வங்காளதேசம் நுண் நிதிக்கடனால எப்புடி பாதிக்கப்பட்டுச்சுண்ணு பாத்தோம். அடுத்ததா தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் நுண் நிதிக்கடன் என்ன விளைவுகளை ஏற்படுத்துனுச்சு என்பதைப் பத்தி பொருளாதார அறிஞர் எரிக் துசைண்ட் என்ன சொல்றாருண்ணு இப்ப கேப்போம்.
நுண்கடன்-மைக்ரோ ஃபைனான்ஸ் திட்டவட்டமான உதாரணங்கள்:
கொலம்பியா: அரசு நுண்கடன் திட்டத்திற்கு கட்டமைப்பு ஆதரவை வழங்குகிறது:
கொலம்பிய, அமெரிக்க
அரசாங்கங்களும், உலக வங்கியும், இன்டர்-அமெரிக்க மேம்பாட்டு வங்கியும் நுண்கடனை தொடங்கிவைத்ததுடன்
தீவிரமாக, ஆதரித்தும், விரிவுபடுத்தியும் வருகின்றன. கொலம்பியாவில், மிகப்பெரும்
அளவில் வேலைவாய்ப்புகளைத் தரும் நுண் நிறுவனங்களே, நுண்கடன் நிறுவனங்களின் முக்கிய
இலக்குகளாக இருந்தன. 2014 ஆம் ஆண்டில், ஐந்து நிறுவனங்கள் 72% கடன்களைக் கட்டுப்படுத்துவதன்
மூலம் இந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தின. தலைமை நுண்கடன் வங்கியான பான்காமியா, ஸ்பெயினின்
இரண்டாவது பெரிய தனியார் வங்கியான “BBVA” உடன் தொடர்புடையது. அரசு அவர்களுக்கு செயல்பாட்டு
ஆதரவை வழங்குகிறது.
1996 ஆம் ஆண்டில்,
நுண்கடன் நிறுவனங்களுக்கான புதிய கடன்களுக்கான சந்தையில் 40% ஐக் கட்டுப்படுத்திய கார்போசோல்
/ ஃபினான்சோல் நுண் நிதி நிறுவனத்தின், விரிவான அதிகப்படியான வர்த்தகம் காரணமாக பொது
நிதியால் பிணையில் எடுக்க வேண்டியிருந்தது. நுண்கடன் வங்கிகளின் மூத்த நிர்வாகிகள்
பெரிய தனியார் வங்கிகளிலிருந்து, குறிப்பாக அமெரிக்காவின் சிட்டிபேங்க் போன்ற வங்கிகளிலிருந்து
பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். கொலம்பிய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆய்வுகளும்
நுண்கடன் துறையை வெற்றியாகக் காட்டுகின்றன. காரணம் எளிமையானது: இந்த மதிப்பீடுகள்,
பொருளாதார நடவடிக்கைகளில் அதன் விளைவுகள் குறித்து எந்த கவலையும் இல்லாமல், நுண்-நிறுவனங்கள்
அமைப்புசாரா துறையை விட்டு வெளியேறும் அமைப்புசார் துறைக்கு மேம்படும் திறனைப் பார்க்காமல்,
மைக்ரோ-நிதித் துறையின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்கின்றன. உண்மையில், கொலம்பிய
மைக்ரோஃபைனான்ஸ், அமைப்புசாரா துறையில் உள்ள நுண்-நிறுவனங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது,
இதனால் அவை அதிக கடன் சுமையை நோக்கித் தள்ளப்படுகின்றன, இதன் விளைவாக வாராக் கடன் அதிகரித்துள்ளது.
2000களில் இருந்து,
அரசாங்கம் முக்கிய வங்கிகளை நுண் நிதியில்-மைக்ரோஃபைனான்ஸில் முதலீடு செய்ய வற்புறுத்தியது.
2002க்கும் 2006 க்கு இடையில், கடன் திருப்பிச் செலுத்தாமை அல்லது நொடிப்புநிலை ஏற்பட்டால்
பெரும்பாலும் பொது உத்தரவாதத்துடன் அவர்கள் ஆண்டுக்கு 1300 லட்சம் டாலர் முதலீடு செய்தனர்.
2001க்கும் 2005க்கும் இடையில் அரசு உத்தரவாதம் அளித்த கடன் தொகுப்பு ஐந்து மடங்கு
அதிகரித்தது. பின்னர் அரசாங்கம் மேலும் நுண்கடன்களை வழங்க முடிவு செய்தது, மேலும்
2006க்கும் 2010 க்கும் இடையில் 50 லட்சம் நுண் நிதிக் -கடன்களை இலக்காக நிர்ணயித்தது.
இலக்கை தாண்டி, 61 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டன. 2010-2014 காலகட்டத்தில், சாதனை மீண்டும்
முறியடிக்கப்பட்டது: அரசாங்கம் 77 லட்சம் நுண் கடன்களை எதிர்பார்த்திருந்தாலும், உண்மையான
புள்ளிவிவரங்கள் 102 லட்சத்தைத் தொட்டன. இருப்பினும், வணிக விரிவாக்கம் வேலைவாய்ப்பின்
தரத்தை மேம்படுத்த உதவவில்லை. 2006 ஆம் ஆண்டில், நுண் கடன் வங்கிகள் கொடுத்த அழுத்தம்
அரசாங்கத்தை வட்டி விகிதங்களை அதிகரிக்க ஒப்புதல் அளிக்க வழிவகுத்தது. அங்கீகரிக்கப்பட்ட
வட்டி விகிதங்கள் 22.6% முதல் 33.9% வரை இருந்தன.
2010 முதல், அதிகாரப்பூர்வ விகிதங்கள் மேலும் உயர்ந்து, 30-50% வரை ஊசலாடின.
மேலும், ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் விலைக் குறியீட்டுடன் (indexation) மாறுபடும் விகிதங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் அங்கீகாரம் அளித்தது. கொலம்பியாவில்,
நுண்கடன் விரிவாக்கம் அதிவேகமானது, 2002 இல் 1,360 லட்சம் டாலரிலிருந்து 2016 இல்
38,000 லட்சம் டாலராக அதிகரித்து, 28.1% ஆண்டு வளர்ச்சியைக் கொண்டிருந்தது. 2015 இல்
தனிநபர் கடன்களைப் பொறுத்தவரை, அத்தகைய நுண்கடன்களில் 72% சட்டப்பூர்வ குறைந்தபட்ச
ஊதியத்தை விட 1 முதல் 25 மடங்கு ஆக இருந்தது மீதமுள்ள 28% 25 முதல் 120 மடங்கு வரை
ஏற்ற இறக்கமாக இருந்தது. 2015 இல், பங்குகளின் மீதான வருமானம் (ROE) அசாதாரணமானது:
பான்காமியா 11.7% ஐ எட்டியது, மகளிர் உலக வங்கி-WWB 9.1%ஆகவும், பாங்கோ முண்டோ முஜெர்
21%ஆகவும் உயர்ந்திருந்தது உலகளவில் மிகவும் இலாபகரமான வங்கிகளில் ஒன்றான கோல்ட்மேன்
சாக்ஸ்-ஐ கூட இதற்கு நிகராக சொல்லமுடியாது!
நுண்கடன் துறையில் நிபுணத்துவம் பெற்ற கொலம்பிய வங்கிகள் உறுதியான இடத்தைப்
பிடித்துள்ளதாகத் தோன்றினாலும், இந்தக் கடன்களைப் பெறும் மக்களுக்கும் நுண் நிறுவனங்களுக்கும்
இது வேறுபட்ட சூழ்நிலையாகும். 32% வாடிக்கையாளர்கள் அதிகக் கடனில் உள்ளனர், மேலும்
அவர்கள் தங்கள் கடன்களை மறுசீரமைப்பதற்காக கோரிக்கையிட வேண்டியிருந்தது, இது அடிப்படையில்
கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிப்பதைக் குறிக்கிறது. 2016-2017 ஆம் ஆண்டில்
கொலம்பியாவில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகிறது, மேலும் கடன் வாங்குபவர்கள் அதிகமான
அளவில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறி வருகின்றனர்.
(தொடரும்)