டதா இருக்கு.

நம்ம மஹாவீரர் போற்றுதலுக்குரிய மாபெரும் தலைவர், நம்முடைய பேராசான், அனைத்தையும் துறந்தவர், நுண்ணுணர்திறன் மிக்கவரா இருந்ததுனால அவர் எந்த உயிருக்கும் தீங்குவிளைவிக்காம எல்லா உயிர்களிடமும் அன்புசெலுத்தி தன்னலமில்லாம வாழ்ந்தவர். அவரை மாதிரியெல்லாம் வாழுறது ரொம்ப ரொம்ப கஷ்டமுங்க. ஜைன சமயத்துல ஐந்து உறுதிமொழிகளை கடைபிடிக்கனும். முதலாவது வன்முறையைத் தவிர்க்கனும். எந்தவொரு உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்காம இருக்கனும். ரெண்டாவது, வாய்மைய கடைபிடிக்கனும், தீங்கில்லாத உண்மையை மட்டுமே பேசனும். மூன்றாவது திருடாமை, மத்தவர்களோட உடைமைகளை திருடக்கூடாது. நாலாவது பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கனும். அஞ்சாவது பற்றற்றிருத்தல், சொத்து, பணம், செல்வம், பொருட்கள், உறவுகள் மேல பற்றில்லாம வாழனும். ஆமா இந்த கௌதம் அதானியும் ஒரு ஜைனர்னு சொல்லிக்கிறாங்களே, இந்த ஐந்து உறுதிமொழிகள்ல எதையாச்சையும் ஒன்னையாவது கடைபிடிச்சிருக்காரா, இல்லையே, ஜைன மதக் கொள்கைகளுக்கு நேரெதிரா இந்தியாவையேக் கொள்ளையில்ல அடிச்சுவெச்சிருக்காரு. ஒரு ஜைனரா பற்றற்ற வாழ்க்கை வாழவேண்டிய அதானி இந்தியாவையே சூறையாடிய ரெண்டாவது பெரும் பணக்காரரா இருக்காரே. அவரு வாயைத் தொறந்தா பொய்யைத் தவிர வேறெதையும் பேசமாட்டாரே.

ஜைனர்கள் உயிர்களுக்கு தீங்குசெய்யக்கூடிய எந்த தொழில்லயும் ஈடுபடக்கூடாது, குறிப்பா போர்ல ஈடுபட்டு சண்டை போடக்கூடாது. விவசாயம் செய்யும் போதும் மண்ணுல உள்ள சின்ன உயிர்கள் பாதிக்கப்படுறதுனால ஜைனர்கள் விவசாயத்துலயும் ஈடுபடக்கூடாது. உருளைக்கிழங்கு, காரட், வெங்காயம், முள்ளங்கி போன்ற வேருல விளையுற காய்கறிகளையும் சாப்புடக்கூடாது. அதுனால பெரும்பாலான ஜனர்கள் வணிகத்துல, நிதி வணிகத்துல ஈடுபட்டாங்க. நிதி முதலைகளா மாறிட்டாங்க. கடைசில என்னாச்சு நுண்ணுயிரிகளுக்கு தீங்கு செய்யமாட்டோமுன்னு உறுதியெடுத்தவங்க மனுசங்களை கந்து வட்டி, கடு வட்டியால அணு, அணுவா சித்திரவதை செஞ்சு கொல்லுற ஈவிரமிக்கமில்லாத கொள்ளைக்காரர்களா இல்ல மாறிட்டாங்க. தெருவுக்கு தெரு அவுங்க தான அடகுக்கடை வெச்சிருக்காங்க. இந்த அடகுக் கடைகளாலயும் கந்துவட்டி கொடுமைகளாலயும் எத்தனை பேரு தற்கொலைக்கு தள்ளப்பட்டுருக்காங்க? எத்தனை குடும்பங்கள் சீரழிஞ்சிருக்கு, நடுத்தெருவுக்கு வந்துருக்கு. இதையா நம்ம பேராசான் மஹாவீரர் பண்ணச்சொன்னாரு, கடைசியில மஹாவீரரோட கொள்கைகளுக்கு நேரெதிரா ஜைனர்களோட செயல்பாடுகள் இருக்குதே. இது தெரிஞ்சா மஹாவீரர் எவ்வளவு வேதனைப்படுவாரு. 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-4ன் படி, ஜைனர்கள் மத்த எந்த சமூகத்திலும் இல்லாத அளவுக்கு பணக்காரர்களா இருக்காங்க. ஜைனர்கள்ல 70% பேர் பெரும்பணக்காரர்களா இருக்காங்க. பத்து ஜைனர்கள்ல ஏழு ஜைனர்கள் பாஜக ஆதரவாளர்களா இருக்காங்கன்னு பியூ ஆய்வுமையம் சொல்லுது. அதுனால பிற்போக்குத்தனத்தின் கோட்டையாவும் ஜைன சமூகம் இருக்குது. ஜைன சமயத்தின் நோக்கங்களும், ஜைனர்களின் செயல்பாடுகளும் ஒன்றுக்கொன்று முரணானவையா மாறிடுச்சு. ஜைன மதத்துக்கு மட்டுமில்ல. மனிதநேயம் பேசுன எல்லா சமயங்களுக்கும் இதே கதி தான். செயற்கையா கட்டமைக்கப்பட்ட இந்துமதம் ஆரம்பத்துலேருந்தே மனிதநேயத்துக்கு எதிரானதா தான் இருந்துருக்கு.

(தொடரும்)

 

Wednesday, January 29, 2025

பணம் பேசுறேன் (187):

 

சமீபத்துல ஐஐடி இயக்குநர் காமகோடி மாட்டு கோமயத்தோட மகத்துவத்தை சிலாகிச்சிருந்தாரு. ஒரு உயர் கல்வி ஆராய்ச்சி மையத்தோட இயக்குநர் காஞ்சி சங்கராச்சாரியரை பத்தியெல்லாம் பேசவேண்டிய அவசியம் என்ன வந்துச்சு? இவருக்கு வக்காளத்து வாங்க வந்தாரே ஸ்ரீதர் வேம்பு அவரும் அதே வகையறாவை சேர்ந்த உயர்சாதி முதலாளி தான். காமகோடி ஒரு திறமையான ஆராய்ச்சியாளர், சிறந்த கல்வியாளர்னு அவர் சொல்லுறது அறிவியல் தான்னு அறிவியலே நாக்கை புடிங்கிக்கிற மாதிரி ஒரு விளக்கம் கொடுத்தாரு. சரி இதையெல்லாம் பத்தோடு பதினொன்னா ஒதுக்கித் தள்ளிட்டு நாம முன்னாடி போய்கிட்டே இருக்கனும். ஆனா நேத்து ஒரு செய்தி வந்துச்சே கேட்டீங்களா? இதே ஸ்ரீதர் வேம்பு ஸோஹோ  நிறுவனத்தோட தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செஞ்சுட்டாராம். ஏன்னா அவர் தலைமை விஞ்ஞானியா பொறுப்பேத்துக்கப் போறாராம். இவரெல்லாம் தலைமை விஞ்ஞானி ஆனா நாடு என்ன கதியாகும் நெனச்சுப்பாருங்க? இந்தியா கோமயத்துல தான் எப்பவும் மூழ்கிக் கெடக்கனும். காமகோடி பேசுறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி இன்னொரு விசயமும் நடந்துச்சு. எங்க தெரியுமா? துருக்கியில தான். துருக்கியில ஒரு நாய் செத்துப் போகுற நிலையில உணர்வற்று இருந்த தன்னோட நாய்க்குட்டியை வாயில கவ்விக்கிட்டு கால்நடை மருத்துவமனைக்கு (Beylikdüzü Alfa Veterinary Clinic) போயிருக்கு. அங்க இருந்த மருத்துவர் எமிர் அந்த நாய்க்குட்டியை நல்லபடியா காப்பாத்திட்டாரு. இப்ப சொல்லுங்க இந்த காமகோடி, ஸ்ரீதர் வேம்பு, அந்த துருக்கி நாய் இவங்கள்ல யாரு அறிவாளி, யாரு அறிவியல் அடிப்படையில பகுத்தறிவா நடந்துக்கிட்டா? நல்லவேளை அந்த துருக்கி நாய், இந்த காமகோடி,  ஸ்ரீதர் வேம்பு மாதிரி மெட்ராஸ் ஐஐடில படிக்கல. இல்லைனா அதுவும் நாய்க்குட்டிக்கு கோமயத்த குடுத்து சாகடிச்சிருக்கும். நீங்களே இந்த செய்தியை படிச்சுப்பாருங்க.

https://indianexpress.com/article/trending/trending-globally/dog-carries-drying-newborn-puppy-to-vet-in-turkey-viral-video-captivates-internet-watch-9787028/

காமகோடி பசுப் பாதுகாப்பு பத்தி பேசிருக்காரு, ஆமா காமகோடி வகையறா எப்பவுமே மாட்டுக்காக கவலைப்படுவாங்க, விலங்குகளுக்காக குரல் கொடுப்பாங்க, ஆனா மனுசனை மனுசனா மதிக்கமாட்டாங்க, நடத்தமாட்டாங்க. இன்ஃபொசிஸ் முதன்மை நிர்வாக இயக்குநர் கிருஷ் கோபாலகிருஷ்ணன் உட்பட அந்த நிறுவனத்தின் 18 பேர் மேல எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ வழக்கு பதிவு செய்யப்பட்டது இதற்கான சமீபத்தைய உதாரணமா இருக்கு. இந்த நாட்டுல உழுதவனுக்கு உண்ண உணவு இல்ல, நெசவாளிக்கு உடுத்த துணி இல்ல. ஆனா முதலாளிகளுக்கு மட்டும் அதுவும் உயர்சாதி முதலாளிகளுக்கு மட்டும் விருதுகளும், கௌரவமும் கெடைக்குது. சரி இந்த நல்லி குப்புசாமி செட்டியாருக்கு பத்மபூஷன் விருது கொடுத்துருக்காங்களே. அவரு அதுக்காக என்ன பாடுபட்டாரா, உழைச்சாரா?, உழைக்கல சரி, ஏழைப்பொண்ணுங்க கல்யாணத்துக்காவது இலவசமா பட்டுப்புடவைகள கொடுத்தாரா? அதுவும் இல்ல. நல்லி சில்க்ஸுக்கு நட்சத்திர வாடிக்கையாளர்கள் தான் அதிகம். அட இந்த இந்திய அரசு ஊரை உலையில போட்டு கொள்ளையடிச்ச நிதிமுதலை ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கே பத்மஸ்ரீ விருது கொடுத்துருக்கே. அப்புறம் இதையெல்லாம் கேக்கவா வேணும். நல்லி குப்புசாமி 2003லயே பத்மஸ்ரீ விருதையும் வாங்கிட்டாரு. பணத்துக்கும், புகழுக்கும் தொழில் செய்யாமல், மனப்பூர்வமாகத் தொழில் செய்தால் உன்னத நிலையை அடையலாம்”ணு குப்புசாமி வேற பஞ்ச் டயலாக் விட்டுருக்காரு. அருண் ஐஸ்கிரீம் சந்திரமோகனுக்கும் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துருக்கு. பணக்காரங்களுக்காக பட்டுப்புடவையும், ஐஸ்கிரீமும் தயாரிக்கிறது தான் ஆகச்சிறந்த சேவைனு விருது குடுத்து போற்றுது இந்திய அரசு.

(தொடரும்)

 

Tuesday, January 28, 2025

சூதாடும் காட்டேரி (186)

 

பண்டைய கால மெசபடோமியா, கிரேக்கம், ரோம்ல இருந்த நிதியமைப்புகளைப் பத்தியெல்லாம் ஏற்கெனவே பாத்துட்டோம். இருந்தாலும் விடுபட்ட சில விசயங்களை மட்டும் இப்போ சொல்லிடுறேன். கிரேக்கத்துல கி.மு. நான்காம் நூற்றாண்டுல, தனியார் வங்கி ஒரு முக்கிய பங்கை வகிக்கத் தொடங்கிருக்கு. "ட்ரெபெசிடாய்" என அழைக்கப்பட்ட வங்கியாளர்கள், பணப் பரிவர்த்தனையில ஈடுபட்டுருக்காங்க.  வைப்புத்தொகைகளை வாங்கிருக்காங்க, அதுலேருந்து தனிநபர்களுக்கும், அரசுகளுக்கும் கடன்களை கொடுத்துருக்காங்க, வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்புச்சுருக்காங்க, வருவாய்களை சேகரிச்சிருக்காங்க, கடன்  கடிதங்களையும் (letters of credit) பண அஞ்சல்களையும் (money orders) வழங்கிருக்காங்க, காசோலைகளுக்கு பணம் வழங்கிருக்காங்க, வங்கிப் பரிவர்த்தனைகளின் முழுமையான கணக்குகளையும் பதிவுசெஞ்சு வெச்சுருக்காங்க. கப்பல் சரக்குகளுக்கு மேல கடன்களை கொடுத்துருக்காங்க, அடகுக்கடனும் கொடுத்துருக்காங்க, நிலக்கடனும் கொடுத்துருக்காங்க. பிணையமில்லாம கடன் கொடுக்குறது வழக்கமாயிடுச்சு. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுல கிரேக்கத்துல நிதியமைப்பு நல்லா வளர்ச்சியடைஞ்சு இருந்துச்சு. கடனைப் பயன்படுத்துறது பொதுவாக ஆயிடுச்சு. ஒரு காலத்துல நிலக்கடன் வாங்க பயந்தாங்க, ஆனா கி.மு. 200 வாக்குல, குறிப்பா சிறு விவசாயிகள் மிதமான வட்டி விகிதத்துல பணத்தைக் கடன் வாங்குவதற்கான வசதியான வழிமுறையா நிலக்கடன் கருதப்பட்டுச்சு.

ரோமை பொருத்தவரைக்கும் அதன் ஆரம்ப காலகட்டத்துல நிலத்தைப் பிணையமா வெச்சு கொடுக்குற கடனைத் தவிர ஒழுங்கமைக்கப்பட்ட நிதி செயல்பாடு அல்லது கடன் பத்தி ரொம்ப கொறைஞ்ச ஆதாரங்கள் தான் நமக்கு கெடைச்சிருக்கு. ரோமுல பெரிய வங்கி நிறுவனங்கள் காணப்படல. இருந்தாலும்கூட, வெளிநாட்டு வணிகர்களின் செயல்பாட்டை அரசு ஊக்குவிச்சுருக்கு, அவங்களோட வசதிக்காக பணச் சாவடிகளை வாடகைக்கு எடுத்துருக்கு. வங்கியாளர்கள் கிரேக்கப் பெயரால "டிரேப்சிடா"னு அழைக்கப்பட்டாங்க, அவங்க பெரும்பாலும் கிரேக்கர்களாக இருந்துருக்கலாம். அவங்க நம்பிக்கையோட பெரிய தொகைகளையெல்லாம் வட்டிக்குக் கடன் கொடுத்துருக்காங்க, வைப்புத் தொகைக்கு வட்டி கொடுத்துருக்காங்க, பணத்தை மாத்திருக்காங்க, ஏஜெண்டுகளாக பணத்தை வாங்கி வித்துருக்காங்க, அப்பொறம் மாகாணங்கள்ல முகவர்களை வெச்சு வெளிநாட்டு வரைவோலைகளை வெளியிட்டுருக்காங்க. மன்னர் சிசரோ எக்னேஷியஸ் வங்கியில் ஒரு கணக்கை வெச்சிருந்தாரு, அவரது வங்கியாளர்களுக்கு வரைவோலை மூலமா பணம் செலுத்தியிருக்காரு. கிமு முதல் நூற்றாண்டுல, ரோம் உலகின் நிதி மையமாக இருந்துச்சு. ஆனாலும்கூட, வங்கி நிறுவனங்கள் இன்னும் பெருசா வளரவும் இல்ல, அறியப்படவும் இல்லை. ரோமானிய சட்டம் வணிக, நிதி நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனங்களை (LLC) கட்டுப்படுத்தியதால் இப்புடி நடந்திருக்கலாம். இருந்தாலும் கூட, வரையறுக்கப்பட்ட பொறுப்பு கொண்ட கூட்டு பங்கு நிறுவனங்கள் பொது திட்டங்களுக்கு நிதியளிக்க அனுமதிக்கப்பட்டுருக்கு. கிமு 179 க்குப் பிறகு "படைவீரர்களால்" உருவாக்கப்பட்ட இத்தகைய நிறுவனங்கள் வரி வசூலிக்கிறதுக்கும், பொதுப் பணிகளை நிர்மாணிப்பதுக்கும் ஒப்பந்தம் செஞ்சுருக்கு. கிமு இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில, ஆசிய வரி வசூல் செய்யப்பட்டபோது அவை முக்கியத்துவம் பெற்றுருக்கு. அதுக்கப்புறம் கைப்பத்தப்பட்ட மாகாணங்கள்ல இலாபகரமான வணிகத்திற்கான விரிவான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுருக்கு, குறிப்பாக நிலத்து மேல கடன்களை கொடுக்கப்பட்டுருக்கு அப்புறம் நகரங்களுக்கு அல்லது வரி செலுத்தாத தனிநபர்களுக்கு கடன் கொடுபக்கப்பட்டுருக்கு. இத்தகைய மாகாண முதலீடுகள்ல பரந்த விரிவாக்க காலம் கிமு முதல் நூற்றாண்டுலயும் தொடர்ந்துருக்கு. "பேரம்பேசுற" இத்தாலிக்காரங்க எல்லா இடத்துலயும் இருந்துருக்காங்க, அநேகமா அதுல கொஞ்ச பேரு தான் ரோமானியர்களா இருந்துருக்காங்க. இந்த காலகட்டத்துல பணக்கார ரோமானியர்கள் அடிக்கடி கடன் வாங்கி ஆசிய கடன்களில் முதலீடு செஞ்சுருக்காங்க, ஆனால் இதை பொதுவா முகவர்கள் மூலம் கமுக்கமா செஞ்சுருக்காங்க. ஆசியாவுல ஏற்பட்ட எந்தவொரு கடுமையான பேரழிவும் ரோமில் பீதியை ஏற்படுத்துச்சுன்னு சிசரோ சொன்னது இங்க குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் எல்லாம் சிட்னி ஹோமரின் “A History of interest rates” புத்தகத்துலேருந்து கெடைச்சுச்சு.

(தொடரும்)

 

Monday, January 27, 2025

பணம் பேசுறேன் (186):

 

1.  உயர்சாதி முதலாளி வர்க்கம்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்த உயர்சாதி முதலாளிகளை இப்ப பாப்போம்.

 குழந்தைவேல் முதலியார்  ( தி சென்னை சில்க்ஸ் , குமரன் தாங்க மாளிகை மற்றும் SCM குழுமங்களின் நிறுவனர்), எஸ்முத்துசாமி முதலியார்  (நீலகிரி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் நிறுவனர்), எம்எத்திராஜ் முதலியார் (பின்னி மில்ஸ், திருமகள் ஸ்பின்னிங் மில், எஸ்.விகுலோபல் மில்ஸ் உரிமையாளர், ராமசந்திரா மருத்துவமனையின் பங்குதாரர்), கணபதி முதலியார்  (கணபதி சில்க்ஸ்  நிறுவனர்), வி.எஸ்கண்டிகாச்சலம் ( வி.எஸ்.ஜி டெக்ஸ்நண்டு  பிராண்ட் லுங்கிஸ்  நிறுவனர்), எம்முத்துசாமி முதலியார் (  எம்.ஆர்.சி & கோ, சென்னை கேட் பொன்னி அரிசி , முத்து மஹால்  நிறுவனர்), எம்உமாபதி (வொல்டெக்  குழுக்களின் நிறுவனர்), எஸ்பெருமாள் முதலியார் (நிறுவனர், எஸ்.பிஅப்பேரல்ஸ்  லிமிடெட்), டி.எஸ்நடராஜ முதலியார் (ஜான்சன் குழுமத்தின் நிறுவனர்), குப்பண்ணா முதலியார் ( ஜூனியர் குப்பண்ணா  ஹோட்டல், ருக்மணி அம்மன் உணவகத்தின் நிறுவனர்), ராமசாமி முதலியார்  (கோயம்புத்தூர் ஷார்ப் மோட்டார்கள் , பைண்ட் பம்புகளின் நிறுவனர்), என்அருணாச்சலம் (நிறுவனர் National  dothis  பிராண்ட் ), ஆர்ராதா முதலியார் ( ரேன்  இந்தியா ஸ்டீல்ஸ் நிறுவனர், லிஜோ ஹோட்டல் நிறுவனர்), எஸ்.பிசம்பந்தன் முதலியார்சேலம்  சம்பந்தம் நூற்பு ஆலை, SPM மருத்துவமனை, சித்தேஸ்வரா   நூற்பு ஆலைகளின் நிறுவனர்), வி.எஸ்வேலாயுதம் முதலியார் (  ஸ்ரீ கோமதி நூற்பு ஆலைகளின் நிறுவனர்), கே.கே.பாலுசாமி முதலியார் (கே.கே.பி டெக்ஸ்டைல்ஸ், ஈரோடு இந்து கல்வி நிலையம் பள்ளி, இந்து சர்வதேச பள்ளி, டாக்டர் ரான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவனர்), பி.வி.விகந்தசாமி முதலியார்இராசிபுரம்  சொர்ண லட்சுமி நூற்பு ஆலைகள்  ), பி.வி.வேலுசாமி முதலியார் (சின்னம்மாள் திருமண மண்டபத்தின் நிறுவனர்), மாசிலாமணி நந்தகோபால் ( நிறுவனர், மோகன் புரூவரிஸ் அண்ட் டிஸ்டில்லரீஸ் லிமிடெட்), டி.ராமசாமி முதலியார் (  ராஜா சைசிங், ராஜா அரிசி ஆலை, வர்க்ஷா உலகளாவிய பள்ளி, டி..ராமசாமி முதலியார் திருமண மண்டபம்), திருவேங்கடம் முதலியார் ( குட்டி நூற்பு ஆலை, செங்குந்தர்  நூற்பு ஆலை,  குட்டி சைசிங் மில், திருச்செங்கோடு ஜோதி தியேட்டர்கள் நிறுவனர்), வி.வி.சி.ஆர் வையாபுரி முதலியார் (புள்ளிகார் நூற்பு ஆலை நிறுவனர்), சி. ஆர். சதாசிவ முதலியார் ( கோவை பங்கஜா ஸ்பின்னிங் மில் நிறுவனர்), சென்னியப்பா முதலியார் ( எஸ்.கே.சி சில்க்ஸ் நிறுவனர்), ஆர்.செல்வராஜ்  முதலியார்  (சேலம்  கந்தகிரி   ஸ்பின்னிங் மில்லின்  நிறுவனர்), பிதங்கவேலு முதலியார் ( சேலம் தங்கவேலு டெக்ஸ்டைல் ​​மில் நிறுவனர்), பி.டி சம்பந்தம் முதலியார் (ஆரணி கிருஷ்ணா தியேட்டர்கள், கிருஷ்ணா தியேட்டர்கள்,  தணிகை டெக்ஸ்டைல்ஸ் ஆகியவற்றின் நிறுவனர்), வி.விநடராஜ முதலியார் ( கோவை  வி.விநடராஜா முதலியார் & மகன்கள் ஜுவல்லர்ஸ் நிறுவனர்) இவங்க எல்லாருமே உயர்சாதி முதலாளிகள் தான்.

 

2. இடைச்சாதி முதலாளிகள்:

இடைநிலை சாதிகளைச் சேர்ந்த முதலாளிகள் எல்லாம் இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவங்க தான். பொதுவா இந்தியாவுல உள்ளவங்க எந்த சாதியைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் ரொம்ப வசதி வாய்ப்புகள் வந்த பெறகு உயர்சாதி நடைமுறைகள், பழக்கவழக்கங்களை கடைபிடிக்கிறது தான் வழக்கமா இருக்கு. இதுல சில விதிவிலக்குகள் இருக்கலாம். இடைச்சாதி முதலாளிகளும் பெரும்பாலும் ஆதிக்க சாதி மனப்பான்மை உள்ளவங்களா தான் இருக்காங்க. ஆளும் வர்க்க உயர்சாதி முதலாளிகளுடன் சமரசம் செஞ்சுக்குட்டு இணக்கமா இருக்குறவங்களா தான் பெரும்பாலான இடைச்சாதி முதலாளிகள் இருக்காங்க. தங்களோட ஆதாயத்திற்காக உயர்சாதி முதலாளிகளை ஆதரிப்பவர்களா, அவர்களுடன் கள்ளக்கூட்டு உறவுகளைக் கொண்டவர்களாகத் தான் பெரும்பாலான இடைச்சாதி முதலாளிகள் இருக்காங்க. இதுல விதி விலக்குகள் இருக்கலாம். எல்லாருக்கும் தெரிஞ்ச ரொம்ப பிரபலமான இடைச்சாதி முதலாளிகள் யாரு தெரியுமா? சிவநாடார், மாறன் சகோதரர்கள் (கலாநிதி மாறன், தயாநிதி மாறன்) தான். இவங்க தொழில் நுட்பத்துறையைச் சேர்ந்த இடைச்சாதி முதலாளிகளா இருக்காங்க. வசந்த் குமார் (வசந்த் & கோ), செல்வராஜ் (சரவணா ஸ்டோர்ஸ்), வி.வி.தனுஷ்கோடி (விவிடி), ஆர்.ஜி.சந்திரமோஹன் (அருண் ஐஸ்கிரீம்ஸ்), முத்து (இதயம் நல்லெண்ணெய்), ராஜகோபால் (சரவண பவன்), வி.பி.எஸ்.அய்யம்பெருமாள் (வி.பி.எஸ்.அய்யம்பெருமாள் நாடார் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட்), அய்யா நாடார் குடும்பம், வி.ஜி.பன்னீர்தாஸ் (விஜிபி.குழுமம்) இவங்களும் இடைச்சாதி முதலாளிகள் தான்

(தொடரும்)

 

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...