5 கண்டங்களில் உள்ள 133 நாடுகளில்
வாழும், வேலை செய்யும், போராடும் 10.5 கோடி தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
போர்க்குணமிக்க, வர்க்க சார்புக் குரலான உலக தொழிற்சங்க கூட்டமைப்பு, 1886 இல் சிகாகோவில்
நிகழ்ந்த தொழிலாளர்களின் போராட்டத்தின் 137வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. தொழிலாள
வர்க்கத்தின் நீடித்த மைல்கல்லாகவும், தொழிலாளர் உரிமைகள், சமூக பாதுகாப்பு, அனைவருக்குமான
இலவச பொது சுகாதாரம்/மருத்துவம், கல்வி, கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றுடன் நிலையான வேலைக்கான
இன்றைய நாளையப் போராட்டங்களுக்கு ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக அது திகழ்கிறது.
இப்போதெல்லாம் முதலாளித்துவத்தின்
நெருக்கடியானது உலகளவில் நீள அகலத்தில் ஆழமடைந்து
வருகிறது, இதன் விளைவாக ஜனநாயக மற்றும் தொழிற்சங்க உரிமைகள் வலுவந்தமாக மீறப்படுகின்றன,
வேலை, வாழ்க்கை நிலைமைகள் சீரழிந்துள்ளன, சமூக சமத்துவமின்மை, வறுமை, சுரண்டல் ஆகியவை
கடுமையாக விரிவடைந்துள்ளன. பெரும் மூலதனமும் அதன் அரசியல் பிரதிநிதிகளும் முதலாளித்துவ
நெருக்கடியின் சாக்குப்போக்கைப் பயன்படுத்தி, வேலைநிறுத்தத்திற்கான உரிமை, போராட்ட
உரிமை, அமைப்பாக்க உரிமை போன்ற மிக அடிப்படையான ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகளைக் கூட
தாக்கியுள்ளனர். நெருக்கடியின் விளைவுகளை தொழிலாள வர்க்கம், ஓய்வூதியம் பெறுவோர், விவசாயிகள்,
சுயதொழில் செய்யும் ஏழைகளின் தோள்களுக்கு மாற்ற அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும்
செய்கிறார்கள்.
கட்டுப்பாடற்ற விலை உயர்வு; குறிப்பாக
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அத்துடன் "ஆற்றல் பற்றாக்குறை", ஊதியத்தை
குறைப்பதற்கும், இலாபங்களைப் பாதுகாத்து அதிகரிப்பதற்குமான மற்றொரு வழியாகும், இதன்
விளைவாக வறுமை மேலும் அதிகமாகி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைந்துள்ளது. அவர்களின்
நெருக்கடிக்கான கட்டணத்தை மக்களும், தொழிலாளர்களுமே செலுத்த வேண்டும் என்று அவர்கள்
மீண்டும் விரும்புகிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் இந்த கட்டணத்தை ஏற்கத் தயாராக இல்லை.
இந்தச் செய்தி மேலும், மேலும் அதிகமான பணியிடங்களில் இருந்தும், பல நாடுகளில் இருந்து
சத்தமாகவும் தெளிவாகவும் கேட்கிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு ரோமில்
நடைபெற்ற சமீபத்திய 18வது மாநாட்டின் போர்க்குணமிக்க உலகத் தொழிற்சங்கங்களின்
கூட்டமைப்பின் (WFTU) துணை அமைப்புகள் அனைத்து மட்டங்களிலும் உள்ள தொழிலாளர்களின் ஊதியம்,
வேலை வாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் சார்ந்த சமகாலத் தேவைகளை
நிறைவு செய்யக் கோரி இந்தப் போராட்டங்களில் முன்னணியில் உள்ளன. தனியார்மயத்திற்கும்,
தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கும் எதிரான எங்கள் எதிர்ப்பை வலுப்படுத்தி வருகிறோம்.
போராடும் பெண் தொழிலாளியின் பக்கம்
நிற்கிறோம், வேலையிலும், சமூகத்திலும், வாழ்விலும் சம உரிமைக்காகப் போராடும்
அவர்கள் இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். அதே திசைவழியில், முதலாளித்துவ நெருக்கடியின்
முதல் பலியாக இருக்கும் இளைஞர்களுக்கும், மலிவான தொழிலாளர்களாக சுரண்டப்படும் புலம்பெயர்ந்தவர்களுக்கும்
ஆதரவாக நாங்கள் எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களுக்கு
கண்ணியமான வருமானம், வேலையில்லாதவர்களுக்கு முறையான வேலை, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு
கண்ணியமான ஓய்வூதியம் ஆகியவற்றைக் கோரி, தொழிலாளர் வர்க்கத்தின் பாதிக்கப்படக்கூடிய
பகுதிகளுடன் தோளோடு தோள் நிற்கிறோம். மேலும் நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டிய வழக்கமுறைமைகளை
வெற்று வார்த்தைகளாக்கி விடாமல் அனைத்து தொழிலாளர் உரிமைகள், சுதந்திரங்களையும் உறுதி
செய்ய எங்கள் போர்க்குணமிக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறோம். அரசின் அடக்குமுறையும், எதேச்சதிகாரமும் கூர்மைப்படுத்தப்பட்ட
போதிலும், கெடுவாய்ப்பாக, மூலதனத்தின் கட்டளைகளுடன் இணைந்த மஞ்சள் தொழிற்சங்கங்கள்,
சரணடைந்த தொழிற்சங்கத் தலைவர்களின் சமரசத்தன்மை அல்லது ஒத்துழைப்பையும் தாண்டி, இந்தப்
போராட்டங்கள் இடைவிடாமல், சளைக்காமல் தொடர்கின்றன.
கொள்ளைநோய் மற்றும் பொருளாதார
நெருக்கடியின் பின்விளைவுகளுக்கு மேலதிகமாக, உக்ரைனில் ரஷ்யாவுடனான அமெரிக்கா, நேட்டோ,
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏகாதிபத்திய போரின் விலையையும் தொழிலாள வர்க்கம் செலுத்த வேண்டும்
என்று முதலாளித்துவம் விரும்புகிறது. பாதிக்கப்பட்ட மக்களுடன் எங்களது உறுதியான சர்வதேச
ஒருமைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். உக்ரைனில் போருக்கு முடிவுகட்டவும், அனைத்து
ஏகாதிபத்தியப் போர்களும் அகற்றப்படவும், நேட்டோ மற்றும் அனைத்து இராணுவக் கூட்டணிகளை
களைத்து அகற்றவும், அணு ஆயுதங்களை ஒழிக்கவும் நாங்கள் கோருகிறோம். மக்கள் நிம்மதியாக
வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவும், தடையின்றியும், சுதந்திரமாகவும் அவர்களின்
நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் எங்கள் போராட்டத்தை நாங்கள் தீவிரப்படுத்துகிறோம்.
இறையாண்மையுள்ள, சுதந்திர நாடுகளில் வெளிநாட்டு ஏகாதிபத்திய நலன்களை மேம்படுத்துவதற்கான
வழிமுறையாக உள்ள பொருளாதாரப் போர்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளை நிறுத்த நாங்கள் போராடுகிறோம்.
சோசலிச கியூபாவிற்கு எதிரான குற்றவியல் தடைகள் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான
தொடர்ச்சியான குற்றங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கும் கோரிக்கைகளுடன்
போராடுகிறோம். நமது மிக சக்திவாய்ந்த ஆயுதங்கள் சர்வதேசியமும், ஒருமைப்பாடுமே. எந்த
தொழிலாளியும் தனிமையாக உணரக்கூடாது.
உலகத்
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (WFTU) 2023 சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு,
போராடும் அனைத்து தொழிலாளர்களுக்கும், தொழிலாள வர்க்கம், மக்களின் சமகாலத் தேவைகளை
நிறைவேற்ற, கண்ணியத்திற்கான தினசரிப் போராட்டத்தை அயராது தீர்க்கமாக நடத்தும் அனைத்து
போர்க்குணமிக்க தொழிற்சங்கங்களுக்கும் தனது அன்பான, சர்வதேசிய, போர்க்குணமிக்க வர்க்க
வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
வறுமை,
துன்பம், போர்கள், அகதிகள் உருவாக்கம் ஆகியவற்றின் மூல காரணத்திற்கு எதிராக; ஒவ்வொரு
மனிதனுக்கும் கண்ணியமான வாழ்க்கையையும், பணிச்சூழலையும் அளிக்கக் கூடிய நியாயமான மனிதனை
மையமாகக் கொண்ட சமுதாயத்தை, முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனமும், மனிதனை மனிதன் சுரண்டும்
அவலம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு
கண்டத்திலும், தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக, நமது சொந்த வர்க்க நலன்கள், தேவைகளை
நிறைவு செய்ய, எங்கள் பொதுவான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறோம். .
உலகத்
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முழக்கங்கள், பதாகைகளின் கீழ் அனைத்துலக தொழிலாளர்
தினத்தைப் போற்றுமாறு உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (WFTU) அனைத்து துணை அமைப்புகளையும்
நண்பர்களையும் நாங்கள் அறைகூவுகிறோம்:
Ø
சர்வதேச
ஒற்றுமை: தொழிலாள வர்க்கத்தின் ஆயுதம்
Ø
அவர்களின்
நெருக்கடிக்கு நாங்கள் பணம் கொடுக்க மறுக்கிறோம்
Ø
ஏகாதிபத்திய
முற்றுகைகளையும், பொருளாதாரப் போர்களையும் நிறுத்துங்கள்.

