Thursday, February 29, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (19):

 

கோயம்புத்தூர்ல பெரிய பெரிய ஆளுக எல்லாம் பாஜகவுல சேரப்போராகண்ணு பெருசா வெளம்பரம் கொடுத்தாகளே, அப்புறம் ஏன் அத ஒத்திவெச்சுட்டாக… வேற என்ன பண்றது, அட அங்க ஒரு கழுத கூட வரலங்குறேன்… கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல, பேராசை பெரு நஷ்டமாயிடுச்சு… அப்புறம் அண்ணாமலை பயணத்தோட நிறைவு விழாவுக்கு மோடி வந்தாராமுல்ல, எங்கப்பன் குதுருக்குள்ள இல்லண்ணு சொல்லுற மாதிரி நாங்க கட்சிகள பிரிக்கிறதுல்லைன்னு சொல்லிருக்காருல்ல மோடி. இந்த விளக்கம் தேவையா, நீங்க கட்சில எப்புடி ஆளு சேக்குறீகங்குற லட்சணத்த பாத்துத் தான் ஊரே சிரிக்குதே… இவய்ங்க வெளில பாக்க தான் சாமியார் மாதிரி இருப்பாய்ங்க, ஆனா செயலுல அக்மார்க் தாதா வகையறா தான், அதுல அந்த தாவூத் தம்பி கூட இவுக பக்கத்துல நிக்கமுடியாதுல்ல. பாஜக எப்புடி ஆளு சேர்க்குறாக, அதுவும் குறிப்பா எதிர்க்கட்சிகள ரணகளம் பண்ணி அங்க உள்ள ஆளுகள எப்படி வெலைக்கு வாங்குறாக. எல்லாம் அமலாக்கத்துறைய வெச்சுத்தான், அமலாக்கத்துறை எதுக்கு இருக்கு யார் ஊழல் குற்றம் செஞ்சாலும் நடுநிலைத்தன்மையோட அவுகள விசாரிச்சு நடவடிக்கை எடுத்து ஊழலைத் தடுக்குறதுக்காக இருக்கு. ஆனா அத பாஜக தன்னோட எதிரிகள அழிக்குறதுக்கான ஆயுதமா தவறாதான பயன்படுத்துது. அவுகளுக்கு பாஜக ஒடைச்சா மண் குடம், காங்கிரஸ் ஒடைச்சா பொன் குடம்… அவுக எதிர்கட்சிண்ணா கடுகு போன இடம் ஆராய்வாக, ஆனா பாஜகவுல பூசணிக்காய் போன இடம் தெரியாது. இது தான் அவுகளோட நடுநிலைத்தன்மைங்கோ…

எதிர்க்கட்சி ஆளுகள, ஏய் இந்தாடா பாஜகவுல சேர்ந்துடு இல்லண்ணா என்ன பண்ணுவோம் தெரியுமுல்ல, நீ ஊழல் குற்றம் பண்ணுனியோ, பண்ணலையோ அத பத்தி எங்களுக்கு கவல இல்ல,  ஒன் மேல ரெய்டு விடுவோம், அதுனால ஒழுங்கு மருவாதையா பாஜகவுல சேர்ந்துடு, இல்லன்னா மானம் மரியாத கெட்டுரும், சந்தி சிரிக்கவெச்சுடுவோம், இப்புடித்தான் எல்லாரையும் மெரட்டி, பயமுருத்தி பாஜகவுல சேக்குறாக. காவல் துறையிலேருந்து போதை தடுப்பு ஆணையம் வரை எல்லா அரசு அதிகார அமைப்புகளையும் எதிர் கட்சிகள குதுரை பேரத்துல வாங்குறதுக்கான புரோக்கரா பயன்படுத்துறாக. பதவி ஆசை காட்டியும் ஆளு சேக்குறாக,  கோட்டையப் புடிக்க வீட்டையே வித்த கதையா நம்பிக்கைத்துரோகம் பண்ணி பாஜகவுக்கு போற பலபேர் அய்யோ பாவம் கடைசில ஏமாறத்தான் போறாக… இந்த மாதிரி பல திணுசா வித விதமா எல்லாமே தவறான விதத்துல தான் ஆளுகள சேக்குறாக…

சரி அது என்ன, மோடிக்கும் பாஜகவுக்கும் தமிழ்நாட்டு மேலயும், தமிழ் மக்கள் மேலயும் ஏன் திடீர்னு இம்பூட்டு அக்கறை பொத்துக்குட்டு வருது, மனுசனுக்கு எது கெடக்கலையோ அது மேல தான நெனப்பெல்லாம் இருக்கும், அது மாதிரித்தான் இதுவும், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவ சீண்டக்கூட மாட்டீங்குறாக, அத நெனச்சு நெனச்சு, பாஜகவுக்கு ரொம்ப வெளமா வருது, எப்புடியாச்சும், தமிழ்நாட்டுல தடம்பபதிக்கணும், எடம் புடிக்கணும்னு தவிக்குறாக. அவுக நல்லவுக இல்லைனு தான் அவுக வாயாலே சொல்லிட்டாக, இப்புடிப்பட்டவுக ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவாக ஆட்டையத்தான் போடுவுகா… ஏற்கெனவே போட்டது பத்தாதா தம்பியளா… தமிழ்நாட்டு மக்கள் புயல், வெள்ளம் வந்து கஷ்டப்படும்போதெல்லாம் இந்த மோடி அய்யா சல்லிக்காசு கூட குடுக்கல, ஆனா சவார்க்கார், கோல்வால்கர் நினைவு தினத்துல உருகி உருகி அழுது கண்ணீர் வடிக்கிறாரு, காந்திய கொன்ன கோட்சேவுக்கு கொடி புடிக்குறாரு, …. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான், பாஜகவோட இந்த புது ஒன்சைட் மோகம் எல்லாம் தமிழ்நாட்டுல ஒரு சீட்டு கெடைக்கிற வரைக்கும் தான்… கெடச்சுச்சுண்ணா பாஜகவோட போலி அக்கறையெல்லாம் காத்தோட காத்தா பறந்துரும்ல… அது இந்த சென்மத்துல நடக்கப்போறதுல்ல... தமிழ் நாட்டு மக்கள் பச்ச தண்ணி மாதிரி, தாமரை இலையில தண்ணி என்னெக்குமே ஒட்டாதுடோய்…

அய்யா மோடி, நீங்க துவாரகா தரிசணம் பண்றேண்ணு கடலுக்குள்ள என்ன தான் தலைகீழா நின்னு பல்டி அடிச்சு, ஸ்டண்ட் அடிச்சாலும் இந்த தடவ ஒண்ணுமே நடக்காதுங்கோ, மக்கள் ரொம்ப தெளிவா இருக்காக, இந்த முறை ஒங்க ஆகாசத்தாமரை பூக்காது, அதுனால ஒரு நல்ல ஆசுரமா பாத்து சேருறதுக்கு அட்வான்ஸா புக் பண்ணிடுங்கோ.

(தொடரும்)

Wednesday, February 28, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (18):

 

நான் நல்லவன் கெடையாது, அரசியல்ல நல்லவனுக்கு வேலை கெடையாதுண்ணு அண்ணாமலை சொல்லிருக்காருல்ல, அது நூத்துக்கு நூறு பச்ச உண்மைங்க… அது அவருக்கு மட்டுமில்ல, அந்த பாஜக-ஆர்.எஸ்.எஸ் சங்க்பரிவார் சங்கிக்கும்பல் மொத்தத்துக்கும், பொருந்தும், எனக்கு தெரிஞ்சு அண்ணாமலை சொன்ன ஒரே ஒரு உண்மை இது தானுங்க, மத்தபடி அவரு வாய தொறந்தாருண்ணா பொய்யும், பசப்பும் தானுங்க. சங்கிகளுக்கு அடி நாக்கிலே விசம் இருந்தாலும் நுனி நாக்குல அமுதமா தான் வரும், நாம தான் ஜாக்கிரதையா இருக்கோணும்.

அது என்ன என்னமோ வட்டியோட திருப்பிக்கொடுப்போம்ணு சொல்லிருக்காரே என்னது அது… அரசியல கந்துவட்டி வாங்குற பிஸினஸ் மாதிரி நெனச்சா, என்ன தான் மறைச்சாலும், பேச்சு அப்படித்தான வரும். அது என்னமோ என் மண், என் மக்கள்னு ஒரு பயணம் போனாறாமே, எது அவரு மண்ணு, யாரு அவுக மக்கள்?, பந்திக்கு முந்தி படைக்கு பிந்திண்ணு ஓடி ஒளிஞ்சு காட்டிக்கொடுத்தாணுகளே, அந்த களவாணிப்பயலுக சாவர்க்கர், கோல்வார்கர் வகையறாவோட சங்க் பரிவார்-ஆர்.எஸ்.எஸ் தோண்டுற பொதைகுழி இருக்கு பாத்தீங்களா, அங்க தான் இருக்கு அவரோட மண்ணு… அதுல அவரு விழுந்துட்டாரு, இப்ப நம்மளையும் விழச்சொல்லுறாரு, நாசமா போச்சு… யாரு தெரியுமா இந்த அண்ணாமலை… சங்க்பரிவார், ஆர்.எஸ்.எஸ் ஆதரவோட குடிமைப்பணிதேர்வுக்கு (சிவில் சர்வீஸ் எக்சாம்) கோச்சிங்க் கொடுக்குற சம்கல்ப் ஃபவுண்டேசன்ல வெசம் குடிச்சு வளந்தவரு தான் இந்த அண்ணாமலை, ஆட்சிய பாஜக புடிச்சாலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எல்லாம் நல்லவங்களா முற்போக்கான சிந்தனையோட வந்தா என்னய்யா பண்றது, நாட்டை நம்ம நெனக்கிற மாதிரி வளைக்கமுடியாதே அப்ப அவணுகளையும் சங்கிகளா மாத்தவேண்டியது தாண்ணு கோச்சிங்குற பேருல விசத்தை விதைக்கிற பணியை சில பத்தாண்டுகளா கனக்கச்சிதமா சம்கல்ப் பண்ணிட்டு வருதுல்ல… அவுக இண்டர்வியூவுக்காக ஸ்பெசலா இந்துத்துவா கோச்சிங்க் கொடுக்குறாகலாம்ல. சம்கல்ப் ஃபவுண்டேசன் ‘ராஷ்டிரிய பாவ்னா’ என்ற பேருல இந்துத்துவ செண்டிமெண்டுகள ஊட்டிவளக்குதாம். குடிமைப்பணிதேர்வுல வெற்றிபெற்றவுகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் (சஹ் சர்கார்யவாஹ்) கிருஷ்ண கோபால் சங்கிசேவை பண்ணுங்கப்பாண்ணு விரிவுரை எடுத்தாராம். இவுக நிகழ்ச்சிகள்ல அமித்ஷா உட்பட சங்கி வகையறா எல்லாம் கலந்துக்குறாக. அவுகளோட யூட்யூப் சேனல்ல நம்ம உள்ளூர் சங்கி ஆளுநர் என்.ரவி பேசியிருக்குறார்னா பாத்துக்கங்களேன். சம்கல்ப் ஃபவுண்டேசனுக்கு மீடியா பப்ளிசிடி அதான் ஊடக வெளிச்சம் எல்லாம் புடிக்காதாம். ஏன் உண்மையெல்லாம், அவுகளோட அயோக்கியத்தனம் எல்லாம் அம்பலமாயிடும்ல, அதான்… அதுனால வெளிய தெரியாம வேலைய கமுக்கமா முடிச்சுருவாகலாம். சம்கல்ப் ஃபவுண்டேசனுக்கு இந்தியா முழுக்க கிளைகள் இருக்காம். இந்தியாவுல அரசுபணித்துறை அதிகாரத்துறைய (Bureaucracy) இப்புடித்தான் சங்கிமயம் ஆக்கிருக்காக…

சரி அவுக மக்கள் யாரு தெரியுமா, பிளேடு பக்கிரி, அருவா ஆறுமுகம், கத்தி கஜா, ரவுடி ரவி, குண்டு கோபி, பீடி ரமேஷ், பட்ட பாலாஜி, புல்லட் பாண்டி, கஞ்சா கபாலி, பான் பராக் பாபு, திருட்டு தினேஷ், சவுக்கு சேகர், சங்கிலி சோமு, துப்பாக்கி துரை, போக்கிரி ராஜா இந்த மாதிரி ஆளுக தான், மொள்ளமாரி, முடுச்சவிக்கி, சோமாரி தாதா, ரவுடி கும்பல் தான் இப்ப தமிழ் நாட்டு பாஜகவுல சேர்ந்துருக்காக, இவுக தான் அண்ணாமலையோட மக்கள். சில போலிசும் களவாணிப்பயலுகளும் நல்லா தோஸ்தா இருப்பாகண்ணு சொல்லுவாகலே… அது அண்ணாமலைக்கு அட்டகாசமா பொருந்துதுல்ல… பின்ன பாஜகவுக்கு அடியாளுகள் எல்லாம் வேணாம, அத வெச்சுத்தான அரசியல்ல நல்லா பிசினஸ் பண்ண முடியும். இந்த ஊரு வம்பு பேசுறதெல்லாம் நமக்கு புடிக்காதுப்பா. எனக்கு வேல கெடக்கு நான் வார்றேன்…

(தொடரும்)

Tuesday, February 27, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (17):

 

2024 ஜனவரி மாசத்துல தேர்தல்களின் குடிமக்கள் ஆணையமும், தொலைத்தொடர்பு நிபுணர் சாம் பிட்ரோடாவும், இணைய வழி ஸூம் செய்தியாளர் சந்திப்புல 2024 தேர்தல்களைக் கண்காணிக்க ஒரு சர்வதேச தேர்தல் குழுவை உருவாக்கப்போறோம்னு அறிவிச்சிருந்தாங்க. இந்தக் குழுவுல வெளிநாட்டைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஏழு பேர் இடம் பெறுவாங்க பிப்ரவரி மாசத்துக்குள்ள குழு இறுதி வடிவம் பெறும்னு சொல்லியிருந்தாக.

2024 நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவை அமைக்க சிவில் சமூகத்தில் உள்ள நாங்கள் முன்மொழிஞ்சிருக்கோம். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருது, ஃபிப்ரவரி நடுவுல குழு அமைக்கப்படும், இந்தக்குழுவின் மூலம் தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுதா என்பது கவனமாக கண்காணிப்படும். இது மின்னணு வாக்கு எந்திரங்கள் அல்லாம மற்ற விஷயங்களையும் ஆய்வு செய்யும். வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் போன்றவையும் இதில் அடங்கும்ணு தேவசகாயம் சொல்லியிருக்காக.

ஜனநாயகத்தில குடிமகன்தான் இறையாண்மை உடையவன், அவர் தனது இறையாண்மையை ஒரு பிரதிநிதிக்கு மாற்றுறாரு, வாக்கு எங்கே போகுதுண்ணு வாக்காளருக்குத் தெரியலைணா தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைப்படி  இணக்கமாக நடத்தப்படலைணு தான் அர்த்தம். தேர்தல் ஆணையம் வாக்குச் சரிபார்ப்பை உறுதி செய்றகாகத் தான் விவிபேடை கொண்டு வந்துச்சு. அதுனால காகிதச் சீட்டைத்தான்  எண்ணணும், ஆனால் மின்னணு வாக்கு எந்திரத்தின் பதிவை மட்டுமே கணக்கிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுது. இது முழு நகைச்சுவையா இருக்கு. அவங்க ஒரு சில விவிபேட்களை மட்டும் தான் எண்ணுறாங்க, முழுசா எண்ணுறதில்லை. இது தேர்தல் ஆணையத்தோட மோசடி. தேர்தல் ஆணையம் யாருடைய பேச்சையும் கேட்குறதுல்லை. நடைமுறையில், விவிபேட் சீட்டுகளை 100% எண்ண வேண்டிய தேவை இருக்கு. இந்த அமைப்பு மென்பொருள் மற்றும் வன்பொருள் சாராததாக இருக்க வேண்டும், அதனாலதான் ஜெர்மன் உச்ச நீதிமன்றம் மின்னணு வாக்கு எந்திரங்களை தூக்கி எறிஞ்சுது; ஜனநாயகம்  நுனிக்கு நுனி சரிபார்ப்பு ஆகிய கொள்கைகளுக்கு இணங்காத எந்தவொரு தேர்தல் செயல்முறையையும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிச்சுதுண்ணு தேவசகாயம் சொல்லியிருக்காக.

சாம் பிட்ரோடா, தேவசகாயம் ரெண்டுபேருமே தேர்தல் ஆணையம் "எதேச்சதிகார அணுகுமுறையுடன்" செயல்படுவதாக விமர்சிச்சிருக்காங்க.

 கடந்த சில வருடங்களில் எல்லாவிதமான சிக்கல்களும் உருவாக்கப்பட்டுருக்கு. 2024 தேர்தல் இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். அது தேசத்தின் நீண்ட காலத்திற்கான தலைவிதியை தீர்மானிக்கப்போகுது என்பதால பெரும் அக்கறைக்குரியதாக இருக்கு. மின்னணு வாக்கு எந்திரங்களின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் இருக்கு. குடிமக்களாகிய நாங்கள் மின்னணு வாக்குச்சீட்டு இயந்திரத்துல நம்பிக்கையை இழந்துட்டோம் அதுனால காகித வாக்குச் சீட்டுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. மக்கள் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கையை இழந்துவிட்டதால, மீண்டும் காகித வாக்குச் சீட்டுக்கு செல்லுமாறு குடிமை சமூகக் குழுக்கள் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தவும் அழுத்தம் கொடுக்கவும் உள்ளதாக சாம் பிட்ரோடா சொல்லியிருக்காக.

இப்போ தேர்தலுக்கு இரண்டு மாதங்களே இருக்குற நிலையில வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துறதுக்கும், நமது தேர்தல் முறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்குறதுக்கும் காகித வாக்குச் சீட்டுக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியேயில்லை. தேர்தல்களின் குடிமக்கள் ஆணையத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட கவலைகள் ஆபத்தானதாக இருந்தாலும், குடிமை சமூகத்தின் கவலைகளைத் தீர்ப்பதை தேர்தல் ஆணையம் உறுதியாக மறுத்து வருது. ஒரு பெரிய நம்பிக்கை பற்றாக்குறை உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் என்ன நினைக்கிறது என்பது முக்கியமில்லை, இந்திய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்... இன்றைக்கு இருக்குற ஒரே வழி, என்னைப் பொறுத்தவரை, காகித வாக்குச்சீட்டுதான்ணு சொல்லியிருக்காக.

 இந்த லோக்சபா தேர்தலுக்கு காகித வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தனும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியுமா முடியாதா என்று விவாதம் செய்றதுக்கான நேரம் போயிடுச்சு. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்-விவிபாட் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கல. லோக்சபா தேர்தல் சீக்கிரம் நடைபெற இருக்குறதால, அந்த பிரச்னைகளை விவாதிக்கும் நேரம் போய்விட்டது. தேர்தல் ஆணையத்திடம் சிவில் சமூகம் அடிக்கடி மனு கொடுத்துருக்கு, ஒன்று காகித வாக்குச் சீட்டுக்கு திரும்பணும் அல்லது எல்லா விவிபேட் சீட்டுகளையும் எண்ண வேண்டும். இது டிஜிட்டல் இந்தியாவுக்காக வலியுறுத்துவது அல்ல. இது அடிப்படைகளுக்குத் திரும்புவது, காகிதத்திற்குத் திரும்புவது. மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் விவிபேட்களைப் பொறுத்தவரை யாரை நம்புவது என்பது வாக்காளருக்குத் தெரியல. நாம வாக்காளரை நம்ப வைக்க வேண்டும், தேர்தல் ஆணையத்தை அல்ல அப்டிணும் சொல்லியிருக்காக.

வெறுப்புணர்வை தூண்டும் ஆளும் கட்சியை சாடிய பிட்ரோடா, பிரிவினை அரசியலால் நாட்டில் ஜனநாயகம் பாதிப்பில் உள்ளது. சமூக ஊடகங்கள் பொய்கள், வெறுப்பு மற்றும் பயத்தை அதிகப்படுத்துகின்றன, இதை நான் இந்தியாவிலும் பல நாடுகளிலும் பார்க்குறேன். இதன் விளைவாக, மக்களின் வாக்குகள் மேலும் பலம் பெறுகின்றன. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஆனால் கடந்த சில ஆண்டுகளில், நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன, சிவில் சமூகம் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை, இதன் விளைவாக, மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் விழிப்புணர்வு பெற்று மின்னணு வாக்கு எந்திரம் விவகாரம் தொடர்பாக ஒற்றைக் குரலில் பேச வேண்டும்ணு அறிவுறுத்தியிருக்காக.

ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, கனடா, ஃபின்லாந்து, நார்வே, ஸ்வீடன், ஐக்கிய முடியரசு, அயர்லாந்து, ஜப்பான், டென்மார்க், பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா போன்ற பல நாடுகள்ல இன்னமும் தேர்தல வாக்குச்சீட்டு முறையில தான் நடத்துறாக. இந்தியாவுலயும் தேர்தல நேர்மையா நடுத்தி ஜனநாயகத்த காப்பாத்துறதுக்காக நாமளும் வாக்குச்சீட்டு முறைக்குத் தான் திரும்பணும். அதனால இந்த பாட்டி சொல்லைத் தட்டாதீக. வாக்குச்சீட்டு முறைக்கு திரும்புறதுக்கான வேலைகள கவனிங்க.

 (தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...