தியாகு தோழருடனான தோழமை எவ்வாறு தொடர்ந்தது என்பதைப் பத்தி இப்போது சொல்கிறேன். தியாகு தோழர் தான் எழுதிய “மார்க்சியம் அனா ஆவன்னா” நூலைப் படித்துவிட்டு மதிப்பாய்வு அளிக்குமாறு என்னிடம் கேட்டிருந்தாங்க. நான் 2019 ஜுன் 3ஆம் நாள் தோழருக்கு மின்னஞ்சலில் மதிப்புரையை அனுப்பியிருந்தேன். அதற்கு பின் அதே ஜூன் மாதத்தில் 22 ஆம் நாளில் திருவாரூரில் நடைபெற்ற “மார்க்சியம் அனா ஆவன்னா” நூலிற்கான அறிமுகவிழாவில் கலந்துகொண்டு நூலைப் பற்றி பேசுமாறு என்னைக் கேட்டிருந்தார். அப்போது தான் எனக்கும், எனது அக்கா அஜந்தா (எ) வால்காவுக்கும் தியாகு தோழரை முதன் முதலாக அவரது சொந்த ஊரான திருவாருரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அந்த நூல் அறிமுக நிகழ்வில் “மார்க்சியம் அனா ஆவன்னா” நூல் குறித்து பேசினேன். தோழர் தான் எழுதிய “சுவருக்குள் சித்திரம்” புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாங்க. பிறகு அதே போல் பட்டுக்கோட்டையிலும், திருத்துரைப்பூண்டியிலும், தஞ்சாவூரிலும் நடைபெற்ற அப்போது தான் நூல் அறிமுக நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பேசினேன். தியாகு தோழர் எனக்கு “கம்பிக்குள் வெளிச்சம்” புத்தகத்தையும் அன்பளிப்பாகக் கொடுத்தாங்க. இந்த இரண்டு பெரிய புத்தகங்களையும் அன்பளிப்பாகப் பெற்றது உண்மையிலேயே எனக்கு பெரிய இன்ப அதிர்ச்சி தான். அந்த புத்தகங்களைப் படித்த பிறகு நான் தோழரிடம் சொன்னேன் “தோழர்! இப்ப உள்ள இளைஞர்கள் இந்த புத்தகங்களைப் படிச்சா ஒங்களை தமிழ்நாட்டின் சேகுவேராண்ணு சொல்லுவாங்க தோழர்”.
“தமிழ்த்தேசம்” மாத
இதழின் தொடர்ச்சியாகவே 2019 ஆகஸ்டு மாதத்திலிருந்து “உரிமைத் தமிழ்த்தேசம்” மின்னிதழைக்
கொண்டு வந்தோம். தோழர் என்னை “உரிமைத் தமிழ்த்தேசம்” மின்னிதழின் பொறுப்பாசிரியராகப்
பணியாற்ற சொன்னாங்க.
2019 ஆகஸ்ட் மாதத்தில் பேரழிவுக்கு எதிரான பேரியக்கத்
தலைவர் க.கா.ரா. லெனின் அவர்கள் பட்டுக்கோட்டையில் “பேரழிவை எதிர்ப்போம்” என்ற தலைப்பில்
ஒருங்கிணைத்திருந்த பயிற்சி வகுப்புகளில் நான் ஹைட்ரோ கார்பன் திட்டம், நீரழுத்த விரிசலின்
தீமைகளைப் பற்றியும், அணு உலை, அணுக் கழிவு சேமிப்பின் அபாயங்கள் குறித்தும் பாடம்
எடுத்தேன். தியாகு தோழரும் அரசியல் பாடம் எடுத்தாங்க.
“உரிமைத் தமிழ்த்தேசம்”
இதழை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வெளியிட்டோம். 2023ல் தியாகு தோழர் தாழி மடல் வாயிலாக
செய்திகளை பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார். 2023 ஜூனிலிருந்து இன்று வரை தொடர்ந்து தினசரி
நானும் தாழி மடலுக்காகவே எழுதி வருகிறேன். உரிமைத்தமிழ்த்தேசம்” மின்னிதழுக்காகவும்,
தாழி மடலுக்காகவும் இதுவரை மொத்தம் 1,500க்கும் மேலான கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
(தொடரும்)

No comments:
Post a Comment