பணத்தின் தோற்றம் பத்திய பால் எயின்சிக்கின் அஞ்சாவது கோட்பாடு, ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகளின் தரஅளவுகோலிலிருந்து பணம் உருவாகியிருக்கலாம்னு சொல்லுது. ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள்னா என்னன்னு கேக்குறீங்களா? நீங்க கடையில ஒரு பொருளை வாங்கும் போது அந்த பொருளோட விலையை உடனடியா பணமா கொடுக்குறீங்க, ஒரு பொருளை விக்கும் போதும் பணத்தை வாங்கிக்கிட்டுத் தான் பொருளைக் கொடுக்குறீங்க. அதே பண்டமாற்றுல நடந்துச்சுன்னா வாங்கவேண்டிய பொருளுக்கு சமமான பொருளை விக்கிறீங்க இல்ல விக்கிற பொருளுக்கு சமமான பொருளை வாங்கிக்கிறீங்க, மேல சொன்ன பரிமாற்றங்கள்ல பொருட்களோட விலை கால இடைவெளி இல்லாம உடனடியா கொடுக்கப்படுது. இப்புடி இல்லாம வாங்குன அல்லது வித்த பொருளுக்கான விலையை உடனே கொடுக்காம அல்லது வாங்காம, கால தாமதமா கொடுக்கும் போது அல்லது வாங்கும் போது அதை ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள்ணு (deferred payments) சொல்றோம். இந்த கோட்பாட்டைப் பத்தி பால் எயின்சிக் சொல்றதை இப்ப கேப்போம்.
ஒத்திவைக்கப்பட்ட
கொடுப்பனவுகளின்
தரஅளவுகோலிலிருந்து
பணத்தின் தோற்றம்:
“ரொம்ப ஆரம்ப கட்டத்திலிருந்தே பழமையான சமூகங்களோட வாழ்க்கையில் ஒத்திவைக்கப்பட்ட கொடுப்பனவுகள் ஒரு முக்கியப் பங்கு வகிச்சுருக்கு. ஹில்டெபிராண்டின் கருத்துப்படி பரிணாம வளர்ச்சியில் மூன்று நிலைகள் இருந்தன - இயற்கை பொருளாதாரம், பணப் பொருளாதாரம் மற்றும் கடன் பொருளாதாரம் - என்பது முற்றிலும் தவறானது.
பணப் பொருளாதாரத்தின் நிலை எட்டப்படுறதுக்கு நீண்ட காலத்துக்கு முன்னாடியே கடன் மிகவும் விரிவான அளவுல இருந்துருக்கு. எந்தவொரு பரிமாற்ற ஊடகத்தின் தடயமோ அல்லது மதிப்பின் தரஅளவுகோலுக்கான தடயமோ கூட கண்டுபிடிக்கப்படாத சமூகங்களில் கூட பொருட்களை/பண்டங்களைக்
கடன் கொடுக்குற பல இனவியல் நிகழ்வுகள் இருக்கு.
பணத்திற்கு
முந்தைய
கட்டத்தில்
ஒத்திவைக்கப்பட்ட
கொடுப்பனவுகள்
உருவாகுவதற்கான
காரணங்கள்
பின்வருமாறு:
1.
பண்டமாற்று
செய்யப்பட்ட
பொருட்கள்
அல்லது
சேவைகளின்
மதிப்பில்
உள்ள
முரண்பாடுகள்:
வாங்குன பொருட்களோட மதிப்புக்கு
தோராயமாக சம மதிப்புள்ள பொருட்களை உடனடியாகத் திருப்பிக் கொடுப்பது எப்போதுமே சாத்தியமில்ல, அதோட கொடுக்கவேண்டிய மிச்ச மதிப்பு எதிர்காலத்துல ஏதேனும் ஒரு தேதியில் கொடுக்கப்பட்டுருக்கும். இத்தகைய ஒத்திவைக்கப்பட்ட விநியோகங்கள் பொருட்களில் கடன்களை உருவாக்குகின்றன. பண்டமாற்று செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பில் தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருந்தபோதிலும், பண்டமாற்று முறையைச் செயல்படுத்துறதுக்கு இதுபோன்ற பரிவர்த்தனைகளின் சாத்தியக்கூறு நீண்ட காலம் இருந்திருக்கனும். அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட ஜே.எஸ். மில்லின் கற்பனை உதாரணத்தை எடுத்துக்கிட்டா, தையல்காரர்களும் ரொட்டி சுடுபவர்களும் பண்டமாற்று முறையில் ஈடுபட இது உதவுது, இருந்தாலும் எந்த தையல்காரரும் ஒரு கோட்டுக்கு ஈடாக கொடுக்கப்பட்ட அனைத்து ரொட்டிகளையும் ஒரே நேரத்தில் சாப்பிட முடியாது.
2. இயற்கை நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட விநியோகங்கள்: விவசாய சமூகங்களில்
விதைகள் பெரும்பாலும் கடனா கொடுக்கப்பட்டது, அதோட அடுத்த அறுவடை பயிரிலிருந்து கடன்
திருப்பிச் செலுத்தப்பட்டது. கொல்லர்களுக்கும், பிற கைவினைஞர்களுக்கும் அறுவடைக்குப்
பிறகு கட்டணம் செலுத்தப்பட்டுருக்கு. அறுவடைகளுக்கு இடையில உணவுக் கடன் கொடுக்கப்பட்டது.
வேட்டைக்காரர்களும், மீனவர்களும் பொருட்களைக் கடன் வாங்கி, தங்களால எப்ப வேலை செஞ்சு
பொருள் ஈட்டமுடியுமோ அப்போ அவற்றைத் திருப்பிக் கொடுத்துருக்காங்க.
3. மீட்புத் தொகை, கப்பம், இரத்தப் பணம், மணமகள் பணம் போன்றவற்றைச் செலுத்த கடன்கள்
கொடுக்கப்பட்டுருக்கு.
4. நீண்ட காலத்துக்கு முன்கூட்டியே வாடகைகள் பண்டங்களில் நிர்ணயிக்கப்பட்டுருக்கு."
(தொடரும்)






