Sunday, June 30, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (122):

 

அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:

தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா

ஹினா சுபேரி: சகோதரி ஷான்சா, தயவுசெய்து உங்கள் கேள்வியை கேளுங்கள்.

ஷான்சா: நன்றி சகோதரி. எனது கேள்வி சகோதரர் அனில் விளாடிற்கானது, இங்கு வந்ததற்கு நன்றி. உங்கள் அனைவருடனும் அமைதி நிலவட்டும். எனது கேள்வி என்னவென்றால், இந்து மதத்தில் உள்ள சாதி அமைப்பு, அது மிகவும் உண்மையானது என்பதும் அது மத  நிலைப்பாட்டில் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது என்ற விழிப்புணர்வும் நம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இப்போது ஹிந்துத்துவா இயக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான சாத்தியப்பாட்டை நீங்கள் உண்மையில் எப்படி பார்க்கிறீர்கள்? உங்களின் முயற்சிகள் அதற்கான முயற்சிகளில் ஒன்று என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதை நான் அறிவேன், உங்களுக்குத் தெரிந்த முஸ்லீம் அமைப்புகளுடன் ஒத்துழைத்து செயல்படுவதோடு, அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான கல்வியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் உண்மையில் நீங்கள் வேறு என்ன பார்க்கிறீர்கள், ஏனென்றால் அது மதத்திற்குள்ளும், மனப்போக்குகளுக்குள்ளும் ஆழமாகப் பதிந்துள்ளது, மேலும் இந்த வகையான கோட்பாட்டின் வளார்ச்சியைக் கட்டுப்படுத்த நாம் உண்மையில் எப்படி செயல்படவேண்டும் என்று சொல்லுங்கள்.

அனில்: ஆம், இது மிகவும் கடினமான கேள்வி. குழு உறுப்பினர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவரும் பதிலைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், சிறுபான்மையினர் அனைவரும் ஒன்றிணைந்து, அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒத்த எண்ணம் கொண்ட ஹிந்துக்களிடம் இருந்தும் உதவி பெறாதவரை, இந்தப் பிரச்சினை ஓயப்போவதில்லை. தற்போது ஒட்டுமொத்த இந்தியாவும் அழிந்து வருகிறது. இந்தியாவின் அமைப்பில் கூடுதலாக வாக்கு பெற்றவரே ஆட்சி செய்யமுடியும். சுமார் 35 சதவீத வாக்குகள் உங்களுக்கு பெரும்பான்மையான இடங்களைப் பெற்றுத் தரும், மேலும் தீவிர வலதுசாரி சக்திகளை நீங்கள் ஈர்த்து அந்த 35 சதவீதத்தைப் பெறலாம், பின்னர் அவர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி ஆட்சி செய்யலாம்.  அதனால் இந்தியா அழிவின் பாதையில் செல்கிறது, அதே நேரத்தில் விவசாயிகள் ஒன்றிணைந்த விதத்தைப் பார்த்தால், கருமேகங்களில் வெள்ளித்திரையும் உள்ளது என்றும் சொல்லமுடியும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்த விதம், சி.ஏ.ஏ-எதிர்ப்பு போராட்டங்கள் விழிப்புணர்வுக்கான அறைகூவலாக உள்ளது. உலகமெங்கும் காணப்பட்ட பெரும் எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டங்கள் இயற்றப்படவில்லை, அது ஒரு எதேச்சதிகார அரசாங்கமாக இருந்தபோதும், ​​அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் வழியில், எதையும் அவர்கள் பெறுவது எளிதானது அல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். ஆம், தொடரவேண்டும். மக்களே நாம் ஒன்றுபட வேண்டும். நாம், நம்மில் நிறைய பேர் பலவிதமான மதம், ஜாதி, பாலினம், மதம் என்று பிரிந்திருந்தாலும், பொது நலனுக்காக நாம் ஒன்றுபட வேண்டும். அந்த கூட்டணிகளை உருவாக்க வேண்டும்.

 (தொடரும்)

 

 

பொம்மைகளின் புரட்சி (53)

 

குக்குவோட அம்மா: இவ்வளவு நேரமா தேடுறோம் அவள காணோமே, எனக்கு ரொம்ப பயமா இருக்கு

அடைக்கலம் தாத்தா: அதெல்லாம் ஒன்னும் கவலைப்படாதம்மா… குக்கு ரொம்ப கெட்டிக்காரி, எங்கயும் தொலைஞ்சு போயிருக்க மாட்டா… இதோ கண்டுபிடிச்சுடலாம், பதட்டப்படாம வாமா…

குக்குவோட அப்பா: என்ன அங்க கூட்டமா இருக்கு வாங்க போயி பாப்போம்

அமர் மாமா டோலக்க வாசிக்க ஆரம்பிச்சாங்கலா, குக்கு தலைய ஆட்டி, ஆட்டி… கைய, கால வீசி அமர் மாமவையும், கரடியையும் சுத்தி சுத்தி ஆடுனா… குக்கு விஸ்கு விஸ்குன்னு ஆடறத பாக்க ரொம்ப ஜோரா இருந்துருச்சா, கொஞ்சம் கொஞ்சமா ஆளுங்க சேந்துட்டாங்க, ஒரு சின்ன கூட்டமே கூடிடுச்சு, தட்டுல காசும் விழுந்துச்சு… அமர் மாமாவுக்கு ஒரே சந்தோசம், இடையில குக்குவ நிப்பாட்டி தண்ணீ குடிக்க வெச்சுட்டு, உற்சாகமா டோலக் வாசிச்சிக்குட்டே இருந்தாரு… கரடி மெரண்டு போய் எல்லாத்தையும் பாத்துக்குட்டு இருந்தது படுத்து தூங்க ஆரம்பிச்சிருச்சு…

குக்குவோட அம்மா: குக்கும்மா, ஏங்க, கொழந்தைய இப்புடியா கொடுமைப்படுத்தி ஆடவெப்பீங்க… அம்மா கிட்ட வாடா குக்கு…

குக்கு: இரும்மா… கொஞ்ச நேரம் ஆடிட்டு வந்துடறேன்மா…

அடைக்கலம் தாத்தா: வாசிக்கிறத நிப்பாட்டுயா மொதல்ல… புள்ளை புடிக்கிறவனா நீ…

குக்கு: அப்படி சொல்லாதீங்க தாத்தா, அமர் மாமா பாவம், நான் தான் கரடி கூட இருக்கனும்னு இங்கயே இருந்துட்டேன்… அவரு என்னைய வீட்டுக்குத்தான் போகச்சொன்னாரு… அவர எதுவும் திட்டாதீங்க…

அமர் மாமா: இந்த மாதிரி எதுவும் ஆகக்கூடாதுன்னு தான் நான் அப்பவே சொன்னேன்… குக்குவ வீட்டுக்கு போயிடுன்னு சொன்னேன், அது தான் கேக்கல, கரடி கூடத்தான் இருப்பேன்னு ரொம்ப அடம் புடிச்சுச்சு… நான் என்னங்க பண்ணுறது…

குக்குவோட அப்பா: கரடிய வெச்சு வித்தை காட்டுறத எல்லாம் எப்பயோ தடை பண்ணீட்டாங்க, இன்னும் ஏன் இதெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க…

அமர் மாமா: ஆமாம் சட்டப்படி நான் பண்ணுறது தப்பு தான்… ஆனா ஒங்க சட்டப்படி நான் பட்டினி கெடந்து சாவுறது மட்டும் சரியா, நியாயமா… நான் வேணுமுன்னா இப்புடி பண்ணிக்கிட்டு இருக்கேன், வேற வழி இல்லாமத் தான்…

குக்குவோட அப்பா: அவரு சொல்றது நியாயம் தான், வன விலங்குகளை வெச்சு தொழில் செய்யுறத தடை செஞ்ச அரசாங்கம், அத நம்பி பொழைச்சுக்கிட்டு இருந்தவங்களுக்கு மறுவாழ்வு கொடுக்க தவறிடுச்சு… ஒங்களுக்கு நாங்க ஏதாவது ஒரு வழி பண்ணுறோம்… ஆனா இந்த கரடிய மட்டும் விட்டுடுங்க, நாம அத மொறைப்படி வனப்பாதுகாப்புத்துறைகிட்ட ஒப்படைக்கனும்…

அடைக்கலம் தாத்தா: என்னோட பழக் கடைய பாத்துக்க ஆள் இல்லை… நான் கொஞ்ச நாளைக்கு பேரப்புள்ளைகளோட ஓய்வா இருக்கனும்னு நெனைக்கிறேன்… நீங்க நம்பிக்கையா நடந்துக்கிட்டிங்கன்னா, ஒங்களுக்கு நானே வேலை போட்டுத் தாரேன், என்ன சொல்றிங்க தம்பி…

அமர் மாமா: நான் ரொம்ப நாணயமா இருப்பேன்யா… நீங்க சொல்ற படியே நடந்துக்குறேன்…

(தொடரும்)

Friday, June 28, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (121):

 

அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:

தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா

ஹினா சுபேரி: கேர் அமைப்பால் தலித் வழக்குகளை எடுத்துக்கொள்ள முடியுமா என்று பார்வையாளர்களிடம் கேள்வி வந்துள்ளது. அதற்கு சலாவுதீன், ஆம் என்று தெரிவித்துள்ளார். அவர்கள் முஸ்லிமல்லாதவர்களிடம் இருந்தும் வழக்குகளை எடுக்கிறார்கள் என்றும், தலித் வழக்குகளை எடுப்பதற்கு அவர்கள் நிச்சயமாக தயாராக இருப்பார்கள் என்றும் பதிலளித்துள்ளார். எனவே, அனில் மற்றும் சலாவுதீன் இருவரையும் பின்னர் தொடர்பு கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன், முஸ்லிம் சமூகம் உறுதியான வழியில் தங்கள் ஒருமைப்பாட்டை உங்களுக்கு வழங்க முடியும், எங்கள் சிவில் உரிமைகள் அமைப்பு உங்களின் உரிமைகளுக்காகவும் போராட முடியும்.

.அனில் அனந்தசுவாமி: உங்கள் நிறுவனத்தில் ஜாதி தொடர்பான விஷயங்களைப் பற்றி பேச ஏதேனும் வாய்ப்புகள் இருந்தால் இந்த விஷயத்தை அணுக உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் ‘HR’ உடன் சில சந்திப்புகளை அமைக்க முடிந்தால், நாங்கள் வந்து அதைப் பற்றி பேச தயாராக இருக்கிறோம். ஒரு அமர்வை ஏற்பாடு செய்யுங்கள், ஒரு அமர்வை நடத்துங்கள். நான் ஒரு இணைப்பைப் பகிர்ந்துள்ளேன், அதில் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் குறிப்புகளுடன் விரிவான பவர்பாயிண்ட் காட்சி விளக்கப்படங்கள் உள்ளன. அதில் நிறைய தரவுகள், நிறைய ஆவணங்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன, எனவே நீங்கள் அதையும் சான்றாதாரத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். ஜாதி குறித்த விழிப்புணர்வை தூண்டும் நிகழ்வுகளை  நீங்கள் விரும்பினால் உங்கள் அமைப்பில் இருந்து எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

ஹினா சுபேரி: சகோதரர் மசூத் ராப் ஒரு கேள்வி கேட்டார். தயவுசெய்து தொடரவும்.

மசூத் ராப்: அனிலுக்கான கேள்வி என்னவென்றால், அமெரிக்காவில் ஹிந்துத்துவா மற்றும் ஆர்எஸ்எஸ் கோட்பாட்டின் பரவலை எதிர்ப்பதற்கு அம்பேத்கரியர்களோ அல்லது பெரியாரியர்களோ இணைந்து ஏதேனும் ஒரு கூட்டணியை அல்லது பிற குழுக்களுடனான ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளார்களா, அல்லது அவர்களுடன் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு ஏதேனும் முன்முயற்சிகள் உள்ளதா? என்பதே எனது கேள்வி..

அனில் அனந்தசுவாமி: ஆம், நன்றி. கேள்விக்கு மிக்க நன்றி. அம்பேத்கர் சர்வதேச மையத்தின் சார்பாக நான் இங்கு வந்து பேசுவதும் அத்தகைய ஒரு முயற்சிதான். நான் அட்லாண்டாவைச் சேர்ந்தவன், உள்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகளை நாங்கள் உணர்வுபூர்வமாக அணுகி வருகிறோம், மேலும் அட்லாண்டாவில் பெரிய ‘CAA’ எதிர்ப்பையும், எதிர்ப்புகளுக்கான போராட்டங்களையும் நடத்த உள்ளூர் முஸ்லிம் குழுக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் முக்கியப் பங்காற்றினேன். நிச்சயமாக, அத்தகைய கூட்டுத் திட்டங்களைக் கொண்டு வர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒரு சமயத்தில் டாக்டர் அம்பேத்கரின் பேரன் எங்கள் அமைப்பில் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். பெரும்பாலான முஸ்லீம் அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன, மதச்சார்பற்ற இந்து அமைப்புகளும் ஹிந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயல்படுகின்றன. எனவே, ஆம், நாங்கள் திறந்த நிலையில் இருக்கிறோம், மற்ற சிறுபான்மையினர், ஆர்எஸ்எஸ் கோட்பாடு மற்றும் ஹிந்துத்துவா கோட்பாட்டை எதிர்க்கும் மக்களுடன் பாலம் அமைக்க முயற்சிக்கிறோம்.

ஹினா சுபேரி: பதிலுக்கு மிக்க நன்றி அனில் அண்ணா.

 

 (தொடரும்)

 

 

Thursday, June 27, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (120):

 

அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:

தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா

சலாவுதின்: பெரும்பாலும் முஸ்லிம்கள் எங்கள் அலுவலகத்தை அழைக்கிறார்கள்.  ஆனால் நாடெங்கும் உள்ள வழக்கறிஞர்களுடன் உள்ள தொடர்புகள் மற்றும் உரையாடல்களின் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களும் மீது பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, சிகாகோவில் ஒரு ஆஃப்பிரிக்க-அமெரிக்க கனவான் பாகுபடுத்தப்பட்டாக வழக்கு உள்ளது. சில சமயங்களில் மக்கள் தங்கள் பெயர்களை மாற்ற முயற்சிப்பதை நீங்கள் பார்ப்பீர்கள் அல்லது வெளிப்படையாக முஸ்லிமாக அதிகம் தெரியாதபடியான அல்லது வெளிப்படையாக ஆப்பிரிக்க-அமெரிக்கராக அதிகம் தெரியாதபடியான பெயர்களைப் பயன்படுத்துவதையும், நடுப்பெயர்களைப் பயன்படுத்துவதையும் நீங்கள் பார்ப்பீர்கள். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு நபர் அவரின் நடுப் பெயரைப் பயன்படுத்துவதைக் கண்டோம், அது வெளிப்படையாக முஸ்லீம் எனத் தெரியாதவாறு மறைக்கும் பெயரைப் போன்றது. மேலும் அவர்கள் அந்த வழியில் விண்ணப்பித்தார்கள். அவர்கள் உண்மையில் அவர்களின் முதல் பெயரைப் பயன்படுத்துவதற்கு மாறாக அவர்களின் நடுப் பெயரைப் பயன்படுத்தி நேர்காணல் வரை சென்றனர், எனவே இது நாம் பார்க்கும் ஒரு விஷயம். குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு, இந்தியர்களுக்கு எதிரான எந்த வழக்குகளையும் நான் பார்க்கவில்லை, ஆனால் அவை இருப்பதாக நான் உறுதியாக நம்புகிறேன். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. முக்கியமாக எங்கள் அலுவலகத்திற்கு வரும் பெரும்பாலான வழக்குகள் முஸ்லிம்கள் தொடர்பானவை. ஆமாம், மன்னிக்கவும்.

ஹினா சுபேரி: சமூக நீதிப் பிரச்சினைகளில் நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்முனைப்புடன் இருக்கும் போது அவர்களால் ஏதாவது செய்ய முடியும் என்றால், நான் பரிந்துரைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், இது போன்ற ஒரு அமர்வை ஏற்பாடு செய்யவேண்டும், பணியிட பாகுபாடு அமர்வு, மக்கள் வெவ்வேறு வகையான பாகுபாடுகளைக் கொண்டிருந்தால் அதைப் பற்றி பேசக்கூடிய திறந்த பாதுகாப்பான வெளியை உறுதிசெய்யவேண்டும், ஏனென்றால் இனம், பாலினம் பற்றி பல முறை பேசப்படுவது எனக்குத் தெரியும். ஆனால் சாதி அல்லது மதம் பேசப்படாமல் இருக்கலாம். எனவே ஒருவேளை அது அவர்களுக்குப் பேசுவதற்கு பாதுகாப்பான இடத்தைக் கொடுக்கலாம் அல்லது அவர்கள் நட்பாளர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தலாம். சமத்துவ ஆய்வகங்கள் என்பது சாதிப் பாகுபாடு குறித்த பெருமளவிலான மூலங்களைக் கொண்ட மற்றொரு அமைப்பாகும். அந்த ஆதாரங்கள் ஒரு toolkit-கருவித்தொகுப்பில் பகிரலாம். அம்பேத்கர் மையத்தில் மக்கள் பயன்பெறக்கூடிய கலந்துரையாடல்களில் நீங்கள் கையாளக்கூடிய ஆதாரங்கள் உள்ளன. அதே போல் கேர் அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு மக்கள் பயன்படுத்தக்கூடிய கலந்துரையாடல் பெட்டியில் அவர்கள் விடக்கூடிய ஆதாரங்களைக் கொண்டுள்ளது. யாரோ ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார், ஹிந்துத்துவ பயிற்சி பெற்ற ஷாகாஸ் என்று அழைக்கப்படும் ஹிந்துத்துவ பயிற்சி பெற்ற உறுப்பினர்களால் குடியேறிய இந்துக்களின் குழந்தைகளுக்கு வார இறுதியில் இனப் பயிற்சி அளிக்கப்படுவது பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனில், அதற்கு பதில் சொன்னால், இந்த கோட்பாட்டை இங்கே அமெரிக்காவில் பரப்பியதில் ஷாகாக்களின் பங்கு.

அனில் அனந்தசுவாமி: ஆம். எனவே இந்த ஆர்எஸ்எஸ் கோட்பாட்டை இளம் குழந்தைகளுக்கு போதிப்பதற்கு ஷாகாக்கள் ஒரு சிறந்த வழியாக உள்ளது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு வருவதற்குள், இஸ்லாமிய வெறுப்பையும் அவர்களின் மதம் மற்றும் அவர்கள் இருக்கும் சாதி அமைப்பு பற்றிய பெருமிதத்தையும் வளர்த்துவிடும் கதையாடலால் நஞ்சூட்டப்படுகிறார்கள். அது அவர்களிடையே உள்ள பகுத்தறிவு சிந்தனையை முற்றிலுமாக அழித்துவிடுகிறது.. அவர்கள் தங்கள் பல ஆண்டுகளை, பல வருடங்களை இந்த திராவக நச்சில் செலவிட்டிருக்கிறார்கள் என்பதால். அவர்களில் சிலர் மாறுவதற்கும், படித்து மாறுவதற்கு, உண்மையிலேயே மதச்சார்பற்றவர்களாக மாறுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். எனவே ஷாகாக்கள் ஆர்எஸ்எஸ்ஸுக்கு கோட்பாட்டைப் பரப்புவதற்கு ஒரு நல்ல வழியாகவும், பொது மக்கள் ஒரு மோசமான வழியாகவும் உள்ளது. நன்றி.

(தொடரும்)

 

 

Wednesday, June 26, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (119):

 

அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:

தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா

. ஹினா சுபேரி: பதிலுக்கு நன்றி. அதோடு தொடர்புடைய மற்றொரு கேள்வி உள்ளது. மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், தாழ்த்தப்பட்ட இந்தியர்கள் பெரும்பாலும் இந்துக்களா அல்லது பௌத்தர்களா? இந்து மதத்தில் முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட சாதியாகக் கருதப்படுகிறார்களா? இந்திய கிறிஸ்தவர்கள் இதே போன்ற பாகுபாட்டை எதிர்கொள்கிறார்களா? ஒரு நபர் கேட்கிறார், நான் பல இந்திய குழு உறுப்பினர்கள் மற்றும் பல கிறிஸ்தவ இந்தியர்களுடன் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறேன். எனது நிறுவனம் சமூக நீதி அடிப்படையில் சிறப்பாக செயல்படுகிறது. ஆகவே, நாம் நட்பாளராக இருக்க முடியும் என்பதை சக ஊழியர்களுக்கு நுட்பமாகத் தெரியப்படுத்துவதற்கு ஏதாவது முன்முயற்சியில் ஈடுபடலாமா அல்லது சிறப்பாக எதையாவது கொண்டு வர வேண்டுமா என்று நான் யோசிக்கிறேன்.

அனில் அனந்தசுவாமி: முந்தைய கேள்வியை எடுத்துக் கொள்கிறேன். என்ன செய்ய முடியும்? இந்தியாவில், குறைந்தபட்சம், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் உறுதியான செயல்முறை சட்டங்கள் உள்ளன. எனவே, குறைந்த பட்சம் அரசு வேலைகள் என்று வரும்போது, ​​பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு நல்ல பிரதிநிதித்துவம் உள்ளது. உயர் பதவிகள் என்ற பொருளில் பதவி உயர்வுகள் வரும்போது, ​​அந்த சதவீதம் குறைவாக உள்ளது. எனவே மீண்டும், பாகுபாடுகளால் இவ்வாறு உள்ளது, வேறு என்ன தான் இல்லை. பெருமளவில் இந்தியப் பணியாளர்களைக் கொண்ட, குறிப்பாக இந்தியாவில் செயல்படும் நிறுவனங்களும், பெருமளவில் இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் பல அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களும், இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள இந்திய நடைமுறைச் சட்டங்களையும், அமெரிக்காவில் செயல்படும் சம வாய்ப்புச் சட்டங்களையும் கருத்தில் கொண்டு, இவற்றைப் பரிந்துரைக்கலாம். இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள சட்டங்களை இந்தியாவில் மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஏனெனில் அது சம வாய்ப்புச் சட்டங்களுடன் நன்றாகப் இணைக்கப்படக்கூடியதாக உள்ளது. இந்த பாகுபாடு பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், இந்த மக்களை சம நிலைக்கு கொண்டு வர, அவர்கள் உறுதியான நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும், இந்திய நிலத்தின் சட்டம், நிச்சயமாக, தனியார் துறைக்கு கட்டாயப்படுத்தப்படவில்லை, என்றபோதிலும் அவர்கள் தானாகவே நடைமுறைப்படுத்துவது மிகவும் சிறப்பாக இருக்கும்.

ஹினா சுபேரி: சலாவுதீன், அந்தக் கேள்விக்கு நீங்களும் பதிலளிக்க விரும்புகிறீர்களா? இது குறிப்பாக தாழ்த்தப்பட்ட தலித்துகளைப் பற்றிய கேள்வியா? அப்படியானால், இந்த பாகுபாட்டில், எந்த கிறிஸ்தவ இந்துக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதை நீங்கள் பார்க்கிறீர்களா? அதைப் பற்றி ஏதேனும் வழக்கு ஆய்வுகளில் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது ஒரு சிவில் உரிமை அமைப்பாக, நாங்கள் அறிந்த ஒரு விஷயம், மக்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள், உங்களிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன். எனவே நீங்கள் இவற்றைக் கேட்டிருக்கலாம். மற்றொரு கேள்வி உள்ளது, ஒருவேளை, அது உங்களுக்குத் தொடர்புடையதாக இருக்கலாம். பல பெரிய அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் கால் தடம் பதித்துள்ளன. உண்மையில், அமெரிக்காவில் வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு இந்தியா மூலம் செய்யப்படுகிறது. அங்கு ஹிந்துத்துவா சார்பு செயல்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சலாவுதின்: ஆம், இல்லை. முதல் கேள்விக்கு, பதில் ஆம் என்று தான் கூறுவேன்.

 (தொடரும்)

 

 

Tuesday, June 25, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (118):

 

அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:

தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா

அனில் அனந்தசுவாமி: இவை அனைத்தும் மத நூல்களில் உள்ளன. சமஸ்கிருத உரைகளை ஒரு சூத்திரன் கேட்டால் அவனது காதுகளில் ஈயத்தை ஊற்ற வேண்டும் என்று அவர்கள் பேசுவதற்கு மத அனுமதி உள்ளது. அந்த வகையான விஷயங்கள். சூத்திரன் சமஸ்கிருத உரைகளை அல்லது வசனங்களை உச்சரித்தால், அவனது நாக்கை வெட்ட வேண்டும். பிராமணன் ஒரு சூத்திரப் பெண்ணுக்கு ஏதாவது செய்தால் ஒன்றும் இல்லை. எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் சூத்திரன் ஒரு பிராமணப் பெண்ணுடன் உடலுறவு கொண்டால், அவன் கொல்லப்பட வேண்டும். எனவே இவை அனைத்தும் மத நூல்களில் உள்ளன, இது இந்து மதத்திலிருந்து இந்தியா முழுவதும் அவர்களின் ஹிந்துத்துவ திட்டத்தின் மூலம் தெற்காசியா வரை பரப்பப்படுகிறது. இப்போது அவர்கள் அதை அமெரிக்காவிற்கு கொண்டு வந்து உலகளாவிய பிரச்சனையாக மாற்ற விரும்புகிறார்கள். எனவே நாளை, 100 ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் இந்த விஷம் பரவியவுடன், அவர்கள் சொல்வார்கள், ஐயோ, ஜாதி என்பது உலகளாவிய பிரச்சனை. அதனால் அவர்கள் எப்போதும் பிரச்சனைக்கு பொறுப்பேற்று அதைத் தீர்வு காண்பதற்கு பதிலாக, அதற்கு தாங்கள் காரணமல்ல என துடைத்து முழுகி கை கழுவுவதற்கான முயற்சிகளைத்தான் எப்போதும் செய்து வருகிறார்கள். அவர்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. ஜாதி அமைப்பின் மூலம் தங்களுக்குக் கிடைத்த நன்மைகளை நிரந்தரமாக்க விரும்புகிறார்கள். நாம் கல்வித் துறையைப் பற்றிப் பேசியது போல், முழு ஜாதி அமைப்பிலும் பிராமணர்கள் மட்டுமே படிக்க முடியும். மற்றவர்களுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. எனவே நீங்கள் இன்று கல்வித்துறை பற்றி பேசும்போது, ​​அல்லது ஆங்கிலேயர்கள் வந்த போது, ​​அவர்கள்தான் முதலில் ஆங்கிலம் கற்றுக்கொண்டார்கள். இன்று, முழு கல்வித்துறையும் பிராமணர் மற்றும் சில பிற சாதியினரின் 10 சதவீதத்தினரின் தனிக்காடாக உள்ளது.

மற்றவற்றில், நான் சொன்னது போல், அந்த முதல் நான்கு ஐஐஎம்களில் ஒரே ஒரு முஸ்லிம் பேராசிரியர் மட்டுமே இருக்கிறார். பட்டியலின சாதியினரில் 10 பேர் மட்டுமே உள்ளனர். எனவே, அவர்கள் இந்த சாதியப் பிரிவினையை நிலைநிறுத்த விரும்புகிறார்கள், நல்லதைத் தாங்களே வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் அவர்களுக்கு நிறைய ஆதாயங்கள் உள்ளன. மற்றவற்றைப் பொருத்தவரை, சாதியை ஹிந்துத்துவ நிகழ்வு என்று சொல்ல முடியாது ஓ, முஸ்லீம்களுக்கும் பிரச்சனை இருக்கிறது, பிறகு மற்றவர்களுக்கும், ஜைனருக்கும் பிரச்சனை இருக்கிறது என்று எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். நீங்கள் எங்கள் மத சுதந்திரத்தில் அத்துமீறுகிறீர்கள் என்பார்கள். இதுதான் இந்து அமெரிக்க அறக்கட்டளையின் - HAF நிலைப்பாடு. இதெல்லாம் இந்து பிரச்சனை, அவர்களின் புராணங்கள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் பல்வேறு சாஸ்திரங்களில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்துக்களின் பிரச்சனை.

ஹினா சுபேரி: உங்கள் இருவருக்கும் ஒரு கேள்வி.சம வாய்ப்புச் சட்டங்களில் ஜாதிப் பிரச்சனைகளை எப்படிக் கையாளுவது? சட்டமியற்றும் மட்டத்தில் எத்தகைய அம்சங்கள் இதற்கான சாத்தியப்பாட்டை அனுமதிக்கும்? எனவே நீங்கள் அதற்கு முதலில் பதிலளிக்க விரும்பினால்.

சலாவுதின்: இது ஒரு சிறந்த கேள்வி. மேலும், உங்களுக்குத் தெரியும், இதைப்பற்றி இன்னும் அதிகமாக நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாக உள்ளது, நியூ ஜெர்சியிலும் இங்கு நாங்கள் பரிசீலித்து வருகிறோம், இது பதிலின் ஒரு பகுதி மட்டுமே, உண்மையில் முழு பதில் அல்ல, ஆனால், இஸ்லாமோஃபோபியா போன்ற விஷயங்களை நாங்கள் வரையறுக்கிறோம், எடுத்துக்காட்டாக, மற்ற பிற சொற்கள், யூத எதிர்ப்பு என்பது நாடு முழுவதும் நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது. பல அரசுகள் யூத-எதிர்ப்பு பாகுபாட்டிற்கான வரையறைகளை ஏற்றுக்கொண்டன, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் முஸ்லீம்-எதிர்ப்பு சொல்லாட்சிகளை வரையறுக்க வேலை செய்து வருகின்றன. எனவே இந்த வரையறைகளிலும் சாதி அமைப்பில் இருந்து வரும் பாகுபாடு கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும் என்பது என் கருத்து. புத்தகங்களில் இந்த விஷயங்களை வரையறுக்கும் சட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பது ஒரு விஷயம். பின்னர், அதாவது, நாம் பாகுபாடுகளைப் பற்றி பேசும்போது, ​​வெளிப்படையாக அது இனம், இனக்குழு, மதம், பாலினம், முதலியனவாக இருக்கலாம். ஜாதி என்பது பலருக்கு குறிப்பாக அமெரிக்கர்களுக்கு அந்நியமானதாக இருந்தாலும், பலரது வாழ்க்கையை, குறிப்பாக, இந்தியாவில் வெளிப்படையாகப் பாதிக்கிறது. நிச்சயமாக, இங்கே அமெரிக்காவிலும் வெளிப்படையாக பாதிக்கிறது. எனவே, சட்டத்தில் ஜாதியின் மொழியை ஏற்றுக்கொள்வது, மற்றும் பிற வகையினங்களை ஏற்றுக்கொள்வதும் நமது அடுத்த கட்ட நகர்வுகளில் கருத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

 

 

 

 (தொடரும்)

 

Monday, June 24, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (117):

 

அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:

தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா

ஹினா சுபேரி: பார்வையாளர்களில் ஒருவர் இந்த கேள்வியைக் கேட்டுள்ளார், மேலும் இது எனது கேள்விகளிலும் ஒன்றாகும், அனில் இதற்கு பதிலளிக்கவேண்டும் என  விரும்புகிறேன், சாதியைப் பற்றி பேசும்போது நாம் எதைப் பற்றி பேசுகிறோம்? ஏனெனில் இந்து அமெரிக்கன் அறக்கட்டளை சாதி என்பது ஒரு இந்தியப் பிரச்சினை என்பதை அடிக்கடி மறுத்து வருகிறது, இது தெற்காசிய பிரச்சனை என்று கூறுகிறது. முஸ்லிம்களிலும் சாதி அமைப்பு உள்ளது, மற்ற சமூகங்களிலும் சாதி அமைப்பு உள்ளது. இது தெற்காசிய பிரச்சனை, இது குறிப்பாக இந்து அல்லது ஹிந்துத்துவ பிரச்சனை அல்ல.  இதைப் பற்றி பேசுவது மிகவும் சிறப்பாக இருக்கும், ஆனால் தீமைக்கான மூல காரணமான ஆர்எஸ்எஸ் பற்றி நாங்கள் இப்போது பேசவில்லை. எங்கள் கடந்த அமர்வுகளில், நாங்கள் ஆர்எஸ்எஸ் பற்றி மிகவும் ஆழமாகப் பேசியுள்ளோம், அதனால்தான் நாங்கள் அதைப் பற்றி அதிகம் பேசவில்லை. ஆர்எஸ்எஸ் என்றால் என்ன, இங்குள்ள ஹெச்எஸ்எஸ்ஸுடன் அவர்களுக்கு என்ன தொடர்பு என்பது பற்றியும், விஹெச்பி என்ற மற்ற அமைப்பும் அமெரிக்காவில் இயங்கும் பிற அமைப்புகளைப் பற்றியும் மக்களுக்குத் தெரியும் என்று நாங்கள் கருதுகிறோம். அவை நிறைய உள்ளன. பல பல பெயர்கள் உள்ளன, அவற்றின் சரியான வலைப்பின்னல்களை குறிப்பிடுவது கடினம்... எனவே, அனில், அதை எங்களுக்காக நீங்கள் தெளிவுபடுத்தவேண்டும்.  நான் கருத்துரைக்கு சொல்ல விரும்புகிறேன், சகோதரர் ஷேக் அலி முஸ்லீம் சமூகங்களில் உள்ள சாதிய மதிப்பீடுகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அத்தகைய பாரபட்சம் இஸ்லாத்தில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன். தெற்காசியாவைச் சேர்ந்த முஸ்லிம்கள் சாதி அடிப்படையிலான வேறுபாட்டையும் மற்றவர்களிடையே மேலாதிக்கத்தையும் கடைபிடிக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. நான் வளரும் பருவத்தில் இதை பற்றிக் கேள்விப்பட்டதில்லை, நான் அமெரிக்காவிற்கு வந்ததிலிருந்து தான் கேள்விப்பட்டேன், இது மிகவும் பிரச்சனைக்குரியது, மக்கள் விசித்திரமான விஷயங்களைச் சொல்வார்கள், ஓ, நீங்கள் ராஜபுத்திரரா? என்பது போன்ற விசயங்களைக் கொண்டு வருவார்கள். நான் இதற்கு முன்பு அவற்றைக் கேட்டதில்லை, ஆனால் நான் அமெரிக்காவிற்கு வந்த பின் அவற்றைக் கேட்டேன், இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. எனவே நீங்கள் அதைப் பற்றி பேச முடிந்தால்.

அனில் அனந்தசுவாமி: ஆம், நிச்சயமாக. எனவே வேறு எந்த மதத்திலும் இல்லாத வகையில் இந்து மதத்தின் மத நூலில் ஜாதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே இது அடிப்படையில் ஒரு இந்துப் பிரச்சனை, இந்தியப் பிரச்சனை இப்போது தெற்காசியப் பிரச்சனை என்று அவர்கள் அழைப்பது போல் பரவி வருகிறது. அவர்கள் அதை உலகளாவிய பிரச்சனையாக மாற்ற விரும்புகிறார்கள், அதனால் பின்னர் அவர்கள் இதை ஒரு உலகளாவிய பிரச்சனை என்று சொல்லலாம் அல்லவா. ஆனால் அது எங்கிருந்து உருவானது? இது அவர்களின் மத நூல்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அவர்களின் மத உரையில் இருந்து வருகிறது, அதில் பிராமணன் பிரம்மாவின் வாயிலிருந்து பிறக்கிறான், க்ஷத்திரியன் தோள்பட்டை வழியாக பிறக்கிறான் என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் அவர்களின் மத நூல்களில் உள்ளன. அவர்களின் மற்ற மத நூல்களைப் பற்றி நாம் பேசினால், அதில் தண்டனைகள் எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். எனவே ஜாதியில் பிராமணன், க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று அவர்கள் அழைப்பது போல் அந்த நான்கு வருணங்கள் உள்ளன. மேலும் தீண்டத்தகாதவர்கள், பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடியினர், உண்மையில் அந்த நான்கு வருணங்களுக்கு வெளியே உள்ளனர். எனவே அவர்களின் சொந்த வரையறையின்படி பட்டியலின சாதியினரும், பட்டியலின பழங்குடியினரும் இந்துக்களாகக் கூட இல்லை. இப்போது இந்தியாவில் அனைவரையும் இந்து என்று அழைக்கும் ஒரு பெரிய திட்டம் உள்ளது. இது ஆர்எஸ்எஸ் திட்டம். இருப்பினும், இந்தியா மிகவும் பிளவுபட்டுள்ளது, இந்து மதத்தை நிறுவியவர் எவரும் இல்லை.

 (தொடரும்)

 

Sunday, June 23, 2024

பாட்டி சொல்லைத் தட்டாதே (116):

 

அமெரிக்காவில் செயல்படும் “ஜஸ்டிஸ் ஃபார் ஆல்” (Justice for all) அமைப்பின் இணையவழிக் கருத்தரங்கம்3:

தலைப்பு: அமெரிக்க பணியிடங்களில் ஹிந்துத்துவா

சலாவுதீன்: உண்மையில், உங்களுக்குத் தெரியும், நிட்யோ வழக்கில் அந்த  மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்டை  பகிர்ந்த தனிநபரே, தன் பெயரை வெளியே தெரியப்படுத்தவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏனெனில் அவர்கள் தானே முன்வர பயப்படுகிறார்கள், அதனால் அந்த நபருடன் தொடர்புகொள்வது கூட கடினமாக இருந்தது. நாங்கள் அவரின் நண்பருடன் பேச வேண்டியிருந்தது, எனவே அதை கடந்து செல்வது மிகவும் கடினமான தடையாகவும், மிகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது, அது பிரச்சினையை மிகவும் எச்சரிக்கைக்கு உரியதாக ஆக்குகிறது. எனவே இது நாம் உரையாற்றவேண்டிய ஒரு விஷயம். மேலும் இதுபோன்ற அனைத்து வகையான விசயங்களையும் எங்களிடம் தெரிவிப்பதை வரவேற்கிறோம். எனவே நீங்கள் எங்கள் நியூஜெர்சி அலுவலகம் அல்லது பிற பராமரிப்பு அலுவலகங்களை அழைக்கலாம், தயவுசெய்து எங்கள் அலுவலகத்தை அழைக்கவும், உங்கள் கதையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும், நாங்கள் உங்களுடன் நெருக்கமாக இருந்து செய்யவேண்டியதை செய்வோம்.

எந்தக் காரணத்தினாலேனும் உங்கள் வழக்கை எங்களால் எடுத்துக் கொள்ள முடியாவிட்டால், நாங்கள் அரசுடனும், அதன் முகமை அமைப்புகளுடனும் தொடர்புகொள்ளமுடியும், சிவில் உரிமைகளுக்கான பிரிவு என்பது குறிப்பாக மக்களுடன் வேலை செய்யக்கூடிய துறையாகும். ​​நிட்யோ வழக்கைப் பொறுத்தவரை, அவ்விசயம் முதலில் நடந்தபோது, ​​நாங்கள் அந்த பிரச்சினை ஒரு மூன்றாம் நபரால் விசாரணை செய்யப்படவேண்டும் என்று நிட்யோவைக் கேட்டோம், அது நாங்கள் கேட்ட ஒரு கோரிக்கை. இரண்டாவது கோரிக்கை, இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டதற்கான மன்னிக்கவும், அந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம். பின்னர் நாங்கள் பன்முகத்தன்மையுடைய தணிக்கையையும் கேட்டோம், அதை நாங்கள் பன்முகத்தன்மையான, சமத்துவமான, அனைவரையும் உட்சேர்க்கக்கூடிய தணிக்கை என்று அழைக்கிறோம், இதை மூன்றாம் தரப்பினரும் நடத்த வேண்டும் என்று நாங்கள் கேட்டோம்.

இது நிறுவனத்தின் கட்டமைப்பை வெளிப்படுத்தும், அவர்கள் யாரை வேலைக்கு அமர்த்துகிறார்கள், அவர்களின் உயர்ந்த பதவிகளில் யார் வேலை செய்கிறார்கள் விண்ணப்பச் செயல்பாட்டில் அவர்கள் யாரை நிராகரிக்கிறார்கள், என்பது தெரியவரும். இவற்றைச் செயல்படுத்துவது மிகவும் கடினம். அதனால்தான் நாங்கள் அதைச் செய்ய மூன்றாம் தரப்பினரைக் கேட்டோம், முதலில் நிட்யோ ஒத்துழைத்தது, ஆனால் இப்போது அவர்கள் ஒருவிதத்தில் விலகிவிட்டார்கள் என்று தோன்றுகிறது, மேலும் அவர்கள் அதிலிருந்து தப்பிக்க முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த நியூஜெர்சி அட்டர்னி ஜெனரல் அலுவலகம் இந்த வழக்கை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்பதை நாம் இப்போது பார்க்கிறோம். எனவே அவர்கள் இது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர், நாங்கள் நிட்யோ அலுவலகத்துடனும், அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துடன் தொடர்பில் உள்ளோம்.

விசாரணை நன்றாக நடக்கிறதா என்பதை உறுதிப்படுத்த வாரந்தோறும் தொடர்பு கொள்கிறோம். ஆம், நாங்கள் அவர்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை தொடர்ந்து வழங்குகிறோம். எனவே, பல்வேறு தொலைபேசி அழைப்புகள் பற்றிய தகவல்கள், வழக்குகள், அதைப் போன்ற பிற வழக்குகள் பற்றிய தகவல்களையும் நாங்கள் அடிக்கடி பெறுகிறோம், இது ஒட்டுமொத்த விசாரணைக்கு பங்களிக்கும். எனவே நாங்கள் இந்த முகமை அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு, சாத்தியமான வழக்குகளில் பயன்படக்கூடிய பல்வேறு ஆதாரங்களை வழங்க உள்ளோம். ஆம், அது நடந்து கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் எங்கள் அலுவலகத்தை அழைக்குமாறு அனைவரையும் ஊக்குவிப்பேன், இதன்மூலம் உங்கள் வழக்கை உங்களுடன் விவாதிக்கலாம் மேலும் செயல்பாட்டிலுள்ள பல்வேறு காரணிகளைப் பற்றி மேலும் அறியலாம். வழக்கைப் பற்றி நாங்கள் மேலும் அறிந்துகொள்ளும்போதும் வழக்கறிஞர்களுடனும், தேசிய அலுவலகத்துடனும் நாங்கள் விவாதித்தபோதும், ​​நாங்கள் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளுக்கான தேர்வுகளை வழங்கலாம். பல சந்தர்ப்பங்களில், பல்வேறு சாத்தியங்கள் உள்ளன, அதாவது, இது வழக்கைப் பொறுத்தது, ஆனால் குறைந்தபட்சம் எங்களுடன் உரையாடுங்கள், பின்னர் நாங்கள் உங்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை முன்வைப்போம், நீங்கள் விரும்பினால், நாங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்வோம். ஆனால் தயவுசெய்து தயங்காதீர்கள், அழைக்கவும். நாம் உறுதியாக எழுந்து நின்று நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம், அது நீதிமன்றங்களில் இருந்தாலும் சரி, சட்டத்திற்கு எதிராக இருந்தாலும் சரி அல்லது வேறுவிதமாக இருந்தாலும் சரி.

 

(தொடரும்)

பொம்மைகளின் புரட்சி (123)

  காலையில எல்லாருமே லேட்டா தான் எந்திரிச்சாங்க… இன்னிக்கு தாத்தா தான் பழக்கடைக்கு போகனும், அதுனால யம்மு பாட்டிக்கு உதவி பண்ணிக்கிட்டே   தாத்...