கடன் வழங்கும் நாடுகளின் இந்த
குழு 1956 இல் நிறுவப்பட்டது. கடன் பணம் செலுத்தாத வளரும் நாடுகளைக் கையாள்வதில் நிபுணத்துவம்
பெற்றுள்ளது. முதலில் பதினொரு நாடுகளைக்
கொண்டிருந்த இவ்வமைப்பில் தற்போது 20 உறுப்பு நாடுகள் உள்ளன. பாரிஸ் கிளப், சர்வதேச பண நிதியம், மற்றும் உலக வங்கியுடன்
இணைந்து, உலகப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை பராமரிக்க கடனளிக்கும் குழுக்களால்
உருவாக்கப்பட்ட மூலோபாயத்தில் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது.
பாரிஸ் கிளப் பிரெஞ்சு நிதி அமைச்சகத்தில் சந்திக்கிறது, கடனை
அடைப்பதில் சிரமம் உள்ள தென் நாடுகளில் இருதரப்பு பொதுக் கடன்களை அடைப்பதற்கான மறு
பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
பொதுவாக மாதாந்திரக் கூட்டங்கள்
எப்போதும் நடைபெறும். கடன்பட்ட நாட்டிலிருந்து பிரதிநிதிகள் குழுவும் அதன் கடன் வழங்குபவர்களும்
அகர வரிசையில் மாநாட்டு மேசையை சுற்றி அமர்ந்திருப்பர். பலதரப்பு நிறுவனங்களும், சர்வதேச
பண நிதியம் (IMF), உலக வங்கி, ஐநா வர்த்தகம், வளர்ச்சிக்கான அவை (UNCTAD), வட்டார மேம்பாட்டு வங்கிகளும் அதில் கலந்துகொள்ளும். பாரிஸ்
கிளப்பின் தலைவர் - பெரும்பாலும் ஃபிரெஞ்சு கருவூல இயக்குனர் நிகழ்வைத் தொடங்கி வைப்பர்.
கடன்பட்ட நாட்டின் தூதுக்குழுவின் தலைவர், பொதுவாக நிதி அமைச்சர் அல்லது மத்திய வங்கியின்
ஆளுநர், நிகழ்வில் அவரது இருப்புக்கான காரணங்களை விளக்குவார். முந்தைய மாதங்களில் அரசு பாரிஸ் கிளப்புடன் தொடர்பு கொண்டு ஏற்கனவே
சில நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டிருக்கவேண்டும்.
இரண்டு மிகக் கடுமையான நிபந்தனைகளை
ஏற்றுக்கொள்வது, ஒன்று பாரிஸ் கிளப்பிடம் கடனைத் திருப்பிச் செலுத்துவதைத் தொடர முடியாதததை
நிரூபிக்கவேண்டும், சர்வதேச பண நிதியத்தின்
பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இவ்வாறு மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்யவேண்டும். சந்திப்பதற்கு
முன்னே கடனாளி நாடுகள் கடனளித்தவர்களின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்பதால் அந்தக்
குறிப்பிட்ட நாளில் தூதுக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்த எந்த வாய்ப்பும் இல்லை. இந்த
தொடக்க விளக்கக்காட்சிக்குப் பிறகு, சர்வதேச பண நிதியம் (IMF), நாட்டை அதன் இக்கட்டான நிலையில் இருந்து மீட்க திட்டமிடப்பட்ட
சீர்திருத்தங்களை விவரிக்கிறது
பின்னர் உலக வங்கி மற்றும் ஐநா
வர்த்தகம், வளர்ச்சிக்கான அவை (UNCTAD) அவர்களின் முடிவுகளை முன்வைக்கிறது, அதன் பிறகு
கேள்வி-மற்றும் பதில் அமர்வு தொடங்கும். பிந்தைய அமர்வு பேச்சுவார்த்தை என்று அழைக்கப்பட்டாலும்
அங்கே தெளிவாகக் காணக்கிடைப்பது கடனளித்தவர்களின் சர்வ அதிகாரம் தான். கடனாளி நாட்டின் பிரதிநிதிகள் வெளியேறுமாறு
கோரிவிட்டு பாரிஸ் கிளப்பின் உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.முடிவுசெய்யப்படும்
வரை கடனாளி நாடுகளின் பிரதிநிதிகள் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
வரை வெளியே காத்திருக்கவேண்டும். பாரிஸ் கிளப் முடிவு செய்தவுடன், தென் நாட்டின் பிரதிநிதிக்குழுவுக்குத்
தெரிவிக்கிறது. முடிவுகளில் திருப்தி அடையவில்லை
என்றால், விவாதம் மீண்டும் செய்யப்படலாம், ஆனால் கடனாளி நாடுகள் தங்கள் நிலையை வற்புறுத்துவதற்கான
சாத்தியம் குறைவாகவே உள்ளது
பாரிஸ் கிளப் இரண்டு வகையான கடன்களை
வேறுபடுத்துகிறது: அதிகாரப்பூர்வ வளர்ச்சிக்கான உதவிக் கடன்கள் (ODA) குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்படும். ‘ODA’ அல்லாத கடன்கள் (அல்லது
வணிகக் கடன்கள்), பொதுவாக, பாரிஸ் கிளப்பின் கடன் குறைப்பு ஏழ்மையான மற்றும் அதிக கடன்பட்ட
நாடுகளுக்கே மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
பணம் செலுத்துவதில் சிரமம் உள்ள பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு பாரிஸ் கிளப் கடன் மறுசீரமைப்பை முன்வைக்கிறது,
இது வெறுமனே பிரச்சனையை பிற்காலத்திற்கு
ஒத்திவைக்கிறது. பாரிஸ் கிளப் எப்போதும்
வட்டியை மூலதனமாக்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, பாரிஸ் கிளப்
கடன்களுக்கான நிலுவையிலுள்ள வட்டி மூலதனமாக மாற்றப்பட்டு ஆரம்பக் கடனுடன் சேர்க்கப்படுகிறது - இதனால் வட்டி
மேலும் உயருகிறது. எப்பொழுதும் ரகசியம் காக்கும் நெறிமுறையை வளர்த்துக்கொள்ளும், பாரிஸ் கிளப் கவனமாக ஊடகங்களின் கவன
ஈர்ப்பை தவிர்க்கிறது.
No comments:
Post a Comment